dmk vs vck

திமுகவை சுத்துப்போட்ட விசிக- நடந்தது என்ன?

48 0

ஆற்றாமையால் அள்ளிவீசும் அவதூறுகள் அசைத்திடாது, அமைதியாய் கடப்பது அநாகரீகம் தவிர்க்கவே. அநீதி தொடர்ந்து, அனைத்தும் உரைத்தால் அணைக்க முடியா அனலில் தகித்து போவீர்- விசிக

ஆற்றாமையால் அள்ளிவீசும் அவதூறுகள் அசைத்திடாது, அமைதியாய் கடப்பது அநாகரீகம் தவிர்க்கவே என்று விசிக பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி சாடியுள்ளார். விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.பி.யும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

தவெக அரசில் இடம்பெற்ற விசிக, ஐயூஎம்எல்

ஆளும் தவெக அரசுக்கு, வெளியில் இருந்து ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்த விசிக, எதிர்பாராத விதமாக தவெக கூட்டணியில் இணைந்து அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளது. விசிக துணை பொதுச் செயலாளர் வன்னியரசு, சமூக நீதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

அதேபோல இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலச் செயலாளர் ஷாஜஹான், தமிழ்நாட்டு அரசின் சிறுபான்மையின நலத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

முகம் சுளிக்க வைத்த ஆ.ராசா

இந்த நிலையில் இதனை விமர்சித்து ஆ.ராசா முகம் சுளிக்க வைக்கும் வகையிலான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்தார். அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “முன் ‘ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’, மூட சாதியை நொறுக்க வேண்டிய ‘சிறுத்தையும்’, வெறும் ‘விசில்’ சத்தத்திற்கு முட்டுக் கொடுக்குமென்றால்; பூ முடித்தவனை புறந்தள்ளி, புணர்ச்சிக்கு வேறிடம்  தேடுவதில் தவறில்லை!

பெரியாரின் ‘காலதேச வர்த்தமான’ த்திற்கு காத்திருப்போம் ;  என்றாலும்  களமாடுவோம் ! வெற்றி நமக்கே!!” என தெரிவித்திருந்தார். இது விசிக கட்சியினர் பெண்கள் கடுமையாக விமர்சித்தனர்.

இதற்கிடையில், விசிக பொருளாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான திருப்போரூர் எஸ்.எஸ்.பாலாஜி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், ’’அதிகாரம் எளியவர்க்கு அதிலென்ன ஆத்திரம்?

ஆற்றாமையால் அள்ளிவீசும் அவதூறுகள் அசைத்திடாது, அமைதியாய் கடப்பது அநாகரீகம் தவிர்க்கவே.

அநீதி தொடர்ந்து, அனைத்தும் உரைத்தால் அணைக்க முடியா அனலில் தகித்து போவீர்’’ என்று எஸ்.எஸ்.பாலாஜி சாடி உள்ளார்.

 

அதேபோல விசிகவைச் சேர்ந்த ரவிக்குமார் எம்.பி. திருக்குறள் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்

‘’இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ

வன்சொல் வழங்கு வது”

அதாவது, “இனிய சொற்கள் தனக்கு இன்பம் தருவதை உணர்ந்து அறிந்த ஒருவன், அதையெல்லாம் விட்டுவிட்டுப் பிறரிடம் கடுஞ்சொற்களைப் பேசுவது எதனால்? என்ன பயன் கருதி? என்று அர்த்தம் கொண்ட குறல் இதுவாகும்.

Related Post

உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை – மகன்! காரணமான முகுந்தன் யார்?

Posted by - December 28, 2024 0
விழுப்புரத்தில் இன்று பாமக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸும் தலைவர் அன்புமணியும் கலந்து கொண்டு பேசினர். சென்னை பனையூரில் எனக்கு ஒரு அலுவலகம்…

’’நான் நிலம் வாங்கியது உண்மைதான்.. விரைவில் இன்னொரு நிறுவனம்’’- அண்ணாமலை பரபர விளக்கம்!

Posted by - September 12, 2025 0
இந்த நிலத்தை நான், என்னுடைய மற்றும் என் மனைவியுடைய சேமிப்பு மற்றும் கடன் ஆகியவற்றைப் பயன்படுத்தி வாங்கியுள்ளேன்.- அண்ணாமலை இயற்கை விவசாய நிலம் வாங்கியது உண்மை என்று…

பாஜகவுடன் இன்றைக்கும், என்றைக்கும் கூட்டணி இல்லை: அதிமுக தீர்மானம் முழு விவரம்..

Posted by - September 25, 2023 0
இன்று முதல், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிக் கொள்கிறது என்று அதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வதாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவின்…
Generated Image January 07 2026 5 03PM 1

ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?

Posted by - January 7, 2026 0
அரசுக்கு அழுத்தம் தருகின்ற வகையில் வலுவான போராட்டத்தினை உடனடியாக அறிவித்து இந்த தொகையினை துரிதமாக பெற கடுமையான போராட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமிழ்நாடு அரசு…

திமுக என்ன ஆகும் என்பதையும் கணித்து வைத்துள்ளேன் – வி.கே.சசிகலா பரபரப்பு பேட்டி

Posted by - March 21, 2024 0
2026 தேர்தல் என்பது எங்களுக்கும், திமுகவுக்கும் நேரடி போட்டியாக இருக்கும். அந்த தேர்தலில் நான் யார் என்பதைக் காட்டுவேன் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *