தமிழ்நாட்டில் உக்கிரமாகப் போகும் போர்.. ஸ்கெட்ச் போடும் அரசியல் கட்சிகள்.. எல்லாம் ஓட்டுக்குத்தான்

259 0

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சமூக வலைதளங்கள் மூலமாக பரப்புரைகளை தீவிரப்படுத்த அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளன.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆளுங்கட்சியான திமுக மீண்டும் ஆட்சி பீடத்தில் அமரவும், எதிர்க்கட்சியான அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கவும் களத்தில் குதித்துள்ளன. இந்த சமயத்தில் தமிழக அரசியல் களத்தில் அறிமுக கட்சியாக களமிறங்கியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அரியணை ஏற களத்தில் குதித்துள்ளனர்.

சமூக வலைதள பரப்புரை:

திமுக மிகப்பெரிய கூட்டணியை தங்கள் வசம் வைத்துள்ள நிலையில், அதிமுக – பா.ஜ.க.வுடன் கூட்டணியை வைத்துள்ளது. நடிகர் விஜய் கூட்டணிக்கு சில முக்கிய கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இணைய வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சியை அரசியல் கட்சிகளும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், இன்றைய தமிழ்நாட்டில் சமூக வலைதளம் என்பது மிகப்பெரிய பிரச்சார ஊடகமாக மாறியுள்ளது. தொலைக்காட்சி, நாளிதழ்களை காட்டிலும் சமூக வலைதளங்கள் மிகப்பெரிய ஊடகமாக மாறியுள்ளது. இதை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் சமூக வலைதள வளர்ச்சி அபரிமிதமானது.

அரசியல் கட்சிகள் திட்டம்:

கடந்த 2016 மற்றும் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் இதை அரசியல் கட்சிகள் பயன்படுத்தினர். ஆனால், இந்த முறை முன்பு எப்போதும் இல்லாத வகையில் பலத்த போட்டி ஏற்பட்டிருப்பதாலும் முதல் தலைமுறை வாக்காளர்களை கவர வேண்டும் என்பதற்காகவும் சமூக வலைதள பரப்புரைகளுக்கு அரசியல் கட்சிகள் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளனர்.

இதற்காக ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தங்களுக்காக அதிகாரப்பூர்வமாக உள்ள அரசியல் ஐடி அணிகள் மட்டுமின்றி அதிகளவில் சமூக வலைதள பக்கங்களையும், அதை கண்காணிப்பதற்கு ஆட்களையும் நியமித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டில் விஜய்க்கு சமூக வலைதள பரப்புரை என்பது அவரது ரசிகர்களால் எந்தவித தடையும் இல்லாமல் செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே அவர்களை விஜய் விர்சுவல் வாரியர் என்று அழைத்தார்.

சமூக வலைதள போர்:

அதேபோல, நாம் தமிழர் கட்சியினரும் சீமானுக்கு ஆதரவாக கடந்த பல ஆண்டுகளாகவே இணையதளங்களில் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களும் அடுத்த 10 மாதங்களுக்கு தீவிரமாக செயல்பட உள்ளனர். முதல் தலைமுறை வாக்காளர்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்றே கணிக்கப்பட்டுள்ளது. இவர்களின் வாக்குகள் பல தொகுதிகளில் முடிவுகளையும் மாற்றும் வல்லமை கொண்டதாக கருதப்படுகிறது.

இதனால், முதல் தலைமுறை வாக்காளர்கள் அதிகளவு பயன்படுத்தும் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் அதிகளவு பரப்புரைகளை மேற்கொள்ள அரசியல் கட்சிகள் தங்களது ஐடி அணிகளுக்கு உத்தரவிட்டுள்ளன. அரசியல் களத்தில் நேரடியாக நடக்கும் வார்த்தை மோதல், வார்த்தை போர்களை காட்டிலும் அடுத்த 10 மாதங்களுக்கு சமூக வலைதளங்களில் நடக்கும் வார்த்தை போர் மற்றும் கருத்து மோதல் உச்சகட்டமாகவும், உக்கிரமாகவும் நடக்கும் என்றே எதிர்பார்க்கலாம்.

இதனால் ஒவ்வொரு கட்சியினரும் தங்களது திட்டங்களையும், மக்கள் நலத்திட்டங்களையும் ஆக்கப்பூர்வமாகவும் எடுத்து வைப்பது போல எதிர்க்கட்சிகளை நாகரிகமாகவும், அதேசமயம் ஒவ்வாெரு கட்சியின் ஆதரவாளர்களில் சிலர் எதிர்க்கட்சியினரை தகாத வார்த்தைகளாலும் விமர்சிப்பார்கள் என்பதால் சமூக வலைதளம் ரணகளமாக மாறப்போகிறது என்பதில் மட்டும் எந்த சந்தேகமும் இல்லை.

Related Post

food

தோசை சாப்பிட உங்களுக்கு பிடிக்குமா? தோசை சாப்பிட்டே உங்க எடையை ஈஸியா குறைக்கலாமாம் தெரியுமா?

Posted by - December 2, 2023 0
எடையை அதிகரிப்பது என்பது அவ்வளவு எளிதானதாக இருக்கிறதோ எடையைக் குறைப்பது அவ்வளவு கடினமானதாக உள்ளது. அதிகரித்த எடையைக் குறைக்க பெரும்பாலான மக்கள் டயட்டை நம்பியிருக்கிறார்கள். எடையைக் குறைக்க…

“வெடிகுண்டு வச்சிருக்கேன்; தூக்கி வீசுனா என்ன ஆவீங்க” – ஐயா பிரகாஷ்ராஜ் பாணியில் மிரட்டல் விடுக்கும் சீமான்!

Posted by - January 29, 2025 0
பிரபாகரனிடம் பெரியார் தொண்டர்கள் போகாதீர்கள். நீங்கள் வைத்திருப்பது பெரியார் எனும் வெங்காயம். என் தலைவன் பிரபாகரன் கையில் இருப்பது வெடிகுண்டு. பிரபாகரன் கொடுத்த வெடிகுண்டை வைத்திருக்கிறேன் எனவும்…

ரூ.1000 மகளிர் உரிமை தொகை மேல்முறையீடு.. இணையதளம் முடக்கம்.. தவிக்கும் பெண்கள்!

Posted by - September 22, 2023 0
 மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமை தொகை வராதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், இணையதளம் முடங்கியுள்ளதால் விண்ணப்பதாரர்கள்…

வங்கிகளுக்கு இன்று முதல் 5 நாட்களுக்கு விடுமுறை

Posted by - January 13, 2024 0
சென்னை: தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி பொங்கல் பண்டிகையானது வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று முதல் 5 நாட்களுக்கு…

கருணாநிதி, எம்.ஜி.ஆர் வணங்கிய டி.ஆர்.எஸ்! – மார்டன் தியேட்டர்ஸின் கதை

Posted by - December 15, 2023 0
சினிமா தயாரிப்பு தொழிலில் கொல்கத்தாதான் கோலோச்சிக்கொண்டிருந்தது. சினிமா தயாரிப்பு தொடர்பான எல்லா வேலைகளுக்கும் கொல்கத்தா செல்ல வேண்டியிருந்தது. அதற்கு மாற்றாக சேலத்திலேயே ஒரு ஸ்டூடியோ தொடங்கினால் என்ன?…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *