ஏது பாஜகவிற்கு ஆட்சியில் பங்கா? அதெல்லாம் கிடையாது – எடப்பாடி பழனிசாமி தடாலடி விளக்கம்

137 0

பாஜகவிற்கு ஆட்சியில் எல்லாம் பங்கு கிடையாது என, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.

பாஜக உடன் கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி என்று அமித் ஷா கூறவில்லை என, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக வெளிநடப்பு:

அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, கே.என். நேரு மற்றும் பொன்முடி ஆகியோர் மீது, அதிமுக சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கடிதம் வழங்கப்பட்டது. இன்று சட்டப்பேரவை அலுவல் தொடங்கியதுமே, தீர்மானத்தின் மீது விவாதம் நடத்த வலியுறுத்தினர். ஆனால், தீர்மானம் நீங்கள் கொடுத்துள்ளீர்கள். அது பரிசீலனையில் உள்ளது. இன்றைக்கு மற்ற அலுவல்கள் இருப்பதால், அதை விவாதத்திற்கு எடுக்க முடியாது” என அப்பாவு கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள், எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.

”அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லை”

சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ”அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, கே.என். நேரு மற்றும் பொன்முடி ஆகியோர் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. இந்து மதம் மற்றும் பெண்கள் தொடர்பாக அமைச்சர் பொன்முடி அநாகரீகமாக பேசியுள்ளார்” என கண்டித்தார்.

பாஜகவிற்கு ஆட்சியில் பங்கா?

தொடர்ந்து பாஜக உடனான கூட்டணியில் அதிகாரத்திலும் பங்களிக்கப்படுகிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்தபோது, “ கூட்டணியில் அங்கம் வகிப்போம் என்று கூறினோம்; கூட்டணி ஆட்சி என்று கூறவில்லை; நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் திமுகவுக்கு ஏன் எரிச்சல்? திமுகவுக்கு பயம். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்று அமித்ஷாவும்  கூறவில்லை; டெல்லிக்கு பிரதமர் மோடி, தமிழ்நாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி என்று அமித் ஷா கூறினார். பாஜக – அதிமுக கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் என்றே அமித் ஷா குறிப்பிட்டார். பாஜக உடனான கூட்டணி என்பது திமுகவிற்கு எதிரான வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்கானது மட்டுமே. பாஜகவுடன் கூட்டணி மட்டுமே கூட்டணி ஆட்சி கிடையாது. தேர்தலுக்கு ஒன்னும் ஓராண்டு உள்ளதால் அதிமுக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் சேரும்” எனவும் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.

Related Post

15 வருஷமா எங்கே? திராவிட நாய்கள் நேரடியாக பதில் சொல்லாது: சீமான் பரபரப்பு பேச்சு

Posted by - January 22, 2025 0
பாஜக சாதிவாரி கணக்கு எடுக்காது என்பது நன்றாகவே தெரியும். அப்புறம் எதுக்கு நீங்கள் அவர்களிடம் மாற்றிவிடுகிறீர்கள். என் பொம்மையைத்தான் திராவிட இயக்கத்தினரால் எரிக்க முடியும் என நாம்…

”மோன்தா” புயல், சென்னை, காஞ்சி, திருவள்ளூருக்கு ரெட் அலெர்ட், மிக கனமழை – வானிலை அறிக்கை

Posted by - October 27, 2025 0
TN weather Montha Cyclone Update: மோன்தா புயலின் தாக்கத்தால் தமிழ்நாட்டில் இன்று சென்னை உட்பட4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.…

10 அமைச்சர்களின் துறை மாற்றம்.. எந்த அமைச்சர் என்ன துறை?

Posted by - December 14, 2022 0
Tamilnadu Ministers department | 10 அமைச்சர்களின் துறைகளில் மாற்றம் செய்யப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது தமிழ்நாட்டின் 10 அமைச்சர்களின் துறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு…

ஆளுநரை சந்தித்த விஜய்! கைதான புஸ்ஸி ஆனந்த்.. தவெகவில் பரபரப்பு

Posted by - December 30, 2024 0
பொதுமக்களிடம் தவெக தலைவர் விஜய் எழுதிய கடிதத்தை வழங்கிய தவெக கட்சியினர் மற்றும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை போலீசார் கைது செய்தனர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி…

மறந்துட்டீங்களா முதல்வரே..! “மகளிர் கொள்கை” பேப்பரில் மட்டும் தான் இருக்கு, செயல் எங்கே?

Posted by - March 8, 2025 0
தமிழ்நாடு அரசின் பெண்களுக்கான கொள்கை திட்டம் அறிவித்து ஓராண்டகியும், அதை செயல்படுத்துவது தொடர்பாக இதுவரை ஒரு கூட்டம் கூட நடத்தப்படவில்லை. தமிழ்நாடு அரசின் பெண்களுக்கான கொள்கை திட்டம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *