வந்தாச்சு UPI.. தபால் நிலையங்களிலும் இனி டிஜிட்டல் பணபரிவர்த்தனை செய்யலாம்.. ஆகஸ்ட்டில் அமல்

170 0

சென்னை: வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தபால் அலுவலகங்களில் ‛இந்தியா போஸ்ட்’ சார்பில் விரைவில் யுபிஐ மூலம் பணம் வழங்கும் முறை செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதற்கான சோதனைகள் கர்நாடகாவின் மைசூர் மற்றும் பாகல்கோட்டை சர்க்கிளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் நாடு முழுவதும் அமலுக்கு வர உள்ளது.
தற்போது நம் நாட்டில் மக்கள் கையில் பணம் வைத்திருப்பதை குறைத்து விட்டனர். பெட்டிக்கடை, டீக்கடை முதல் பெரிய பெரிய மால், கார் ஷோரூம் வரை அனைவரும் டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்வது அதிகரித்து விட்டது.

வங்கி கணக்கில் மட்டும் பணம் இருந்தால் போதும். செல்போனை எடுத்து கொண்டு எந்த கடைக்கு வேண்டுமானாலும் சென்று பொருட்களை வாங்கி அதற்கான பணத்தை ஒரு நிமிடத்துக்குள் விற்பனையாளரின் வங்கி கணக்கிற்கு மாற்றி விட முடியும்.

ஆனால் நாடு முழுவதும் மக்களுக்கு பல சேவைகளை வழங்கி வரும் தபால் அலுவலகங்களில் இன்னும் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகள் நடைமுறைக்கு வரவில்லை. இதனால் பொதுமக்கள் தபால் நிலையங்களுக்கு செல்லும்போது கையில் பணம் வைத்திருக்க வேண்டிய நிலை இன்றும் தொடர்ந்து வருகிறது. இதனை மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி நாடு முழுவதும் உள்ள தபால் அலுவலகங்களில் வரும் ஆகஸ்ட் முதல் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இனி யுபிஐ மூலமாக தபால் அலுவலகங்களில் பணப்பரிமாற்றம் செய்ய முடியும்.

Related Post

“விரைவில் துணை முதலமைச்சராவார்”- உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த சீமான்

Posted by - December 14, 2022 0
இது எதிர்பார்த்த ஒன்றுதான் என்றும் விரைவில் துணை முதலமைச்சராக கூட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுப்பது எதிர்பார்த்த ஒன்றுதான் என்றும் விரைவில்…

இரவு நேரத்துல நெஞ்செரிச்சல் ரொம்ப தொல்லை பண்ணுதா? இப்படி பண்ணுங்க அந்த பிரச்சினையே வராது…!

Posted by - December 21, 2023 0
ஆசிட் ரிஃப்ளக்ஸ் அல்லது இரைப்பைஉணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் (GERD) என்றும் அழைக்கப்படும் இரவுநேர நெஞ்செரிச்சல், அசௌகரியமாகவும் தூக்கத்தை சீர்குலைக்கும். பொதுவாக நெஞ்செரிச்சல் அதிக அமில உணவுகளை சாப்பிட்ட…

“2026 என்ற இலக்கை நோக்கி முதல் அடியை எடுத்து வைப்போம்” – தவெக தலைவர் விஜய் அறிக்கை

Posted by - October 25, 2024 0
உங்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்திக்கப் போகும் கணங்கள், நம்மிடையே இருக்கும் அன்பின் கனத்தை இன்னும் பலமடங்கு கூட்டப் போகின்றன. அதை வார்த்தைகளில் எப்படிச் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை.…

மனைவி பிரசவத்துக்கு சென்ற நேரத்தில் இளம்பெண்ணை கடத்திய வாலிபர்

Posted by - July 8, 2023 0
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மானூரை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் பிளஸ்-2 வரை படித்து முடித்துவிட்டு பொள்ளாச்சி தொழிற்பேட்டையில் உள்ள ஒரு…

மணமகன் கட்டிய தாலியை கழற்றி வீசிய இளம்பெண்: உறவினர் பெண் திடீர் மணமகள் ஆனார்

Posted by - September 4, 2023 0
போளூர்: போளூரில் உள்ள ஒரு வங்கியில் வேலை செய்யும் வாலிபருக்கும், போளூரை அடுத்த ஒரு கிராமத்தில் வசிக்கும் பட்டதாரி இளம் பெண்ணுக்கும் பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டு நேற்று…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *