டிட்வா புயலால் சென்னையில் வெளுக்கப் போகும் மழை; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்

166 0

வங்கக் கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல், வட தமிழகத்தை நோக்கி நகர்வதாகவும், இதனால் சென்னையில் அதிக மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், வரும் நாட்களுக்கான ரெட் அலெர்ட்டையும் அறிவித்துள்ளது. அது குறித்து பார்க்கலாம்.

“‘டிட்வா‘ புயல் வட தமிழகத்தை நோக்கி நகர்வு – சென்னையில் அதிக மழை இருக்கும்“

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா, ‘டிட்வா‘ புயல் உருவாகியுள்ளதை உறுதி செய்தார். அதோடு, இந்த புயல் வட தமிழகத்தை நோக்கி நகரும் என்று கூறிய அவர், இதனால் சென்னையில் அதிக மழை பொழிவிற்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார்.

நவ. 28-ம் தேதி 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்

மேலும், டிட்வா புயலால் நாளை(28.11.25) நாகை, திருவாரூர், தஞ்சாவூர் புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பிருப்பதால், ரெட் அலெர்ட் விடுக்கப்படுவதாக தெரிவித்தார். அதோடு, மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். தொடர்ந்து, கடலூர், பெரம்பலூர், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளளது.

நவ. 29-ம் தேதி 6 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்

இதேபோல், நாளை மறுநாள்(29.11.25) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்படுவதாக அமுதா தெரிவித்தார்.

மேலும், சென்னை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்டும், தஞ்சாவூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறினார்.

அதோடு, புதுக்கோட்டை, திருச்சி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், கரூர், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அமுதா தெரிவித்தார்.

வடக்கு, வடமேற்கு நோக்கி நகரும் ‘டிட்வா‘ புயல்

தொடர்ந்து பேசிய அவர், டிட்வா புயல் வடக்க, வடமேற்கு நோக்கி நகர்ந்து வருவதாகவும், வரும் 30-ம் தேதி வட தமிழகம், தெற்கு ஆந்திர கடல் பகுதியை நெருங்கும் எனவும் தெரிவித்தார்.

புயல் நெருங்கி வருவதால், சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் மழைப் பொழிவு அதிகரிக்கும் என கூறிய அவர், 30-ம் தேதி வாக்கில் சென்னையில் மிக கனமழை பெய்யக் கூடும் எனவும் கூறினார். மேலும், வட தமிழகத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Post

நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை

Posted by - January 10, 2025 0
தமிழ்நாடு சட்டப்பேரவையில், ”யார் அந்த சார்” என்ற பேட்சுடன் அதிமுகவினர் வந்த நிலையில் , இன்று திமுகவினர் ”இவன் தான் அந்த சார்” என்ற புகைப்படத்துடன் வந்தது…

எங்க போனீங்க எல்லோரும்? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் விவகாரத்தில் வாய் திறக்காத நடிகர்கள்!

Posted by - December 31, 2024 0
தமிழ்த் திரையுலகினர், அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் ஏன் அமைதி காக்கின்றனர் என்று சமூக வலைதளங்களில் கேள்விகள் குவிந்து வருகின்றன.. தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியின்போது…

‘டீ’ யில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்த காதலி ; விஷமாக மாறிய காதல்… கம்பி என்ன வைத்த போலீஸ்

Posted by - March 4, 2025 0
காதலை கைவிட நினைத்த காதலனுக்கு டீயில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்து கொலை செய்ய முயன்ற காதலி. உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் சட்டக்கல்லூரி…

இனிமே தாறுமாறா கரண்ட் பில் உயராது..

Posted by - August 11, 2025 0
தமிழ்நாட்டில் திடீரென வீடுகளில் அபரிமிதமான மின்கட்டணம் வருவதை தடுக்க தமிழக அரசு புதிய நடைமுறையை செயல்படுத்த உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள வீடுகளில் தற்போது மின்மீட்டர் மூலமாக மின்சார…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *