ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!

159 0

பெண்களைப் பின்தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை கிடைக்கப்படும். ஜாமீனில் வெளிவர முடியாத அம்சம் அறிமுகம் செய்யப்படும். பாலியல் வன்கொடுமைக்கு 14 ஆண்டுகளுக்குக் குறையாமல், கடுங்காவல் சிறை அளிக்கப்படும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க சட்ட மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதை முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார். பெண்களுக்கு துன்பம் விளைவித்தலைத் தடை செய்கின்ற விதிகளைத் திருத்தம் செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

என்ன குற்றங்களுக்கு என்னென்ன தண்டனை?

இதன்படி, ”பெண்களைப் பின்தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை கிடைக்கப்படும். ஜாமீனில் வெளிவர முடியாத அம்சம் அறிமுகம் செய்யப்படும். பெண்களின் கண்ணியத்தை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டால் 3 முதல் 5 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்படும், பாலியல் வன்கொடுமைக்கு 14 ஆண்டுகளுக்குக் குறையாமல், கடுங்காவல் தண்டனை சிறை அளிக்கப்படும்” என்று சட்டத் திருத்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் யாருக்கு மரண தண்டனை?

அதேபோல ’’ஒரு நபர் மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானால் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை அளிக்கப்படும். ஆசிட் வீசினால் குறைந்தபட்சம் 10 ஆண்டு சிறை அல்லது ஆயுள் தண்டனை அளிக்கப்படும். ஒரு நபர் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்தினால், 3 முதல் 5 ஆண்டுகள் சிறை கிடைக்கும்.

கூட்டு பாலியல் வன்கொடுமை, 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்து ஆகிய செயல்களில் ஈடுபட்டால் மரணிக்கும் வரை சிறை தண்டனை அளிக்கப்படும்.

காவல் அதிகாரி அல்லது அவரின் உறவினரால் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் 20 ஆண்டுகளுக்குக் குறையாத சிறை தண்டனை அளிக்கப்படும். 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை வழங்கப்படும்’’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களின் பாதுகாப்பே முதன்மை

தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் சட்டபேரவையில் 2025 குற்றவியல் சட்டத் திருத்தத்தை தாக்கல் செய்தார். பின்பு அவர் பேசும்போது, ’’தமிழ்நாட்டில் அதிக அளவிலான பெண்கள் பணிக்குச் செல்கிறார்கள். பெண்களின் பாதுகாப்பை முதன்மையாகக் கருதுகிறோம். ஆதம்பாக்கம் சத்யா கொலை வழக்கில், விரைவிலேயே குற்றவாளிக்கு மரண தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கிறோம்.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது, தயவு தாட்சண்யம் இன்றி தண்டனை வாங்கிக் கொடுப்போம். பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம்’’ என்று தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கட்ட நிகழ்வு மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், தற்போது பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Post

மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட விஜயகாந்தின் உடல், கதறி அழுத பிரேமலதா.. புகைப்படங்கள் இதோ

Posted by - December 28, 2023 0
விஜயகாந்த் மரணம் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் நுரையீரல் பாதிக்கப்பட்டதன் காரணமாக மரணமடைந்துள்ளார். இவருடைய மரணம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மருத்துவமனையில் மரணமடைந்த நடிகர்…

“புதுக்கோட்டையில் கனிமவள கொள்ளைக்கு எதிராக புகார் அளித்தவர் காட்டிக் கொடுக்கப்பட்டார்” – எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

Posted by - January 20, 2025 0
கனிமவளக் கொள்ளையர்கள் மட்டுமின்றி, அவர் கொடுத்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி, வலியுறுத்தியுள்ளார். புதுக்கோட்டையில்…

தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு நள்ளிரவு 1 மணிக்கு மேல் தடை – காவல்துறை

Posted by - December 28, 2022 0
வீடுகளில் குடும்பத்துடன் இருந்து புத்தாண்டை கொண்டாடி மகிழ்வது சிறந்தது என தமிழக காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 31.12.2022 அன்று மாலை பொதுமக்கள் புத்தாண்டை பாதுகாப்பாகவும்,…

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!

Posted by - October 15, 2024 0
கனமழையால் பாதிக்கப்பட்டு உதவி தேவைப்படுவர்கள் தேமுதிக அலுவலகத்தை தங்கவும், உணவு அருந்தவும் பயன்படுத்தி கொள்ளலாம் என அக்கட்சின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

“குடும்பத்திற்காக டெல்லி செல்கிறார் ஸ்டாலின்“ எல்லாம் ‘தம்பி‘ படுத்தும் பாடு – வறுத்தெடுக்கும் இபிஎஸ்

Posted by - May 21, 2025 0
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற் முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியான நிலையில், தன்னுடைய குடும்பத்திற்காகவே அவர் டெல்லி செல்வதாக சாடியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *