அரசாணிக்காய்.. அல்சரை அண்ட விடாது காக்கும் அற்புத காய்.. சர்ருனு உடல்எடை குறையும் பாருங்க.. செம ஜூஸ்

200 0

சென்னை:

அரசாணிக்காய் இருந்தால் போதும்.. அல்சரை நம்மிடம் அண்டவிடாமல் பாதுகாக்கும்.. அந்த அளவுக்கு நன்மைகளை கொண்டதுதான் இந்த அரசாணிக்காய்.

அரசாணிக்காயை, பெரும்பாலும் பரங்கிக்காய் என்பார்கள்.. சாம்பல் பூசணி, சிவப்பு பூசணி, மஞ்சள் பூசணி, சர்க்கரை பூசணி இப்படி என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும்.. இது ஒரு நீர்க்காய் ஆகும். 100 கிராம் காயில் 26 கலோரிகள் இருக்கிறதாம். ஆனால், கொழுப்பு இல்லை.

வைட்டமின் B1, B2, B6, D, C, பீட்டா கரோட்டீன், நார்ச்சத்து, கனிமச்சத்துக்களான பொட்டாசியம், இரும்புச்சத்து, கால்சியம், காப்பர் மற்றும் ஜிங்க் இப்படி ஏகப்பட்ட சத்துக்கள் இந்த அரசாணிக்காயில் நிறைந்துள்ளன.அரசாணிக்காய்.. அல்சரை அண்ட விடாது காக்கும் அற்புத காய்.. சர்ருனு உடல்எடை  குறையும் பாருங்க.. செம ஜூஸ் | Do you know the Health Benefits of  Parangikkai and Ash Gourd yellow ...

கண் பார்வை:

அரசாணிக்காயில் வைட்டமின் A ஏராளமாக உள்ளதால், கண்பார்வைக்கும், கண் கோளாறுகளை சரிசெய்யவும் உதவக்கூடியது.. இந்த காயில், வைட்டமின்கள் B, C உள்ளதால், உடம்பில் உள்ள சூட்டை குறைத்து, குளிர்ச்சியை தரக்கூடியது.. அதேசமயம், இருமல் இருந்தாலும் இந்த கீரை சாப்பிட்டால் குணமாகும்..

இந்த அரசாணிக்காயில், அதிக நார்ச்சத்தும், குறைவான கலோரியும் உள்ளதால், உடல் எடை குறைப்பவர்களுக்கு பெஸ்ட் காய் இதுவாகும்.. போதாக்குறைக்கு, அளவுக்கு அதிகமான நீர்ச்சத்தும் உள்ளதால், உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள், இந்த காயை தவறவிடக்கூடாது. இந்த அரசாணிக்காயில் பெக்ட்டின் என்ற வேதிப்பொருள் உள்ளது.. இது கொழுப்பு சத்தை குறைக்கக்கூடியது..

அரசாணிக்காய்:

வெறும் 100 கிராம் அரசாணிக்காயை நன்றாக கழுவி, தோலுடன் சேர்த்து ஜூஸ் போட்டு, வெறும் வயிற்றில் குடித்தாலே எந்த நோயும் நெருங்காது என்கிறார்கள்… இதனால், உடலிலுள்ள நச்சுக்கள் வெளியேறுவதுடன், உடல் எடையும் குறையும்..

தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள், ஒரு டம்ளர் அரசாணிக்காயில் ஜூஸ் தயாரித்து, அத்துடன் தேன் கலந்து குடித்து வந்தால் நன்றாக தூக்கம் வரும்.. தீப்புண்களை ஆற்றும் தன்மை இந்த குளிர்ந்த காய்க்கு உள்ளது.. அதேபோல கொப்புளங்களையும் குணப்படுத்தும்.. பித்தத்தை போக்கும் குணம் இந்த அரசாணிக்காய்க்கு உண்டு..

தலைமுடி வளர்ச்சி:

குளிர்ச்சி அதிகம் என்பதால், இந்த காயை ஜூஸ் போல அரைத்து, தலைக்கு தடவி குளிக்கலாம். இதனால், தலைமுடி கொட்டுவது நிற்கும்.. சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் 3 வேளை என 10 நாட்களுக்கு அரசாணிக்காயில் ஜூஸ் தயாரித்து, அரை டம்ளர் குடித்துவந்தாலே, சிறுநீரக கோளாறுகள் நீங்கும்.. ரத்த நாளங்களில் ஏற்பட்ட அடைப்பும் நீங்கும். இதனால், மாரடைப்பு வருவது தடுக்கப்படுகிறது.

இந்த காயை அடிக்கடி சமையலில் சேர்த்து வந்தால், உடலிலுள்ள பித்தம் போக்கும், பசியை தூண்டும், சிறுநீர் பெருகும்.. மூல நோய், எரிச்சல், தாகம், வயிற்று பொருமல் இப்படி பல பிரச்சனைகள் தீர்ந்துவிடும். பசியை தூண்டுவதுடன், குடல் சம்பந்தமான பிரச்சனைகளையும் நிவர்த்தி செய்யும்.. உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கு அருமருந்துதான் இந்த அரசாணிக்காய்.

ஆரோக்கிய விதைகள்:

இந்த அரசாணிக்காயின் விதைகளும் சத்துக்கள் நிறைந்தது.. இந்த காயின் விதைகளை உலர்த்தி எடுத்து உரித்து சாப்பிட்டு வந்தால் உடல் புஷ்டி பெறும்.. இந்த விதைகளிலும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இதய ஆரோக்கியம் காக்கப்படுகிறது.. அதனால், தினமும் ஒரு டீஸ்பூன் அரசாணிக்காயின் விதையை தினமும் எடுத்து கொண்டால், ஆரோக்கியம் மேம்படும்.. இந்த அரசாணிக்காய் இலைகளிலும் சத்துக்கள் உள்ளது.. இந்த இலைகளையும் சமைக்கலாம்..

இவ்வளவு நன்மைகள் இருந்தாலும், ஒருசில எதிர்மறை விளைவுகளையும் இந்த காயில் உள்ளது என்கிறார்கள்.. அதாவது, இந்த பரங்கிக்காய், உடலில் கெட்ட ரத்தத்தை தோற்றுவிக்கக்கூடியதாம்.. வாத குணமும் உள்ளது. பலமற்றவர்களும், நோயுற்று இளைத்தவர்களும், நோயாளிகளும் இதை சாப்பிட்டால், உடம்பை மேலும் உருக்கிவிடுமாம். அதனால், நோயுற்று உடல் மெலிந்தவர்கள் இந்த பரங்கிக்காயை சாப்பிட வேண்டாம் என்பார்கள்.. எனினும், இதுகுறித்து உறுதியாய் தெரியவில்லை.

Related Post

“திராவிட மாடல் ஆட்சி… மக்கள் விரோத ஆட்சி” – திமுகவை நேரடியாக சாடிய தவெக தலைவர் விஜய்!

Posted by - October 28, 2024 0
தவெக முதல் மாநில மாநாட்டில் தங்களின் அரசியல் எதிரி யார் என தவெக தலைவர் விஜய் பேசினார். தவெக மாநில மாநாடு இன்று விக்கிரவாண்டி, வி சாலை…

காரைக்குடியில் பேக்கரி கடையில் பயங்கர தீ விபத்து- ரூ.40 லட்சம் பொருட்கள் சேதம்

Posted by - July 10, 2023 0
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனி வாசல் பகுதியில் பிரபல பேக்கரி கடை செயல்பட்டு வருகிறது. இங்குள்ள சமையல் கூடத்தில் இன்று காலை ஊழியர்கள் நாகராஜ், திருப்பதி…

துபாயில் வீடா, கார் ரேஸ் எனக்கா? – கொந்தளித்து பேசிய நிவேதா பெத்துராஜ்

Posted by - March 6, 2024 0
தொடர்ந்து கண்ணியமான மற்றும் அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புவதாகவும், தன் மீது அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். சென்னையில் கார் பந்தயம்…

திமுகவின் ஊழல் மறைப்பு கூட்டம் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

Posted by - March 22, 2025 0
தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு, ஊழலை மறைப்பதற்கான இன்று திமுக கூட்டம்  நடத்துவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில் இல்லம் முன்பு கருப்புக்கொடி…

அரசு வேலை கிடைக்காததால் விரக்தி: புதுச்சேரி சட்டசபைக்குள் சான்றிதழ்களை வீசிய விளையாட்டு வீரர் கைது

Posted by - August 9, 2023 0
புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த கொம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராபர்ட். இவரது மகன் சத்யராஜ் (வயது 29). பிளஸ்-2 வரை படித்துள்ள அவர், வலு தூக்கும் போட்டியில் மாநில…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *