werh

சிறையில் இருந்து பரோலில் வந்து தாயாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற சவுக்கு சங்கர்

106 0

சென்னை: தனது தாயாரின் இறு​திச் சடங்​கில் பரோலில் வந்து சவுக்கு சங்​கர் பங்​கேற்​றார். சவுக்கு சங்​கர் தாயாரின் மறைவுக்கு பழனி​சாமி உட்பட பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் இரங்​கல் தெரி​வித்​தனர்.

சவுக்கு மீடியா சிஇஓ​வும் யூடியூபரு​மான சங்​கர் மீதான இரு மோசடி வழக்​கு​களில், ஆதம்​பாக்​கம், சைதாப்​பேட்டை போலீ​ஸார் அவரை 2025 டிச.13-ம் தேதி கைது செய்​தனர்.

அவரை ஜாமீனில் விடுவிக்​கக் ​கோரி அவரது தாயார் கமலா தாக்​கல் செய்​திருந்த மனுவை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம் மார்ச் 25 வரை அவருக்கு இடைக்​கால நிபந்​தனை ஜாமீன் வழங்கி உத்​தர​விட்​டது. அன்​றைய​தினம் அவர் நீதி​மன்​றத்​தில் ஆஜரா​காத​தால், அவரை தலைமறைவு குற்​ற​வாளி​யாக அறி​வித்து போலீ​ஸார் தேடி வந்​தனர்.

பின்​னர் ஆந்​தி​ரா​வில் சவுக்கு சங்​கர் கடந்த வாரம் கைது செய்​யப்​பட்டு புழல் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். அவர் மீது குண்​டர் தடுப்பு சட்​டத்​தின் கீழும் நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது.

இதற்​கிடையே உடல்​நலக்​குறைவு காரண​மாக, சவுக்கு சங்​கரின் தாயார் கமலா நேற்று முன்​தினம் கால​மா​னார். பெங்​களூரு வில்​சன் கார்​டன் மின் மயானத்​தில் நேற்று நடை​பெற இருந்த தயாரின் இறு​திச் சடங்​கில், பங்​கேற்க சவுக்கு சங்​கருக்கு ஏப்​.13 இரவு 8 மணி முதல் ஏப்​.16 இரவு 8 மணி வரை பரோல் வழங்​கப்​பட்​டது.

அதைத்​தொடர்ந்து தாயார் கமலா​வின் இறு​திச் சடங்​கில் சவுக்கு சங்​கர் கலந்து கொண்​டார். சவுக்கு சங்​கரின் தாயார் மறைவுக்கு அரசி​யல் தலை​வர்​கள் வெளி​யிட்ட இரங்​கல் செய்​தி​யில் கூறி​யிருப்​ப​தாவது:

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: யூடியூபர் சவுக்கு சங்​கரின் தாயார் கமலா உடல்​நலக்​ குறை​வால் கால​மான செய்​தி​யறிந்து மிகுந்த துயருற்​றேன்.

தனது மகன் திமுக அரசை எதிர்த்து பேசிய ஒரே காரணத்​துக்​காக, காவல் ​துறை​யால், திமுக மற்​றும் கூட்​டணி கட்சி குண்​டர்​களால் அவர் சந்​தித்த துயரங்​கள் ஏராளம். தாயை இழந்து வாடும் சவுக்கு சங்​கருக்கு எனது ஆழ்ந்த இரங்​கல்​கள்.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: சவுக்கு சங்​கரின் தாயார் மறைவு செய்​தி​கேட்டு வருத்​தம் அடைந்​தேன். இந்த கடின நேரத்​தில் சவுக்கு சங்​கரின் குடும்​பத்​தினருக்கு என் ஆழ்ந்த இரங்​கலை தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன்: சவுக்கு சங்​கரின் தாயார் கால​மான செய்தி வருத்​தத்​தை​ அளிக்​கிறது. சவுக்கு சங்​கருக்கு எனது ஆழ்ந்த இரங்​கலை தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான்: சவுக்கு சங்​கரின் தா​யார் மறைந்த செய்​தி​யறிந்து ஆழ்ந்த மனத்​துயர் அடைந்​தேன். சவுக்கு சங்​கருக்கு எனது ஆறு​தலை தெரி​வித்​துக் கொள்கிறேன்.

Related Post

சிக்கனில் இந்த பாகத்தை ஒருபோதும் சாப்பிடாதீங்க.. இந்த பிரச்சனை இருக்கவங்க தொடவே கூடாது.!

Posted by - December 18, 2024 0
சிக்கனை சிலர் மாதத்திற்கு நான்கு முதல் ஐந்து முறை சாப்பிடுகிறார்கள், மற்றவர்கள் வாரத்திற்கு குறைந்தது மூன்று முதல் நான்கு முறை சாப்பிடுகிறார்கள். சிலருக்கு சிக்கன் இல்லாமல் ஒரு…

சேனைக்கிழங்கு.. நீங்க கருணைக்கிழங்கு சாப்பிடறீங்களா? அப்ப இதை மறக்காதீங்க.. பெண்ணின் அருமருந்து சேனை

Posted by - November 28, 2023 0
சென்னை: பெண்களின் ஆரோக்கியத்துக்கு கைகொடுக்கக்கூடிய உணவுகள் என்னென்ன தெரியுமா? குறிப்பாக, ஈஸ்ட்ரோஜன் உற்பத்திக்கு உதவக்கூடிய உணவுகள் என்னென்ன தெரியுமா? ஈஸ்ட்ரோஜன் என்பது பெண்களின் உடலில் காணப்படும் ஒரு…

காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்: வானிலை மையம்

Posted by - November 15, 2023 0
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…

15 வருஷமா எங்கே? திராவிட நாய்கள் நேரடியாக பதில் சொல்லாது: சீமான் பரபரப்பு பேச்சு

Posted by - January 22, 2025 0
பாஜக சாதிவாரி கணக்கு எடுக்காது என்பது நன்றாகவே தெரியும். அப்புறம் எதுக்கு நீங்கள் அவர்களிடம் மாற்றிவிடுகிறீர்கள். என் பொம்மையைத்தான் திராவிட இயக்கத்தினரால் எரிக்க முடியும் என நாம்…
aqwertyujkl

TVK VCK Alliance: சல்லிசல்லியாகும் திமுக கூட்டணி.! விசிக-வை கூட்டணிக்கு அழைத்த விஜய்.? வருவாரா திருமா.?

Posted by - May 6, 2026 0
தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க ஆதரவு கேட்டு ஏற்கனவே காங்., சிபிஐ கட்சிளுக்கு அழைப்பு விடுத்த விஜய், விசிக தலைவர் திருமாவளவனுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். இதனால், திமுக கூட்டணியில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *