கொரோனா அச்சம் – மீண்டும் வருகிறது வொர்க் ப்ரம் ஹோம்…!

257 0

கொரோனா பரவல் அச்சம் காரணமாக மீண்டும் வீட்டிலிருந்து பணியாற்றும் சூழலை கொண்டு வர நிறுவனங்கள் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் தற்போது புதியவகை கொரோனா பிஎஃப் 7 (Omicron BF.7) வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் பிஎஃப் 7 (Omicron BF.7) புதிய வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கி உள்ளதால், மீண்டும் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில் கொரோனா 4ஆவது அலை ஏற்பட்டால் போக்குவரத்து, சுற்றுலா, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளிலுள்ள நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை மீண்டும் வீட்டிலிருந்து பணி செய்யும் முறைக்கு (Work From Home) மாற்ற ஆலோசித்து வருகின்றன. அதுபோலவே வேலைக்கு ஆட்கள் எடுக்கும் பணியும் மந்தமடைந்துள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

பணிக்கு ஆட்கள் எடுக்கும் ஸ்டாலின் சாஸ் நிறுவனத்தின் பங்குதாரர் மாலா சவ்லா கூறுகையில், “கொரோனா குறித்த தகவல்கள் மீண்டும் அதிகரித்து வருவதால் வேலைக்கு ஆட்கள் எடுக்கும் பணிகளை நிறுவனங்கள் குறைத்துள்ளன. சுற்றுலா, ஹோட்டல் உள்ளிட்ட விருந்தோம்பல் துறைகளின் வாடிக்கையாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள். என்றாலும் உற்பத்தி மற்றும் நுகர்வோர் துறையினர் வேலைக்கு ஆட்கள் எடுக்கும் பணியைத் தொடர்ந்துகொண்டுதான் உள்ளனர்” என்றார்.

என்றாலும் கூட இந்தியாவில் கொரோனா தடுப்பு செலுத்தியதால் மக்கள் அதிக நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளனர். அத்துடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் கொரோனா பரவல் பெரிய அளவில் இருக்காது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Related Post

பிரதமர் மோடிக்கு நன்றி – ரஜினிகாந்த் ட்வீட்…

Posted by - May 28, 2023 0
குடிமகனாகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் புதிய கட்டிட திறப்புவிழாவை மகிழ்ச்சியுடனுடம் ஆவலுடனும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். – இளையராஜா தமிழர்களுக்கு பெருமை சேர்த்த பிரதமர் மோடிக்கு நன்றி என்று நடிகர் ரஜினிகாந்த் ட்வீட் செய்துள்ளார்.…

அமைச்சர் உதயநிதிக்கு தெலுங்கானா முதல்வர் கண்டனம்!

Posted by - April 20, 2024 0
சனாதன தர்மம் குறித்த அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த்…

வெயில் நேரத்தில் வெளியே செல்லும் முன் இதையெல்லாம் கவனிக்க தவறாதீங்க..!

Posted by - April 5, 2023 0
கொளுத்தும் வெயிலில் கால் நன்கு தெரியும் படியான காலணிகளை தவிர்ப்பது நல்லது. வெயில் சூடு படாமல் பாதங்களை பராமரிப்பதும் அவசியம். எனவே ஷூ, செப்பல் அணிவது சௌகரியமாக…

சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராய் செய்த மோசடி: ரூ.25 ஆயிரம் கோடி முதலீட்டின் நிலைமை என்ன?

Posted by - November 16, 2023 0
மும்பை: சஹாரா குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான சுப்ரதாராய் நேற்று முன்தினம் காலமானார். 1978-ம் ஆண்டு ரூ.2 ஆயிரம் முதலீட்டில் சஹாரா இந்தியா பரிவார் நிறுவனத்தை தொடங்கிய சுப்ரதா…

ஜி20 மாநாடு எதிரொலி – பாதுகாப்பு பணியில் 1.30 லட்சம் போலீசார்

Posted by - September 8, 2023 0
புதுடெல்லி: ஜி20 கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாடு இந்திய தலைநகர் புதுடெல்லியில் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டப மாநாட்டு மையத்தில் செப்டம்பர் 9 மற்றும் 10…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *