dmk

இன்று தான் கடைசி.!

162 0

ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை முடிவடையவுள்ள நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறுகிறதா.? இல்லையா என்பது இன்று மாலைக்குள் முடிவு வெளியாகும் என தகவல் கூறப்படுகிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேதியானது இன்னும் ஒரு வார காலத்திற்குள் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தேர்தல் ஆணைய வட்டார தகவலாக இருந்து வருகிறது. எனவே கடைசி கட்ட தேர்தல் பணியை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. இதன் படி, கூட்டணி மற்றும் தொகுதிபங்கீட்டை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக, கடந்த 2021ஆம் ஆண்டு கூட்டணியில் உள்ள கட்சிகளோடு வருகிற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டது.

ஆனால் திடீரென காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள் ஒதுக்கீடு என பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் திமுகவை விமர்சித்தும், தவெகவை உயர்த்தி பேசியும் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். மேலும் கருத்து கணிப்பு என ஒரு சில சர்வேக்களையும் பதிவிட்டு திமுகவை விமர்சிக்க தொடங்கினர்.

திமுகவிற்கு ஷாக் கொடுத்த காங்கிரஸ்

இதனால் திமுக தலைமை கடும் அதிருப்தி அடைந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு பதிலாக தேமுதிகவை கூட்டணியில் இணைத்தது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு திமுக மறைமுகமாக செக் வைத்தது. இருந்த போதும்   காங்கிரஸ் கட்சியோடு பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட 41 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் எனவும், 2 ராஜ்யசபா சீட் வழங்க வேண்டும் என பட்டியலை கொடுத்துள்ளது. ஆனால் திமுக தரப்போ திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளது. எனவே கடந்த 2021ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகுதிளான 25 மட்டுமே ஒதுக்க முடியும் என தெரிவித்துள்ளது.  மேலும் அதிகபட்சமாக 26 முதல் 28 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

இதனையடுத்து ராஜ்யசபா தேர்தலுக்கு நாளை வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாக உள்ளது. எனவே கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெறுகிறதா.? இல்லையா என்பதை நேற்று மாலைக்குள் அறிவிக்க வேண்டும் என திமுக கெடு விதித்தது. இதனையடுத்து திமுகவை சமாதானம் செய்யும் வகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படவுள்ள எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆனால் திமுக தரப்போ கூடுதல் தொகுதிகள் என்ற பேச்சுக்கே இடமில்லை என உறுதியாக தெரிவித்துள்ளது.

திமுக கூட்டணியில் தொடருமா காங்கிரஸ்

எனவே திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெறுகிறதா.? இல்லையா என்பதை இன்று மாலைக்குள் அறிவிக்க வேண்டும் என கெடு விதித்துள்ளது திமுக. எனவே திமுகவுடன் இன்று காலை காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படுமா.? அல்லது திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறுமா என்பது இன்று தெரியவரும். எனவே இதனை தமிழக அரசியல் வட்டாரம் மட்டுமில்லாலம் நாடே எதிர்பார்த்து காத்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இண்டியா கூட்டிணியில் முக்கிய கட்சியாக திமுக இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்,

Related Post

அமைச்சர் மெய்யநாதனை புறக்கணிக்கிறாரா அமைச்சர் ரகுபதி?

Posted by - August 26, 2025 0
புதுக்கோட்டை மாவட்ட திமுக-வில் அமைச்சர்கள் ரகுபதியும் சிவ.வீ.மெய்யநாதனும் அசைக்கமுடியாத சக்தியாக இருப்பவர்கள். இதில், ரகுபதி புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் இருப்பதால் கூடுதல் அதிகாரத்துடன் கோலோச்சி…

தவெக-வுடன் கூட்டணியா? தயக்கம் காட்டும் அரசியல் கட்சிகள் – என்ன செய்யப்போகிறார் விஜய்?

Posted by - July 28, 2025 0
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், விஜய்யுடன் கூட்டணி வைக்க அரசியல் கட்சிகள் தயக்கம் காட்டி வருவதால் தவெக என்ன செய்யப்போகிறது? என்ற…
tvkvijay cm

TVK Vijay : ஆட்சி அமைக்க அழைப்பு விடுங்க… ஆளுநருக்கு கடிதம் எழுதிய விஜய்.! என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா.?

Posted by - May 5, 2026 0
TVK leader Vijay letter to the governor : தமிழக சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படி தவெக…
Generated Image November 03 2025 10 32AM

எனக்கு வெட்கமாக இருக்கிறது; பதவியை துறக்க விரும்புகிறேன்: நேரு முன்னிலையில் திமுக மாவட்டச் செயலாளர் குமுறல்

Posted by - November 3, 2025 0
திமுகவின் திருச்சி மத்திய மாவட்டச் செயலாளராக க.வைரமணி பதவி வகிக்கிறார். திமுக முதன்மைச் செயலாளரும், மூத்த அமைச்சருமான கே.என்.நேருவின் தீவிர ஆதரவாளரான இவருக்கு, அமைச்சரின் சொந்த தொகுதியான…
image 6

தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடா?

Posted by - March 12, 2026 0
கேஸ் சிலிண்டரை தொடர்ந்து அடுத்து பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற தகவல் பரவி வருகின்றது. தமிழ்நாட்டில் நேற்று நள்ளிரவுடன் பெட்ரோல், டீசல் விநியோகம் நிறுத்தப்படும் என…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *