துபாயில் வீடா, கார் ரேஸ் எனக்கா? – கொந்தளித்து பேசிய நிவேதா பெத்துராஜ்

226 0

தொடர்ந்து கண்ணியமான மற்றும் அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புவதாகவும், தன் மீது அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் கார் பந்தயம் நடத்த நான் தான் காரணம் என்ற குற்றச்சாட்டுக்கு நடிகை நிவேதா பெத்துராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். அப்படத்தைத் தொடர்ந்து டிக் டிக் டிக், பொதுவாக எம்மனசு தங்கம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், யூடியுபர் ஒருவர், அண்மையில் நிவேதா பெத்துராஜ் குறித்து அவதூறாக பேட்டியளித்திருந்தார். அவர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் குறித்து எக்ஸ் தளத்தில் நிவேதா பெத்துராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், தனக்காக ஏகப்பட்ட பணம் செலவு செய்யப்படுவதாக பொய் பேசுவர்கள், ஒரு பெண்ணின் வாழ்க்கையை நாசம் செய்யும் முன்பு அந்த தகவலை சரிபார்ப்பார்கள் என நினைத்து அமைதியாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

2002 ஆம் ஆண்டு முதல் தனது குடும்பம் துபாயில் வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும், 16 வயதிலிருந்தே பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். திரையுலகிலும் தனக்கு பட வாய்ப்புகளை தரும்படியோ யாரிடமும் கேட்டதில்லை என்றும், தான் எப்போதும் பணத்திற்காக பேராசை கொண்டதில்லை என்றும் கூறியுள்ளார்.2013 ஆம் ஆண்டு முதல் கார் பந்தயம் தனது விருப்பமாக இருப்பதாக கூறியுள்ள நிவேதா, உண்மையில் சென்னையில் கார் பந்தயம் நடத்தப்பட இருப்பது குறித்தும் தனக்கு தெரியாது என விளக்கம் அளித்துள்ளார். தொடர்ந்து கண்ணியமான மற்றும் அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புவதாகவும், தன் மீது அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related Post

கருணாநிதி, ஸ்டாலினையே விஞ்சிய உதயநிதி! – எம்.எல்.ஏவாகி 19 மாதங்களில் அமைச்சர்!

Posted by - December 13, 2022 0
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று 17 ஆண்டுகள் கழித்து 2006ல் தான் முதன்முறையாக அமைச்சரானார். சட்டமன்ற உறுப்பினரான 19 மாதங்களில் தமிழ்நாடு அமைச்சரவையில் அங்கம் வகிக்கப்போகிறார்…

மனுக்களுக்கு 30 நாட்களில் பதிலளிக்காவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் – சென்னை உயர்நீதிமன்றம்

Posted by - June 19, 2025 0
அரசுக்கு அளித்த மனுக்களுக்கு 30 நாட்களில் பதிலளிக்காவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் என தமிழக அரசை சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. அரசுக்கு அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிடக்…

இடைநிலை ஆசிரியர்கள் கைது – கண்டனம் தெரிவித்த தினகரன்

Posted by - February 22, 2024 0
சமவேலைக்கு சம ஊதியம் கேட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ள காவல்துறையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது என அம்மா மக்கள்…

“சனிக் கிழமைகளிலும் பள்ளிகள் நடத்தத் திட்டம்…” – அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன தகவல்..!

Posted by - June 11, 2023 0
பள்ளிகளை தாமதமாக திறப்பதால் ஒரு பாடத்திற்கு 4 மணி நேரம் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது என அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல். சனிக்கிழமைகளில் பள்ளிகளின் வேலை…

இதய நோய், புற்றுநோய்-ன்னு எதுவும் வரக்கூடாதா? அப்ப இந்த எண்ணெயை உங்க சமையலுக்கு யூஸ் பண்ணுங்க..

Posted by - October 27, 2023 0
தற்போது சமையலில் பயன்படுத்த ஏராளமான எண்ணெய்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. இந்த எண்ணெய்களைப் பார்க்கும் போது எந்த எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்ற ஒரு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *