GENERAL NEWS“40 நாட்கள், 8 கட்ட தரையிறக்கம்! சந்திரயான் 3ன் நிலவு பயணம்! தரையிறங்கும் Vikram Lander!”

229 0

சந்திரயான்-3 விண்கலம் 40 நாட்கள் பயணத்தை முடித்து இன்று மாலை நிலவில் தரையிறங்குகிறது. நிலவில் சந்திரயான்-3 பத்திரமாக கால் பதிக்க முக்கியமான பத்து கட்டங்களை கடக்க வேண்டியுள்ளன. அவை என்னென்ன என்பதை தெரிந்துகொள்ளலாம். தற்போது நிலவில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் விக்ரம் லேண்டரை 7.4 கிலோமீட்டர் தொலைவுக்குக் கொண்டு வருவது தான் முதல் கட்டம்.

 

F4BqHJqaQAAdyMa

 

அப்போது லேண்டரின் வேகம் ஆயிரத்து 200 கிலோமீட்டர் அளவாகக் குறைக்கப்படும். அதில் இருந்து இரண்டாவது கட்டம் தொடங்கும். அப்போது லேண்டர் 7.4 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து 6.3 கிலோமீட்டராக கீழே இறக்கப்படும். அப்போது கிடைமட்டமாக இருக்கும் லேண்டர், தரையிறங்குவதற்கு வசதியாக, 50 டிகிரி கோணத்திற்கு சாய்வாகத் திருப்பப்படும். அதே நிலையில் 6.3 கிலோமீட்டர் தொலைவில் இருந்து 800 மீட்டர் தூரத்திற்கு குறைக்கப்படுவதே மூன்றாவது கட்டமாகும்.

 

chandrayaan 2

 

அடுத்த கட்டத்தில் லேண்டர் 150 மீட்டர் உயரத்திற்கு நிலவின் தரைப் பகுதியை நோக்கி கீழே கொண்டு வரப்படும். அப்போது லேண்டரில் உள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நிலவின் மேற்பரப்பில் உள்ள மேடு பள்ளங்களைத் துல்லியமாக கவனித்து, சமதளப் பரப்பைத் தேர்வு செய்யும். பின்பு தேர்வு செய்த பாதுகாப்பான இடத்தில் மெதுவாக தரையிறக்குவதே ஐந்தவாது கட்டமாகும். அறுபது மீட்டர் உயரத்தில் இருந்து 10 மீட்டர் உயரத்திற்கு லேண்டரை கீழே இறக்குவதுதான் ஆறாவது கட்டம்.

 

 

7வது கட்டத்தில் ராக்கெட் எஞ்சின்கள் நிறுத்தப்படும். எஞ்சின்கள் நிறுத்தப்பட்டவுடன் விண்கலம் 10 மீட்டர் உயரத்தில் இருந்து நிலவின் தரைப்பரப்பில் வேகமாக மோதாமல் இருப்பதற்காக லேண்டர் மிக மெதுவாக தரையிறக்கப்படும் கடைசி கட்டமாக நிலவில் தரையிறங்கிய லேண்டர் சுமார் 2 மணி நேரம் அதே நிலையில் நிற்கும். அதன்பிறகு லேண்டரில் இருந்து வெளியே வந்து பிரக்யான் ரோவர் இறங்கி ஆய்வை தொடங்கும்.

Related Post

பங்குச் சந்தை சரிவிற்குப்பின் கவனம் பெற்ற பங்குகள்.. இன்னைக்கு கவனிக்காம விட்ராதீங்க!

Posted by - August 6, 2024 0
அமெரிக்க, ஜப்பான் பங்குச் சந்தைகளின் வீழ்ச்சியை தொடர்ந்து இந்திய பங்குச் சந்தை கடும் இழப்பை ஆகஸ்ட் 5 அன்று சந்தித்தது. இந்நிலையில் இன்று சந்தையில் கவனம் பெறப்போகும்…

அமைச்சர் உதயநிதிக்கு தெலுங்கானா முதல்வர் கண்டனம்!

Posted by - April 20, 2024 0
சனாதன தர்மம் குறித்த அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த்…

மீனாட்சி அம்மன் கோவில் அருகில் ஷாரிக் தங்கி இருந்தாரா?- கர்நாடக தனிப்படை விசாரணை

Posted by - November 26, 2022 0
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மிக அருகில் ஷாரிக் 2 நாட்கள் தங்கி இருந்து உள்ளான். மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக…

அந்தமான் தீவுகளில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Posted by - July 10, 2023 0
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள காம்ப்பெல் விரிகுடாவின் தென்கிழக்கில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு…

அசாமில் மார்க்கெட்டில் தீவிபத்து- 150 கடைகள் சேதம்

Posted by - February 17, 2023 0
அசாம் மாநிலம் ஜோர்ஹாட் நகரின் மையப் பகுதியில் உள்ள சவுக் பஜார் மார்க்கெட்டில் நேற்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடைகள் நெரிசலாக இருந்ததால்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *