ரூ.500 கோடி சொத்து மதிப்பு கொண்ட அல்லு அர்ஜுன் திடீர் கைது.. என்ன நடந்தது..?!

268 0

ஹைதராபாத்தில் டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்பட வெளியீட்டு விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் ஒரு பெண் இறந்தது தொடர்பாக, நடிகர் அல்லு அர்ஜுனை காவல்துறையினர் இன்று விசாரணை அழைத்து சென்றுள்ளனர், ஆனால பல ஊடகங்களில் இவர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
காவல்துறையினரின் அறிக்கையின்படி, டிசம்பர் 4ஆம் தேதி இரவு சுமார் 10:30 மணியளவில் நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா திரைப்படத்தைப் பார்க்க தியேட்டருக்கு வந்துள்ளார், அவரை நெருக்கமாகப் பார்க்க ரசிகர்கள் முண்டியடித்து முன்னேறியதால் மோசமான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதன் விளைவாக, பலர் மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு காயங்களுக்கு ஆளாகினர்.
இந்த சம்பவத்தில் 39 வயது பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், அவரது மகன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உயிரிழந்த பெண்ணின் பெயர் ரேவதி, அவர் தில்சுக்நகரைச் சேர்ந்தவர். தனது கணவர் பாஸ்கர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் திரைப்பட வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார், அப்போது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.

தற்போது சிக்கடபள்ளி காவல் நிலையத்தில் அல்லு அர்ஜுனிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், இவர் காவல் துறை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அல்லு அர்ஜுன் சம்பளம்: புஷ்பா படத்திற்காக அல்லு அர்ஜுன் சுமார் 300 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். இந்த படத்தைத் தயாரித்தது மைத்ரேயி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமாரன் ரைட்டிங்ஸ். இந்த 300 கோடி ரூபாய் சம்பளத்தின் மூலம் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் ஹூக்கர் பட்டியலில் முன்னேறியுள்ளார்.

பொதுவாக பாலிவுட்டில் பெரிய ஹீரோக்கள் படத்தில் நடிக்க சம்பளமாக வாங்காமல் படத்தின் வசூலில் ஒரு சிறு பங்கீட்டை வாங்கும் வழக்கம் கொண்டு உள்ளனர். ஆனால் சில படங்களுக்குச் சம்பளமும் வாங்குகின்றனர், இப்படி சம்பளம் வாங்குவோர் பட்டியலில் அல்லு அர்ஜுன் முதல் புஷ்பா 2 படத்தின் மூலம் முதல் இடத்தை பிடித்துள்ளார். அல்லு அர்ஜுன் சொத்து மதிப்பு: தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான அல்லு அர்ஜுன், சுமார் 500 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் பணக்கார நடிகராக உள்ளது. அவரது வருமானம், சொத்து மதிப்பு வெறும் நடிப்பை மட்டும் சார்ந்தது அல்ல; முதலீடுகள், விளம்பர ஒப்பந்தங்கள் மற்றும் சமூக ஊடக விளம்பரங்கள் மூலம் பெரும் வருமானத்தை ஈர்த்து வருகிறார். அல்லு அர்ஜுன் வீடு: அவரது சொத்துக்களில், ஹைதராபாத்தில் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர வீடு மிகவும் முக்கியமான ஒன்று. அங்கு அவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். பிற முக்கிய சொத்துக்கள்: அவரது சொத்து மதிப்பில் ஒரு பிரைவேட் ஜெட் , அவரது ஆடம்பர வாழ்க்கை முறையை பிரதிபலிக்கிறது, அத்துடன் பல ரியல் எஸ்டேட் சொத்துக்கள் மற்றும் உயர் ரக சொகுசு வாகனங்களின் கலெக்ஷனும் அடங்கும். ப்ரோமோஷன் மற்றும் பிராண்ட் என்டோர்ஸ்மென்ட்: சமூக வலைத்தளத்தில் ஒவ்வொரு விளம்பர பதிவிற்கும் லட்சக்கணக்கான ரூபாய் வருமானம் ஈட்டி வருகிறார் அல்லு அர்ஜூன். இது தவிர KFC, Frooti, RedBus, Hero MotoCorp, Hotstar மற்றும் Rapido உள்ளிட்ட பல பிரபலமான பிராண்டுகளுடன் அவர் விளம்பர தூதராக பல கோடிகளை சம்பாதித்து வருகிறார். ஒவ்வொரு விளம்பர ஒப்பந்தத்திற்கும் 6 முதல் 7 கோடி ரூபாய் வரை அவர் கட்டணம் வசூலிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கிய முதலீடுகள்: விளம்பரங்கள் மற்றும் நடிப்பைத் தவிர, அல்லு அர்ஜுன் உணவு மற்றும் மதுபானத் துறையில் முதலீடுகளைச் செய்துள்ளார். ஹைதராபாத்தில் பிரபலமான அமெரிக்க ஸ்போர்ட் பார் மற்றும் உணவக சங்கிலியின் உரிமையாளராக உள்ளார். பிற முக்கிய வர்த்தகம்: 2022 ஆம் ஆண்டில், அல்லு அர்ஜுன் ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட அல்லு ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நிறுவினார். இது மட்டும் அல்லாமல் கீதா ஆர்ட்ஸ் என்ப தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனத்தை அவரது குடும்பம் நடத்தி வருகின்றது. மேலும், ஹைதராபாத்தின் அமீர்பேட்டையில் ஒரு மல்டிபிளக்ஸ் வைத்துள்ளார். அவரது தந்தை அல்லு அரவிந்த், Aha என்ற ஸ்ட்ரீமிங் தளத்தின் உரிமையாளராக உள்ளார். அல்லு அர்ஜுன் அதன் பிராண்ட் தூதராகவும் செயல்படுகிறார். ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ஹெல்த்கேர் ஸ்டார்ட்அப் நிறுவனமான கால்ஹெல்த் சர்வீஸிலும் குடும்பம் முதலீடுகளைக் கொண்டுள்ளது. இது அவர்களின் பல்வேறு வணிக நலன்களை மேலும் நிரூபிக்கிறது. சுருக்கமாகக் கூறினால், அல்லு அர்ஜுன் ஒரு வெற்றிகரமான நடிகர் மட்டுமல்ல, ஒரு புத்திசாலித்தனமான வணிகர் என்பதையும் நிரூபித்துள்ளார். ஆனால் இந்த வழக்கு அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையும், பிஸ்னஸையும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

ஆந்திராவில் திசைமாறிய திருடர்கள்- கடை, தோட்டத்தில் 450 கிலோ தக்காளி கொள்ளை

Posted by - August 4, 2023 0
திருப்பதி: தக்காளியின் விலை தங்கத்தின் விலையை போல் நாள்தோறும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தக்காளியின் விலை உச்சத்தை அடைந்ததால் இல்லத்தரசிகள் தக்காளியை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.…

‘அனிமல்’ திரைப்படமும் ‘டாக்சிக்’ கருத்துகளும் – இணையத்தில் சூடுபிடித்த ‘ஆல்ஃபா ஆண்’ விவாதம்

Posted by - January 31, 2024 0
‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா, அடுத்து இயக்கிய படம் ‘அனிமல்’. ரன்பீக் கபூர் நாயகனாக நடித்துள்ள இப்படம் கடந்த டிசம்பர் 1-ம் தேதி…

ரூ.1000 வந்துருக்கா.. வங்கி அக்கவுண்ட் பேலன்ஸ் செக் பண்ண எளிய வழி.!

Posted by - September 15, 2023 0
மகளிர் உரிமை தொகை பெற தகுதி இருந்தும் விண்ணப்பம் நிரகாரிக்கப்பட்டால் மேல் முறையீடு செய்வதற்கு அரசு வழிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 1 கோடியே 6…

ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்க முடியாது- சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு

Posted by - August 21, 2023 0
புதுடெல்லி: தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி கடந்த 2018-ம் ஆண்டு அப்பகுதியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 100-வது நாள் போராட்டத்தின்…

அதிகரிக்கும் மாரடைப்பு மரணங்கள்! “கொரோனா” முக்கிய காரணம்! மருத்துவர்கள் பகீர்! தடுக்க என்ன செய்யணும்

Posted by - September 30, 2023 0
டெல்லி: இன்று உலக இதய தினம் கொண்டாடப்படுகிறது. இதய நோய்களும் இதய பாதிப்புகளும் திடீர் திடீரென அதிகரிக்கும் நிலையில், அதைத் தடுக்கவும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழும் முறைகளைத்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *