கடனை அடைக்க கடன் கேட்கும் முகேஷ் அம்பானி…உலகளாவிய பணக்காரருக்கே இந்த நிலைமையா…?

227 0

Reliance Industries Seeking Big Loan – முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனம் மற்றும் உலகளாவிய அளவில் 100 ஆவது மிகப்பெரிய நிறுவனம் ஆக அறியப்படுகிறது, கிட்டதட்ட 3,47,362 பணியாளர்களை கொண்டு இயங்கும் ரிலையன்ஸ் நிறுவனம் சர்வதேச அளவில் பல தொழில்களை கையாண்டு வருகிறது, நிகழ் நிதி ஆண்டில் மட்டும் ரிலையன்ஸ் 120 பில்லியன் USD வருமானத்தை ஈட்டி இருக்கிறது.

அதில் நிறுவனத்தின் நிகர இலாபம் மட்டும் கிட்டதட்ட 10 பில்லியன் அமெரிக்க டாலர்களை நெருங்கலாம் என கூறப்படுகிறது, அதே சமயத்தில் கடந்த செம்படம்பர் 2024 நிலவரப்படி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகர கடன் என்பதும் 39.60 பில்லியன் டாலர்களாக இருக்கிறது, இது வட்டியை சேர்க்காமல் என்னும் போது வட்டியை சேர்த்தால் இன்னும் கடன் தொகை அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கிறது.

இந்த கடன் தொகை நிறுவனத்தின் நிகர வருமானத்தில் மூன்றில் ஒரு பங்காக இருக்கிறது, அதே சமயத்தில் நிகர இலாபத்தை விட 4 மடங்குகள் இருக்கிறது, இந்த நிலையில் தான் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஒரு நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது, அதாவது தொடர்ந்து இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக சரிந்து வருவதால், வங்கிகள் மிகப்பெரிய நிறுவனங்களிடம் இருந்து கடனை வசூலிக்க அழுத்தங்கள் கொடுத்து வருகின்றன.

இதில் ரிலையன்ஸ் நிறுவனமும் அடங்கும் என்பதால், ரிலையன்ஸ் நிறுவனம் செலுத்த வேண்டிய கடன் தொகைகளையும் வங்கிகள் தற்போது துரத்தி வருகின்றன, இதனால் ரிலையன்ஸ் நிறுவனம் வருகின்ற முதல் காலாண்டின் கடன் நிலுவைத் தொகையை அடைக்க பிற வெளிநாட்டு வங்கிகளிடம் இருந்து 25,500 கோடி கடன் வாங்க திட்டமிட்டு இருக்கிறதாம், கடன் பெறுவதற்கான முடிவும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என தெரிகிறது.

” ரிலையன்ஸ் தொடர்ந்து இந்திய வங்கிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதால் கொள்கை முடிவுகளில் மாற்றம் ஏற்படலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது “

Related Post

படிக்கும் காலத்தில் இது தேவைதானா என எதிர்ப்பு- கல்லூரி காதல் ஜோடி திருமணம் செய்துவிட்டு தற்கொலை

Posted by - August 21, 2023 0
திருப்பதி: ஆந்திரா மாநிலம், அன்னமய்யா மாவட்டம், செட்டேவாரி பள்ளியை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண். லதிகம் கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது வாலிபர். இருவரும் புங்கனூரில் உள்ள…

பிரதமர் மோடி நாளை மறுநாள் வருகை….

Posted by - April 6, 2023 0
பிரதமரின் வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. ஓட்டல்கள், தனியார் தங்கும் விடுதிகள் ஆகியவற்றில் போலீசார் தினமும் சோதனை மேற்கொள்கிறார்கள். சென்னை: பிரதமர்…

என்னுடைய 90 விநாடி பேச்சுக்கே காங்கிரஸ் பீதியாகி உள்ளது – பிரதமர் மோடி

Posted by - April 24, 2024 0
தனது 90 விநாடி பேச்சு காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக நடைபெறும்…

அடுத்த பிரச்சனை.. Jio, Airtel, Vi 10% விலை உயர்வு.. ரூ.299 பிளான் ரூ.329.. ரூ.349 பிளான் ரூ.384 ஆகுமா.. எப்போ?

Posted by - November 6, 2025 0
இந்தியாவின் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் ஆனது மற்றொரு சுற்று கட்டண திருத்தங்களுக்கு தயாராகி வருவதாக தெரிகிறது. ஏற்கனவே – பிஎஸ்என்எல் (BSNL) உட்பட அனைத்துமே, வேலிடிட்டியை குறைப்பது,…

இனிய தோழரை முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தி வழியனுப்பி வைப்போம்!”

Posted by - February 25, 2026 0
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு உடல்நிலையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருந்த நிலையில் இன்று பிற்பகல் காலமானார். “நல்லகண்ணு உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *