தமிழ்நாட்டில் உக்கிரமாகப் போகும் போர்.. ஸ்கெட்ச் போடும் அரசியல் கட்சிகள்.. எல்லாம் ஓட்டுக்குத்தான்

252 0

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சமூக வலைதளங்கள் மூலமாக பரப்புரைகளை தீவிரப்படுத்த அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளன.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆளுங்கட்சியான திமுக மீண்டும் ஆட்சி பீடத்தில் அமரவும், எதிர்க்கட்சியான அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கவும் களத்தில் குதித்துள்ளன. இந்த சமயத்தில் தமிழக அரசியல் களத்தில் அறிமுக கட்சியாக களமிறங்கியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அரியணை ஏற களத்தில் குதித்துள்ளனர்.

சமூக வலைதள பரப்புரை:

திமுக மிகப்பெரிய கூட்டணியை தங்கள் வசம் வைத்துள்ள நிலையில், அதிமுக – பா.ஜ.க.வுடன் கூட்டணியை வைத்துள்ளது. நடிகர் விஜய் கூட்டணிக்கு சில முக்கிய கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இணைய வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சியை அரசியல் கட்சிகளும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், இன்றைய தமிழ்நாட்டில் சமூக வலைதளம் என்பது மிகப்பெரிய பிரச்சார ஊடகமாக மாறியுள்ளது. தொலைக்காட்சி, நாளிதழ்களை காட்டிலும் சமூக வலைதளங்கள் மிகப்பெரிய ஊடகமாக மாறியுள்ளது. இதை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் சமூக வலைதள வளர்ச்சி அபரிமிதமானது.

அரசியல் கட்சிகள் திட்டம்:

கடந்த 2016 மற்றும் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் இதை அரசியல் கட்சிகள் பயன்படுத்தினர். ஆனால், இந்த முறை முன்பு எப்போதும் இல்லாத வகையில் பலத்த போட்டி ஏற்பட்டிருப்பதாலும் முதல் தலைமுறை வாக்காளர்களை கவர வேண்டும் என்பதற்காகவும் சமூக வலைதள பரப்புரைகளுக்கு அரசியல் கட்சிகள் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளனர்.

இதற்காக ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தங்களுக்காக அதிகாரப்பூர்வமாக உள்ள அரசியல் ஐடி அணிகள் மட்டுமின்றி அதிகளவில் சமூக வலைதள பக்கங்களையும், அதை கண்காணிப்பதற்கு ஆட்களையும் நியமித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டில் விஜய்க்கு சமூக வலைதள பரப்புரை என்பது அவரது ரசிகர்களால் எந்தவித தடையும் இல்லாமல் செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே அவர்களை விஜய் விர்சுவல் வாரியர் என்று அழைத்தார்.

சமூக வலைதள போர்:

அதேபோல, நாம் தமிழர் கட்சியினரும் சீமானுக்கு ஆதரவாக கடந்த பல ஆண்டுகளாகவே இணையதளங்களில் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களும் அடுத்த 10 மாதங்களுக்கு தீவிரமாக செயல்பட உள்ளனர். முதல் தலைமுறை வாக்காளர்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்றே கணிக்கப்பட்டுள்ளது. இவர்களின் வாக்குகள் பல தொகுதிகளில் முடிவுகளையும் மாற்றும் வல்லமை கொண்டதாக கருதப்படுகிறது.

இதனால், முதல் தலைமுறை வாக்காளர்கள் அதிகளவு பயன்படுத்தும் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் அதிகளவு பரப்புரைகளை மேற்கொள்ள அரசியல் கட்சிகள் தங்களது ஐடி அணிகளுக்கு உத்தரவிட்டுள்ளன. அரசியல் களத்தில் நேரடியாக நடக்கும் வார்த்தை மோதல், வார்த்தை போர்களை காட்டிலும் அடுத்த 10 மாதங்களுக்கு சமூக வலைதளங்களில் நடக்கும் வார்த்தை போர் மற்றும் கருத்து மோதல் உச்சகட்டமாகவும், உக்கிரமாகவும் நடக்கும் என்றே எதிர்பார்க்கலாம்.

இதனால் ஒவ்வொரு கட்சியினரும் தங்களது திட்டங்களையும், மக்கள் நலத்திட்டங்களையும் ஆக்கப்பூர்வமாகவும் எடுத்து வைப்பது போல எதிர்க்கட்சிகளை நாகரிகமாகவும், அதேசமயம் ஒவ்வாெரு கட்சியின் ஆதரவாளர்களில் சிலர் எதிர்க்கட்சியினரை தகாத வார்த்தைகளாலும் விமர்சிப்பார்கள் என்பதால் சமூக வலைதளம் ரணகளமாக மாறப்போகிறது என்பதில் மட்டும் எந்த சந்தேகமும் இல்லை.

Related Post

ஓலா, ஊபர் போராட்டம் எதிரொலி: 20 கிலோமீட்டருக்கு ரூ.1000 கட்டணம் – பயணிகள் கடும் அதிர்ச்சி

Posted by - October 18, 2023 0
சென்னை: ஓலா, உபேர் டிரைவர்கள் நேற்று முன்தினம் முதல் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். வாடகை வாகனங்களை முறைப்படுத்த வேண்டும், பைக் டாக்சியை…

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை:கோரிக்கை நிறைவேறும்வரை பின்வாங்கப் போவதில்லை என உறுதி

Posted by - January 6, 2026 0
பள்ளிக்கல்வித் துறைஅதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், போராட்டம் தொடரும் என்று இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன் வைத்து, இடைநிலை பதிவுமூப்பு…

”நேர்மையில்லாத ஆளுநர் ரவி” 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல், உச்சநீதிமன்றம் ஆப்பு – மாநில அரசின் வசமாகும் பல்கலை.,

Posted by - April 8, 2025 0
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் துணைவேந்தர்களை நியமிக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் அதிகாரம் பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாட்டில் நேர்மை இல்லை என உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.…

முதல்வர் மருந்தகம் துவங்குவது எப்படி… B.Pharm / D.Pharm படித்தவர்களுக்கு செம்ம சான்ஸ்…

Posted by - November 8, 2024 0
முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்களுக்கு விண்ணப்பிக்கும் முறை குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மருந்தகங்கள் துவங்குவது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இத்திட்டத்தினை சிறப்பாகச் செயல்படுத்துவது தொடர்பாக…

11 முதல் மதியம் 3 மணி வரை வெளியே வராதீங்க…

Posted by - April 12, 2023 0
குளிர்பானங்கள், மதுபானங்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். ரசாயனம் மூலம் வாழைப்பழம், மாம்பழம், தர்பூசணி ஆகியவை பழுக்கவைப்பது கண்டறியப்பட்டால், கடையின் உரிமம் ரத்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *