பிற மாநாடுகளுக்கு அனுமதி அளிக்கும் போது முருக பக்தர்கள் மாநாட்டுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பது ஏன்? – உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

89 0

மதுரையில் பிற மாநாடுகளுக்கு அனுமதி அளித்தபோது முருக பக்தர்கள் மாநாட்டுக்கு மட்டும் அனுமதி வழங்க மறுப்பது ஏன் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

இந்து முன்னணி சார்பில் மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் அரங்கு அமைக்க அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையில் ஆஜரான அரசு தரப்பு, மாநாட்டில் அறுபடை கோயில்களின் மாதிரி அமைப்புகள் அமைத்து வழிபாடு நடத்தினால், அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படும் என தெரிவித்தது.

தொடர்ந்து மனுதாரர் தரப்பில், அரங்கு அமைத்து காலை, மாலை என 2 மணி நேரம் மட்டுமே வழிபாடு நடத்த உள்ளதால் அனுமதி வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இதே பகுதியில் பிற மாநாடுகளுக்கு அனுமதி அளித்தபோது, தற்போது மட்டும் அனுமதி வழங்க மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.

அரங்கு அமைக்க அனுமதி மறுத்து, அரசு தரப்பு கூறிய காரணங்கள் ஏற்புடையதல்ல எனத் தெரிவித்த நீதிபதி, காவல்துறை நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்றும், அரசியல் சார்புடன் செயல்பட கூடாது எனவும் அறிவுறுத்தினார்.

மேலும் மனு குறித்து, மதுரை மாநகர காவல் ஆணையர், பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Related Post

ஒன்றிற்கு மேற்பட்ட மின் இணைப்புகளை ஒரே ஆதார் எண்ணுடன் இணைக்கலாமா?

Posted by - November 28, 2022 0
டிசம்பர் 31ஆம் தேதி வரை நடைபெறும் சிறப்பு முகாமில் வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் எண்களை மின் இணைப்புடன் இணைக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். தமிழகத்தில் மொத்தம் 2.30…

ஓபிஎஸ் என்பது ஒரு முடிந்து போன கதை… ஒட்டுமொத்த இயக்கமே இபிஎஸ் பின்னால் இருக்கு ; கடம்பூர் ராஜு!!

Posted by - January 20, 2024 0
ஓபிஎஸ் என்பது ஒரு முடிந்து போன கதை என்றும், ஒட்டுமொத்த இயக்கமே எடப்பாடியார் பின்னால் உள்ளது என தூத்துக்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.…

தாய்கோ வங்கியில் ரூ. 94 லட்சம் மோசடி- 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 3 பேர் கைது

Posted by - August 5, 2023 0
சேலம்: சேலம் 4 ரோடு அருகே தாய்கோ வங்கி உள்ளது. இங்கு 2010-ம் ஆண்டு தொடங்கி 2020 வரை போலி நககைளை அடகு வைத்து ரூ. 94…

இனி இவர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

Posted by - March 16, 2024 0
அரசுப் பள்ளிகள் மட்டுமின்றி அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளுக்கும்  மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் வகையில் புதிய…
cyclone

முற்றிலும் மழைவிட எத்தனை மணி நேரம் ஆகும்? எப்போது கரையை கடக்கும்?

Posted by - December 4, 2023 0
கடந்த 3 மணி நேரத்தில் மிக்ஜாம் புயல் வலுவடைந்துள்ளதாக கூறியுள்ள தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மிக்ஜாம் புயல், நாளை அதிகாலையில் ஆந்திரா மாநிலம் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே கரையைக்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *