சென்னையால் வந்த வினை..! வெற்றிக்காக போராடும் ஆனந்த்?

120 0

தமிழக வெற்றிக் கழகத்தில் என்.ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா இடையே வெடித்துள்ள அதிகார மோதல், விஜய்க்கு தலைவலியாக மாறியுள்ளதாக பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

TVK Vijay TN Election 2026: விஜயிடம் அனுமதி பெறாமலேயே கூட்டணி அமைப்பது தொடர்பாக, மாவட்ட செயலாளர்களுடன் என்.ஆனந்த ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிகார மோதலில் தவெக..

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கும், தவெகவிற்கும் இடையே தான் போட்டி என, அக்கட்சியின் தலைவர் விஜய் தொடர்ந்து சூளுரைத்து வருகிறார். ஆனால், அந்த கட்சியில் நிலவும் அதிகார மோதலை தீர்ப்பதே அவருக்கு பெரும் பிரச்னையாக வெடித்துள்ளதாக கூறப்படுகிறது. தலைமையிடம் ஆதவ் அர்ஜுனா கொண்டுள்ள நெருக்கம், சென்னை தொகுதிகளை குறிவைக்கும் நட்சத்திரங்கள், வெற்றிக்கான என்.ஆனந்தின் ஏக்கம் ஆகியவையே தற்போது தவெகவில் நிலவும் பல குழப்பங்களுக்கு காரணமாக கூறப்படுகிறது. இதன் விளைவாக விஜய் பாஜக உடன் கூட்டணியில் இணைய உள்ளதாக சில தகவல்களும் பரவ தொடங்கின. ஆனால், விஜய் தரப்பு அதனை முற்றிலுமாக மறுத்துள்ளது.

பெரம்பூரில் விஜய் – டேக் கேர் செய்யும் ஆதவ்?

சட்டமன்ற தேர்தலில் விஜய் இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடலாம் என கூறப்படும் நிலையில், அதில் ஒன்று சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கான களப்பணிகளும் ஏற்கனவே முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. விரைவில் வேட்பாளர்கள் பட்டியலும் கட்சி சார்பில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, விஜய் போட்டியிடும் தொகுதிக்கான அனைத்து பணிகளையும் தானே கவனித்துக் கொள்வதாக ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார். தேர்தல் பரப்புரை தொடங்கி எங்கு? எப்படி? மக்களை சந்திக்கலாம் என மொத்த பணிகளையும் அவரது தலைமையிலான குழுவே மேற்கொள்ள இருப்பதாக தவெக தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய் இம்பேக்ட் – வில்லிவாக்கத்தில் எதிரொலிக்குமா?

பெரம்பூரில் விஜய் களமிறங்கினால், பக்கத்து தொகுதியான வில்லிவாக்கத்தை குறிவைக்கும் தனது வெற்றிக்கும் அது உதவும் என ஆதவ் அர்ஜுனா திட்டமிட்டுள்ளாராம். இதன் காரணமாகவே, பெரம்பூரில் விஜய் களமிறங்கினால், அதுதொடர்பான அனைத்து களப்பணிகளையும் தானே மேற்கொள்வதாக தெரிவித்துள்ளாராம். அடிக்கடி பரப்புரைக்கு அங்கு வரவைத்து மக்கள் சந்திப்பை நிகழ்த்தினால், அதன் எதிரொலியாக தனக்கான செல்வாக்கும் சென்னை பெருநகரில் அதிகரிக்கும் என திட்டமிட்டுள்ளாராம். அதோடு, வெற்றியை பரிசாக்குவதன் மூலமாக, என். ஆனந்தை பின்னுக்கு தள்ளி தலைமையின் நம்பிக்கைக்குரிய நபராக மாறவும் முயற்சித்து வருவதாக நண்பா, நண்பிகள் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.

வெற்றிக்காக போராடும் என்.ஆனந்த் – கூட்டணி?

கட்சியின் வளர்ச்சி மற்றும் வெற்றியை தாண்டி, தனக்கான இடத்தை தக்கவைக்க என்.ஆனந்த் கடுமையாக போராடி வருகிறாராம். ஒருவேளை பெரம்பலூரில் விஜய் வெல்வதோடு, அவரது பரப்புரையின் தாக்கத்தால் ஆதவ் அர்ஜுனாவும் வென்றால் தனது நிலைமை என்னவாகும்? என்பது அவரது அச்சமாம். இதன் காரணமாக விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளை ஆராய்ந்து, இறுதியில் சென்னை தியாகராய நகரில் போட்டியிட முடிவு செய்துள்ளாராம். அங்கு பாஜக உடன் கூட்டணி அமைத்தால் வெற்றி உறுதி என சிலர் அவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். இதனை நம்பியே, விஜயிடம் கூட கேட்காமல், மாவட்ட செயலாளர்கள் உடன் அவசர அவசரமாக காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தி, கூட்டணி குறித்து கருத்து கேட்டுள்ளார். எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், புதுவை முதலமைச்சரும், என்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி வாயிலாக பாஜக உடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தவும் வேகமெடுத்தாராம்.

கடிந்து கொண்ட விஜய்..

என். ஆனந்தின் நடவடிக்கைகளை தொடர்ந்தே, பாஜக உடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஏராளமான தகவல்கள் தீயாய் பரவின. இதனிடையே, டெல்லியில் சிபிஐ விசாரணையை முடித்துக் கொண்டு வெளியே வந்த உடன், மொத்த நிகழ்வுகளையும் அறிந்து விஜய் கடுப்பாகியுள்ளார். தனித்தே போட்டியிடலாம் என முடிவு செய்த பிறகும், என்னை கேட்காமல் ஏன் மாவட்ட செயலாளர்களுடன் கூட்டணி குறித்து விவாதித்தீர்கள் என, என். ஆனந்திடம் கடிந்துகொண்டாராம். அதன் பிறகே, பாஜக உடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் எதையும் நடத்தவில்லை என, சி.டி.ஆர். நிர்மல் குமார் மற்றும் செங்கோட்டையன் போன்ற தவெக நிர்வாகிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

Related Post

நடிகைகள் என்ன உங்க சொத்தா.. நயன்தாரா விவகாரத்தில் கொந்தளித்த நடிகை குஷ்பு

Posted by - March 18, 2026 0
சமீப காலமாக அரசியல் பிரபலங்கள் பலரும் சினிமா நடிகைகளின் பெயர்களை குறிப்பிட்டு கொச்சையாக பேசுவது அதிகரித்து வருகிறது. விஜய் த்ரிஷா வீட்டை விட்டு வெளியில் வர வேண்டும்…

ஆரம்பமே அதிர்ச்சி.. விஜய் மீது 5 பிரிவுகளில் வழக்கு.. தேர்தல் பரப்புரை நடக்குமா?

Posted by - March 31, 2026 0
விஜய் பெரம்பூர் மற்றும் கொளத்தூர் ஆகிய தொகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். விஜயை காணும் பொருட்டு வழியெங்கும் மக்கள் கூட்டம் அலைமோதியது. கொளத்தூரில் திரண்ட மக்கள் கூட்டம் அச்சத்தை…

அம்மா உணவகம் முதல் தாலிக்கு தங்கம் வரை? – முடங்கிய திட்டங்களுக்கு மீண்டும் உயிர் கொடுக்கத் தயாராகும் இபிஎஸ்

Posted by - April 18, 2026 0
மேட்டூர் அணை உபரிநீரில் இருந்து 100 ஏரிகளை நிரப்பும் திட்டம் சேலம் மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்றும் சங்ககிரியில் நடைபெற்ற பிரசாரத்தில் பேசினார். அரசியல் காழ்ப்புணர்ச்சி…

மன்னித்துவிடுங்கள்.. 41 குடும்பத்திடமும் கதறி அழுத விஜய் – மாமல்லபுரத்தில் நடந்தது இதுதான்!

Posted by - October 27, 2025 0
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விஜய் மன்னிப்பு கேட்டு அழுதததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 27ம் தேதி கரூரில் நடந்த தமிழக வெற்றிக்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *