annamalai bjp

எம்பி ஆகிறார் அண்ணாமலை? ஆந்திராவில் இருந்து அடித்துள்ள ஜாக்பாட்!

127 0

ஆந்திராவில் காலியாக உள்ள 4 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிகளில் ஒரு பதவியை அண்ணாமலைக்கு வழங்க பாஜக முடிவு செய்துள்ளது.

தமிழக பாஜக-வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை. தலைவர் பதவியில் இருந்து இவர் மாற்றப்பட்டது முதலே பெரியளவு பிரதிநிதித்துவம் இல்லாமலே இருந்து வருகிறார். தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலும் அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. தனது தந்தையின் உடல்நலத்தை காரணம் காட்டி அவரும் போட்டியிட விரும்பவில்லை என்று கூறிவிட்டார்.

ஆந்திராவில் காலியாகும் 4 ராஜ்யசபா எம்பி:

இந்த சூழலில், அண்ணாமலை ஆதரவாளர்களுக்கு தித்திக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. வரும் ஜுன் 21ம் தேதியுடன் 3 ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி-க்கள், ஒரு தெலுங்கு தேசம் எம்பி என மொத்தம் 4 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. ஆந்திராவில் தற்போது சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது.

சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் இந்த 4  மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவியும் தெலுங்கு தேசம் கட்சி வசமே செல்கிறது. இதையடுத்து, 2 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியை தெலுங்கு தேசம் கட்சியே வைத்துக்கொண்டு, மற்ற 2 மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கூட்டணி கட்சியான பாஜக மற்றும் பவன் கல்யாணின் ஜனசேனாவிற்கு வழங்க முடிவு செய்துள்ளது.

அண்ணாமலைக்கு எம்பி பதவி?

பாஜக-விற்கு வழங்கப்படும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அண்ணாமலைக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை போட்டியிடாதது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிருப்தியையும் உண்டாக்கியது. இதனால், அவரது ஆதரவாளர்களை மகிழ்ச்சிவிக்கும் வகையிலும், அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு வழங்கும் வகையிலும் அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாஜக-விற்கு அந்த எம்பி சீட்டை தெலுங்கு தேசம் வழங்கினாலும், ஆந்திர பாஜக நிர்வாகிகள் அந்த எம்பி சீட்டை அண்ணாமலைக்கு தர ஒப்புக்கொள்வார்களா? அல்லது எதிர்ப்பு தெரிவிப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அண்ணாமலை தமிழ்நாடு மட்டுமின்றி பாண்டிச்சேரி, கேரளம் ஆகிய இடங்களிலும் பாஜக-விற்கு ஆதரவாக கடந்த தேர்தலில் பரப்புரையில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டாபோட்டி:

தெலுங்கு தேசம் கட்சி சார்பின் சார்பில் 2 மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் ஒரு பதவியை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷின் நண்பர் சனா சதீஷிற்கு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்ற ஒரு பதவியை பெறுவதற்கு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் இடையே மல்லுகட்டு நடந்து வருகிறது. அதேபோல, பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியிலும் எம்பி  பதவியை கைப்பற்ற கடும் போட்டி நடந்து வருகிறது.

Related Post

வியாழக்கிழமை சாய்பாபா வரலாறு….

Posted by - September 11, 2025 0
ஆரம்ப வாழ்க்கை சாய்பாபாவின் பிறந்த தேதி மற்றும் பிறந்த இடம் தெளிவாக தெரியவில்லை. 1838-ல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. அவரது மதம், குடும்பம் பற்றிய விபரம் மர்மமாகவே…

மாட்டு சாணத்தில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள்…மாதம் ரூ 30,000 வரை வருமானம் பார்க்கலாம்…!

Posted by - June 19, 2025 0
மாட்டு சாணங்களில் இருந்து செய்யப்படும் எடுக்கப்படும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை வைத்து ஒரு தொழில் அல்லது வர்த்தகம் துவங்குவதற்கு முன் அதற்கான சந்தை மற்றும் அதன் வர்த்தக…

ஆணுறுப்பில் 26 ஸ்டேபிளர் பின், மிளகாய் பொடி.. சித்ரவதை செய்து ரசித்த சைக்கோ தம்பதி – கேரளாவில் நடந்தது என்ன?

Posted by - September 16, 2025 0
கேரளாவில் இளைஞர்களை ஏமாற்றி வீட்டிற்கு வரவழைத்து அவர்களது ஆணுறுப்பில் ஸ்டேபிளர் பின் அடித்தும், மிளகாய் பொடி தூவியும் அவர்களை சித்ரவதை செய்த சைக்கோ கணவன் – மனைவியை…

முதலீட்டாளர்களே மாதத்தின் கடைசி நாளில் கவனிக்க வேண்டிய பங்குகள்..

Posted by - July 31, 2024 0
இந்திய பங்குச்சந்தைகளின் முக்கிய குறியீடான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய குறியீடு வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்ந்து வர்த்தகமாகின. இந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் மாருதி, எம்&எம்,…

மாநில அந்தஸ்து கோரி போராட்டம்: லடாக் கலவர பாதிப்பும் பின்னணியும்

Posted by - September 25, 2025 0
லே: ல​டாக்​கில் மாநில அந்​தஸ்து கோரி நேற்று நடை​பெற்ற போராட்​டத்​தில் கலவரம் வெடித்​தது. இதில் 4 பேர் உயி​ரிழந்​தனர். 60-க்கும் மேற்​பட்​டோர் காயம் அடைந்​தனர். காஷ்மீரில் இருந்து லடாக்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *