அகத்தை சுத்தப்படுத்தும்! விஷத்தையே முறிக்கும்! அகத்தி கீரையை இந்த கறியுடன் மட்டும் சாப்பிடாதீர்கள்!

188 0

சென்னை: அகத்தி கீரை நுரையீரலை பாதுகாக்கும் கீரையாகும். இதை யாரெல்லாம் சாப்பிடலாம், யாரெல்லாம் சாப்பிடக் கூடாது தெரியுமா?

அகத்தையே சுத்தப்படுத்தும் கீரைதான் அகத்திக் கீரை என்பார்கள். இந்த கீரையில் 63 வகையான சத்துக்கள் இருக்கின்றன. இதில் 8.4 சதவீதம் புரதச் சத்து, 1.4 சதவீதம் கொழுப்புச் சத்து, 3.1 சதவீதம் தாது உப்புகள் உள்ளிட்டவை உள்ளன.

அகத்தி கீரை இரு வகைப்படும். ஒன்று வெள்ளை நிற அகத்தி கீரை. இது வெள்ளை பூக்களை கொண்டது. அது போல் சிகப்பு நிற பூக்களை கொண்ட செவ்வகத்தி கீரை. இவை இரண்டுமே மருந்தாக பயன்படுத்தப்படுகின்றன.அகத்தை சுத்தப்படுத்தும்! விஷத்தையே முறிக்கும்! அகத்தி கீரையை இந்த கறியுடன்  மட்டும் சாப்பிடாதீர்கள்! | Do you know the benefits of Agathi Keerai? -  Tamil Oneindia

அகத்தி கீரை உணவை எளிதில் ஜீரணமாக்கும். பித்தம் தொடர்பான நோய்கள் நீங்கிவிடும். உடலின் சூடு தணியும். கண்கள் குளிர்ச்சியாகும். அல்சர் உள்ளிட்ட வயிற்றுப்புண் குணமாகும். இந்த அகத்திக் கீரையை சேற்றுப்புண்களில் தடவினால் அது விரைவில் குணமாகும். தேமல் வந்த இடத்தில் கீரையை தடவினாலும் குணமாகும். இந்த கீரையின் சாற்றுடன் கடல் சங்கை இழைத்து மருக்களின் மீது பூசினால் அவை பூப்போல் உதிர்ந்துவிடும். தலைச்சுற்றல், கண் எரிச்சல், போன்ற பிரச்சினைகள் குணமாகும். பீடி, சிகரெட் போன்ற புகைப்பழக்கம் உள்ளவர்கள் இந்த அகத்திக் கீரை பூவை சமைத்து சாப்பிட்டு வந்தால் உடம்பில் உள்ள விஷம் வெளியேறும்.

இதய படபடப்பு, இதய வீக்கம், சிறுநீரக நோய், புற்றுநோய் போன்றவை கட்டுக்குள் வரும். விஷம் குடித்தவர்கள் அகத்திப்பட்டை கசாயத்தை 50 கிராம் எடுத்துக் கொண்டு 8 டம்ளர் தண்ணீர் விட்டு காய்ச்சி குடித்தால் அந்த விஷமே முறிந்துவிடும். உள்ளுறுப்புகளை சுத்தப்படுத்தும். ஆண், பெண் உறுப்புகளில் ஏற்படும் எரிச்சலையும் நீக்கும்.

சித்த மருத்துவம் சாப்பிடுவோர் இந்த கீரையை எடுத்துக் கொள்ளக் கூடாது. ரியாக்ஷன் அதிகமாகி சிரங்கு ஏற்படும். அகத்திக் கீரையையும் கோழிக்கறியையும் ஒரே நேரத்தில் சாப்பிடக் கூடாது. மது அருந்தியவர்களும் இந்த கீரையை சாப்பிடக் கூடாது. மது அருந்திவிட்டு இந்த கீரையை சாப்பிட்டால் மாரடைப்பு ஏற்படும்.

நுரையீரலை பாதுகாக்கும், ரத்த ஓட்டத்தை சீராக்கும், சருமத்திற்கு சிறந்தது, நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும், சைனஸை குணப்படுத்தும். ரத்த கொதிப்பு, கொழுப்பை கட்டுக்குள் வைத்திருக்கும். மலமிலக்கியாக செயல்படுகிறது. வயிற்றில் உள்ள கெட்ட புழுக்களை அழிக்கிறது. பித்தத்தை சமன் செய்துவிடுகிறது. குடல் புண், தொண்டை வலி, தொண்டை புண்ணை நீக்கும்.

Related Post

அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!

Posted by - December 18, 2024 0
அம்பேத்கர் பெயரை, உள்ளமும் உதடுகளும் மகிழ உச்சரித்துக்கொண்டே இருப்போம் என தவெக தலைவர் விஜய் , மத்திய அமைச்சர் அமித்சாவைக் கண்டித்துள்ளார். அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை…

பகுதிநேர ஆசிரியர்கள் கைது; ’’திமுகவின் துரோகத்துக்கு தேர்தலில் சரியான பாடம் புகட்டப்படும்’’- ராமதாஸ்

Posted by - December 11, 2024 0
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த திமுக, அவர்களுக்கு அளிக்கப்பட்ட எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. பணி நிரந்தரம் கோரி போராடிய பகுதிநேர ஆசிரியர்களை…

மேகதாது விவகாரத்தில் சமரசம் கிடையாது.. அணை கட்ட அனுமதிக்கமாட்டோம் – அமைச்சர் துரைமுருகன்

Posted by - June 1, 2023 0
கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு எவ்வித பேச்சுவார்த்தையிலும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் நீர்பாசனத்துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான டி.கே.சிவக்குமார்,…

திமுக-அதிமுக பங்காளிங்க, எனக்கு மச்சான் விஜய் தான்.. தளபதிக்கு ஸ்கெட்ச் போடும் பெரும் தலை

Posted by - August 21, 2024 0
தளபதி விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி இருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலிலேயே அவர் போட்டியிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் சட்டமன்ற தேர்தல் தான் அவரது தொடக்கமாக இருக்கிறது.…

தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு!

Posted by - March 28, 2023 0
Ops eps case | அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் அதிமுக பொதுக்குழு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *