ஹார்ட் அட்டாக் வந்தாலும் இந்த கார் உங்கள காப்பாத்தும்… அசத்தலான எலெக்ட்ரிக் கார்!

244 0

முழுக்க முழுக்க எலெக்ட்ரிக் காரான இதில், ஓட்டுநரின் அறிகுறிகளைக் கண்காணிக்கக்கூடிய சென்சார்கள் மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

சீனாவைச் சேர்ந்த பிரபல ஸ்டார்ட் அப் நிறுவனமான பியான்கா, எலெக்ட்ரிக் கார்களை தயாரித்து வருகிறது. தற்போது இந்த நிறுவனத்தை பிரபல ரெனால்ட் நிறுவனம் வாங்கி நடத்தி வருகிறது. இந்நிறுவனம் தயாரித்த தனது முதல் காரை வரும் 2023ம் ஆண்டு முதல் காலாண்டில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. ஜிடி ஓப்பரஸ் 1 என பெயரிடப்பட்டுள்ள புதிய எலெக்ட்ரிக் காரானது, ஏற்கனவே சந்தையில் உள்ள சூப்பர் பிரீமியம் கார்களான பிஎம்டபிள்யூ ஏஜிஸ் 7 சிரீஸ், போர்ஷே ஏஜிஸ், டேக்கான் ஆகியவற்றிற்கு போட்டியாக 2024ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வர உள்ளது.

ஹார்ட் அட்டாக் மானிட்டர்:

முழுக்க முழுக்க எலெக்ட்ரிக் காரான இதில், ஓட்டுநரின் அறிகுறிகளைக் கண்காணிக்கக்கூடிய சென்சார்கள் மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. டிரைவரிடம் ஏதாவது வித்தியாசமான அறிகுறிகள் தென்பட்டால், அதில் உள்ள செயற்கை நுண்ணறிவு அவரிடம் பேச ஆரம்பிக்கும். அதற்கு ஓட்டுநர் எந்தவிதமான பதிலையும் தரவில்லை என்றால், ஏதோ விபரீதம் நிகழ்வதை செயற்கை நுண்ணறிவு புரிந்து கொள்ளும். உடனடியாக காரின் இயக்கத்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு சாலை ஓரமாக பத்திரமாக பார்க் செய்யும். ஸ்மார்ட் காக்பிட்டில் உள்ள ன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் மருத்துவர்களை தொடர்பு கொண்டு தகவல் கொடுக்கும்.ரெனால்ட் நிறுவனத்தின் தெற்காசியத் தலைவரும், பியான்கா நிறுவனத்தில் தலைமை பொறுப்பில் உள்ளவருமான சோ வெய்மிங் கூறுகையில், “எங்களுடைய கார் மூலமாக ஒரு உயிரைக் காப்பாற்ற முடிந்தாலும் அது போதுமானது. நாங்கள் ஆம்புலன்ஸை உருவாக்கவில்லை. மக்களுக்கு உதவக்கூடிய ஸ்மார்ட்டான பீரிமியம் கார்களை உருவாக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.சீனாவின் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திடம் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றிய இவர், கடந்த ரெனால்ட் நிறுவனத்தில் இணைந்தார். தற்போது இவர் தலைமையில் தான் பியான்கா நிறுவனம் சூப்பர் பிரீமியம் கார்களை தயாரித்து வருகிறது. சீனாவின் ஸ்டார்அப் நிறுவனமான பியான்கா இதுவரை முதலீட்டாளர்களிடம் இருந்து $1 பில்லியனுக்கும் அதிகமான முதலீடுகளை திரட்டியுள்ளது. 3 முதல் 5 மாடல்களைக் கொண்ட சூப்பர் பிரீமியம் கார்களை, ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் யூனிட்கள் வரை தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.எலக்ட்ரிக் கார்

சீனாவில் விற்பனையாகுமா?

சீனா சூப்பர் பிரீமியம் கார்களின் மிகப்பெரிய சந்தையைக் கொண்டுள்ளது. இங்குள்ள மில்லியன் கணக்கானவர்களை குறிவைத்தே எலெக்ட்ரிக் காரின் சூப்பர் பிரீமியம் மாடலை சந்தைப்படுத்த உள்ளதாக பியான்கா நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவைப் பொறுத்தவரை ஓபஸ் 1 அதிகம் விற்பனையாகும் சூப்பர் பிரீமியம் எலெக்ட்ரிக் காராக உள்ளது. இது 898,000 யுவானில் ($123,000) தொடங்கி 1.8 மில்லியன் யுவான் வரை விற்பனையாகி வருகிறது.

மேலும் இளம் தலைமுறையினர் இடையே பட்ஜெட் ப்ரெண்ட்லி கார்களுக்கு நல்ல வரவேற்புள்ளது. அதேபோல் சீனாவில் 35 வயதுக்குட்பட்ட இளம் தலைமுறையினர் தான் அதிகம் எலெக்ட்ரிக் கார்களை விரும்பி வாங்குகின்றனர். 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தங்களது உடலை ஆரோக்கியத்துடன் பாதுகாத்து வரும் நிலையில், அவர்கள் ஹார்ட் அட்டாக்கில் இருந்து காப்பாற்றக்கூடிய சூப்பர் பிரீமியம் காரை விரும்புவார்களா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக அமைந்துள்ளது.

Related Post

‘விஷம்’ கக்கும் பாகிஸ்தான் பின்னணியில் செயல்படுவோரை அடையாளம் காண்பது அவசியம்!

Posted by - August 14, 2025 0
சில நாட்களாக பாகிஸ்தானிடம் இருந்து வரும் தடித்த வார்த்தைகள் இந்திய அரசும், மக்களும் கவனத்தில் கொள்ள வேண்டியவையாக உள்ளன. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த ஏப்ரல்…

பாகிஸ்தான் – ஆஃப்கானிஸ்தான் பதிலடி – குவியும் பிணங்கள், எல்லையில் நடப்பது என்ன?

Posted by - February 27, 2026 0
ஆஃப்கானிஸ்தான் மீது போரை தொடங்குவதாக பாகிஸ்தான் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் எல்லையில் வெடித்த மோதலில், இருதரப்பில் பல வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

சிங்கப்பூரில் பரவி வரும் புது வகை கொரோனா!..

Posted by - May 22, 2024 0
நோய் வருவதும், அதைக் குணப்படுத்துவதும், சாதாரண மருத்துவ நிகழ்வுதான் என்றாலும், அந்த நோய் தொற்று நோயாக இருக்கும் பட்சத்தில், அது பரவாமல் தடுப்பது மிகவும் முக்கியமானது. புதுவகையான…

தவறுதலாக வீட்டு முகவரிக்கு ஆணுறை ஆர்டர் செய்த வாலிபர்- தாயின் கைக்கு கிடைத்ததால்…

Posted by - July 8, 2023 0
அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை எல்லாவற்றையும் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆன்லைனில் ஆணுறை (காண்டம்) ஆர்டர்…

கனடாவில் 45 ஆயிரம் ஏக்கர் காடுகளை சேதமாக்கிய காட்டுத்தீ

Posted by - June 10, 2023 0
கனடாவில் இதற்கு முன் இதுவரை இல்லாத அளவிற்கு காடுகள் தீப்பற்றி எரிந்து வருகின்றன. ஒரு இடத்தில் பற்றிய தீயை அணைப்பதற்குள் அடுத்த இடத்தில் தீப்பிடித்து எரிகிறது. இதனால்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *