BUNKER-ல் பதுங்கிய பயந்தாங்கோலி.. பாக். பிரதமரை ஓடவிட்ட இந்தியா! ஷெபாஸ் ஷெரீப் கப் சிப்..

186 0

பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப், ராணுவ தளபதி முனீர் ஆகியோர் வீடுகளின் அருகே இந்தியா குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பகல்ஹாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலால் 25 இந்தியர்கள் நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததால் கொந்தளிப்பிற்கு ஆளான இந்தியா இந்த விவகாரத்தில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்தியா – பாகிஸ்தான் மோதல்:

இதையடுத்து, ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியது இந்தியா. இதில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், பதில் தாக்குதல் நடத்த முயற்சித்த பாகிஸ்தானை முறியடித்தது. மேலும்,  இந்தியா நேற்று இஸ்லாமாபாத்தில் தாக்குதல் நடத்தியது.

இந்த சூழலில், இந்தியா மீது பாகிஸ்தானின் ராணுவ விமானங்கள் தாக்குதல் நடத்த முயற்சித்த நிலையில் சுட்டு வீ்ழ்த்தப்பட்டது. இதையடுத்து, பாகிஸ்தானின் கராச்சி, இஸ்லாமாபாத், லாகூர், ராவல்பிண்டி உள்ளிட்ட பல இடங்களில் இந்தியா தாக்குதலை நடத்தி வருகிறது.

பாகிஸ்தான் பிரதமர், பாகிஸ்தான் ராணுவ தளபதி வீடு அருகே குண்டுவெடிப்பு:

கடற்படை, வான்படை, தரைப்படை என முப்படைகளும் சரமாரியாக பாகிஸ்தான் மீது தாக்குதலை நடத்தி வரும் நிலையில் இந்தியாவிற்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று கூறிய பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப்பின் வீடு அருகே இந்தியா நடத்திய தாக்குதலில் குண்டு வெடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் பாதுகாப்பாக பதுங்கு குழியில் பதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானின் பிரதமர் மட்டுமின்றி பாகிஸ்தான் நாட்டு ராணுவ தலைமை தளபதி அசிம் முனீர் வீடு அருகேயும் இந்தியா தனது தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், பாகிஸ்தான் ராணுவம் பீதியடைந்துள்ளது. பாகிஸ்தானை காட்டிலும் பன்மடங்கு பலம் வாய்ந்த இந்தியா கடல்வழியாக கராச்சியை தாக்கி வருவதாகவும், ஐஎன்எஸ் விக்ராந்த் மூலமாக பாகிஸ்தானின் கடற்படை தளம் உள்ளிட்ட பல்வேறு தளங்களை தாக்கியுள்ளது.

இந்தியா சரமாரி தாக்குதல்:

அதேபோல வான்படையும், ராணுவமும் இணைந்து ட்ரோன்கள் தாக்குதலை நடத்தி வருகின்றனர். எஸ்-400 ரக ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்திய இந்தியா ஏராளமான ட்ரோன்களையும் பாகிஸ்தான் மீது ஏவி தாக்குதலை நடத்தி வருகிறது. மேலும், இந்தியா மீது பதில் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானின் முயற்சியை வானிலே ஏவுகணைகளை வீழ்த்தி இந்தியா முறியடித்து வருகிறது.

இரு நாட்டு படையினர் இடையே மூண்டுள்ள இந்த போர் பதற்றத்தால் இரு நாட்டு மக்களும் பெரும் அச்சத்திற்கும், பீதிக்கும் ஆளாகியுள்ளனர். இந்தியா பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் பதுங்கியுள்ள பகுதிகளை மொத்தமாக சூறையாட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Post

கனடா காட்டுத்தீ.. பேரழிவை நினைவூட்டும் மஞ்சள் நிற புகையில் மூழ்கிய நியூயார்க்!

Posted by - June 8, 2023 0
கனடா காட்டுத்தீ காரணமாக நியூயார்க் நகர் முழுக்க மஞ்சள் நிற புகை மூட்டம் ஏற்பட்டது. காட்டுத்தீ காரணமாக அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் மிக மோசமான காற்று…

நாடு முழுவதும் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

Posted by - December 25, 2023 0
நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வேளாங்கண்ணியில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் திரளானோர் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர். நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில்…

பணியின்போது அரசு அதிகாரிகள் ஐ போன் பயன்படுத்த தடை – சீனா அதிரடி

Posted by - September 7, 2023 0
பீஜிங்: உலகின் முன்னணி செல்போன் நிறுவனமான அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்தால் தயாரிக்கப்படுபவை ஐபோன் மற்றும் ஐபேடு. சீனாவிலும் ஐ-போன் விற்பனை செய்யப்பட்டு வந்தது. சீனர்களில் பலரும்…

எலிகள் மூலம் பரவும் ஒமைக்ரான் உருமாறிய கொரோனா- சி.எம்.சி. தலைமையிலான விஞ்ஞானிகள் ஆய்வு

Posted by - April 27, 2023 0
கொரோனா உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது எவ்வாறு பரவியது என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த 2021-ம்…

1200 அடி உயரத்தில் ஊசலாடிய கேபிள் கார் – 14 மணி நேரத்துக்கு பின் குழந்தைகள் உள்பட 8 பேரும் மீட்பு

Posted by - August 23, 2023 0
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ளது கைபர் பக்துன்வா பிராந்தியம். இது கரடுமுரடான மலைகளும், ஆழமான பள்ளத்தாக்குகளும், நதிகளும், சமநிலைகளும் நிறைந்த ஒரு பிரதேசம் ஆகும். இங்குள்ள பள்ளத்தாக்குகளைக்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *