சிறையில் இருந்து பரோலில் வந்து தாயாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற சவுக்கு சங்கர்

78 0

சென்னை: தனது தாயாரின் இறு​திச் சடங்​கில் பரோலில் வந்து சவுக்கு சங்​கர் பங்​கேற்​றார். சவுக்கு சங்​கர் தாயாரின் மறைவுக்கு பழனி​சாமி உட்பட பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் இரங்​கல் தெரி​வித்​தனர்.

சவுக்கு மீடியா சிஇஓ​வும் யூடியூபரு​மான சங்​கர் மீதான இரு மோசடி வழக்​கு​களில், ஆதம்​பாக்​கம், சைதாப்​பேட்டை போலீ​ஸார் அவரை 2025 டிச.13-ம் தேதி கைது செய்​தனர்.

அவரை ஜாமீனில் விடுவிக்​கக் ​கோரி அவரது தாயார் கமலா தாக்​கல் செய்​திருந்த மனுவை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம் மார்ச் 25 வரை அவருக்கு இடைக்​கால நிபந்​தனை ஜாமீன் வழங்கி உத்​தர​விட்​டது. அன்​றைய​தினம் அவர் நீதி​மன்​றத்​தில் ஆஜரா​காத​தால், அவரை தலைமறைவு குற்​ற​வாளி​யாக அறி​வித்து போலீ​ஸார் தேடி வந்​தனர்.

பின்​னர் ஆந்​தி​ரா​வில் சவுக்கு சங்​கர் கடந்த வாரம் கைது செய்​யப்​பட்டு புழல் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். அவர் மீது குண்​டர் தடுப்பு சட்​டத்​தின் கீழும் நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது.

இதற்​கிடையே உடல்​நலக்​குறைவு காரண​மாக, சவுக்கு சங்​கரின் தாயார் கமலா நேற்று முன்​தினம் கால​மா​னார். பெங்​களூரு வில்​சன் கார்​டன் மின் மயானத்​தில் நேற்று நடை​பெற இருந்த தயாரின் இறு​திச் சடங்​கில், பங்​கேற்க சவுக்கு சங்​கருக்கு ஏப்​.13 இரவு 8 மணி முதல் ஏப்​.16 இரவு 8 மணி வரை பரோல் வழங்​கப்​பட்​டது.

அதைத்​தொடர்ந்து தாயார் கமலா​வின் இறு​திச் சடங்​கில் சவுக்கு சங்​கர் கலந்து கொண்​டார். சவுக்கு சங்​கரின் தாயார் மறைவுக்கு அரசி​யல் தலை​வர்​கள் வெளி​யிட்ட இரங்​கல் செய்​தி​யில் கூறி​யிருப்​ப​தாவது:

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: யூடியூபர் சவுக்கு சங்​கரின் தாயார் கமலா உடல்​நலக்​ குறை​வால் கால​மான செய்​தி​யறிந்து மிகுந்த துயருற்​றேன்.

தனது மகன் திமுக அரசை எதிர்த்து பேசிய ஒரே காரணத்​துக்​காக, காவல் ​துறை​யால், திமுக மற்​றும் கூட்​டணி கட்சி குண்​டர்​களால் அவர் சந்​தித்த துயரங்​கள் ஏராளம். தாயை இழந்து வாடும் சவுக்கு சங்​கருக்கு எனது ஆழ்ந்த இரங்​கல்​கள்.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: சவுக்கு சங்​கரின் தாயார் மறைவு செய்​தி​கேட்டு வருத்​தம் அடைந்​தேன். இந்த கடின நேரத்​தில் சவுக்கு சங்​கரின் குடும்​பத்​தினருக்கு என் ஆழ்ந்த இரங்​கலை தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன்: சவுக்கு சங்​கரின் தாயார் கால​மான செய்தி வருத்​தத்​தை​ அளிக்​கிறது. சவுக்கு சங்​கருக்கு எனது ஆழ்ந்த இரங்​கலை தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான்: சவுக்கு சங்​கரின் தா​யார் மறைந்த செய்​தி​யறிந்து ஆழ்ந்த மனத்​துயர் அடைந்​தேன். சவுக்கு சங்​கருக்கு எனது ஆறு​தலை தெரி​வித்​துக் கொள்கிறேன்.

Related Post

ஐந்து உறுதிமொழிகள்.. தவெக கட்சியினருக்கு விஜய் அறிவுறுத்தல்

Posted by - February 19, 2024 0
தமிழக வெற்றி கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்ற நிலையில், நடிகர் விஜய் கட்சியினருக்கான ஐந்து உறுதிமொழிகளை கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. நடிகர் விஜய் கடந்த…

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை; கைதானவர் பற்றி பகீர் தகவல்

Posted by - December 25, 2024 0
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியை வன்கொடுமை செய்த வழக்கில் குற்ற வழக்குகள் பின்னணி கொண்ட நபர் கைது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும்…

“செய்தி சேனல் ஒளிப்பதிவாளர் மீது கொடூர தாக்குதல்” – கண்டனம் தெரிவித்த அண்ணாமலை

Posted by - March 1, 2024 0
திமுக பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான, சஹாரா கூரியர் நிறுவனத்தை, தேசிய போதைப் பொருள் கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகள் சோதனையிட்டதைப் படம்பிடித்த தனியார் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் மீது கொடூர…

திருமண மண்டபங்களில் மதுபானம் பறிமாறலாம்.. தமிழ்நாடு அரசு அனுமதி..!

Posted by - April 24, 2023 0
தமிழ்நாட்டில் ஏற்கனவே கிளப்புகள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களுக்கு மட்டுமே மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டுள்ளது. திருமண மண்டபங்கள், விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாற…

திட்டமிட்ட தேதியில் முதுகலை ஆசிரியர் தேர்வு? டிஆர்பி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Posted by - October 7, 2025 0
TN TRB Hall Ticket 2025 தேர்வர்களுக்கு தேர்வு கூட நுழைவுச் சீட்டு குறித்த குறைகள் இருப்பின் அதைச் சரிசெய்யலாம். அதற்கு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் சிறப்பு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *