ரூ.500 கோடி சொத்து மதிப்பு கொண்ட அல்லு அர்ஜுன் திடீர் கைது.. என்ன நடந்தது..?!

265 0

ஹைதராபாத்தில் டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்பட வெளியீட்டு விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் ஒரு பெண் இறந்தது தொடர்பாக, நடிகர் அல்லு அர்ஜுனை காவல்துறையினர் இன்று விசாரணை அழைத்து சென்றுள்ளனர், ஆனால பல ஊடகங்களில் இவர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
காவல்துறையினரின் அறிக்கையின்படி, டிசம்பர் 4ஆம் தேதி இரவு சுமார் 10:30 மணியளவில் நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா திரைப்படத்தைப் பார்க்க தியேட்டருக்கு வந்துள்ளார், அவரை நெருக்கமாகப் பார்க்க ரசிகர்கள் முண்டியடித்து முன்னேறியதால் மோசமான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதன் விளைவாக, பலர் மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு காயங்களுக்கு ஆளாகினர்.
இந்த சம்பவத்தில் 39 வயது பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், அவரது மகன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உயிரிழந்த பெண்ணின் பெயர் ரேவதி, அவர் தில்சுக்நகரைச் சேர்ந்தவர். தனது கணவர் பாஸ்கர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் திரைப்பட வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார், அப்போது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.

தற்போது சிக்கடபள்ளி காவல் நிலையத்தில் அல்லு அர்ஜுனிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், இவர் காவல் துறை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அல்லு அர்ஜுன் சம்பளம்: புஷ்பா படத்திற்காக அல்லு அர்ஜுன் சுமார் 300 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். இந்த படத்தைத் தயாரித்தது மைத்ரேயி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமாரன் ரைட்டிங்ஸ். இந்த 300 கோடி ரூபாய் சம்பளத்தின் மூலம் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் ஹூக்கர் பட்டியலில் முன்னேறியுள்ளார்.

பொதுவாக பாலிவுட்டில் பெரிய ஹீரோக்கள் படத்தில் நடிக்க சம்பளமாக வாங்காமல் படத்தின் வசூலில் ஒரு சிறு பங்கீட்டை வாங்கும் வழக்கம் கொண்டு உள்ளனர். ஆனால் சில படங்களுக்குச் சம்பளமும் வாங்குகின்றனர், இப்படி சம்பளம் வாங்குவோர் பட்டியலில் அல்லு அர்ஜுன் முதல் புஷ்பா 2 படத்தின் மூலம் முதல் இடத்தை பிடித்துள்ளார். அல்லு அர்ஜுன் சொத்து மதிப்பு: தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான அல்லு அர்ஜுன், சுமார் 500 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் பணக்கார நடிகராக உள்ளது. அவரது வருமானம், சொத்து மதிப்பு வெறும் நடிப்பை மட்டும் சார்ந்தது அல்ல; முதலீடுகள், விளம்பர ஒப்பந்தங்கள் மற்றும் சமூக ஊடக விளம்பரங்கள் மூலம் பெரும் வருமானத்தை ஈர்த்து வருகிறார். அல்லு அர்ஜுன் வீடு: அவரது சொத்துக்களில், ஹைதராபாத்தில் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர வீடு மிகவும் முக்கியமான ஒன்று. அங்கு அவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். பிற முக்கிய சொத்துக்கள்: அவரது சொத்து மதிப்பில் ஒரு பிரைவேட் ஜெட் , அவரது ஆடம்பர வாழ்க்கை முறையை பிரதிபலிக்கிறது, அத்துடன் பல ரியல் எஸ்டேட் சொத்துக்கள் மற்றும் உயர் ரக சொகுசு வாகனங்களின் கலெக்ஷனும் அடங்கும். ப்ரோமோஷன் மற்றும் பிராண்ட் என்டோர்ஸ்மென்ட்: சமூக வலைத்தளத்தில் ஒவ்வொரு விளம்பர பதிவிற்கும் லட்சக்கணக்கான ரூபாய் வருமானம் ஈட்டி வருகிறார் அல்லு அர்ஜூன். இது தவிர KFC, Frooti, RedBus, Hero MotoCorp, Hotstar மற்றும் Rapido உள்ளிட்ட பல பிரபலமான பிராண்டுகளுடன் அவர் விளம்பர தூதராக பல கோடிகளை சம்பாதித்து வருகிறார். ஒவ்வொரு விளம்பர ஒப்பந்தத்திற்கும் 6 முதல் 7 கோடி ரூபாய் வரை அவர் கட்டணம் வசூலிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கிய முதலீடுகள்: விளம்பரங்கள் மற்றும் நடிப்பைத் தவிர, அல்லு அர்ஜுன் உணவு மற்றும் மதுபானத் துறையில் முதலீடுகளைச் செய்துள்ளார். ஹைதராபாத்தில் பிரபலமான அமெரிக்க ஸ்போர்ட் பார் மற்றும் உணவக சங்கிலியின் உரிமையாளராக உள்ளார். பிற முக்கிய வர்த்தகம்: 2022 ஆம் ஆண்டில், அல்லு அர்ஜுன் ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட அல்லு ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நிறுவினார். இது மட்டும் அல்லாமல் கீதா ஆர்ட்ஸ் என்ப தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனத்தை அவரது குடும்பம் நடத்தி வருகின்றது. மேலும், ஹைதராபாத்தின் அமீர்பேட்டையில் ஒரு மல்டிபிளக்ஸ் வைத்துள்ளார். அவரது தந்தை அல்லு அரவிந்த், Aha என்ற ஸ்ட்ரீமிங் தளத்தின் உரிமையாளராக உள்ளார். அல்லு அர்ஜுன் அதன் பிராண்ட் தூதராகவும் செயல்படுகிறார். ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ஹெல்த்கேர் ஸ்டார்ட்அப் நிறுவனமான கால்ஹெல்த் சர்வீஸிலும் குடும்பம் முதலீடுகளைக் கொண்டுள்ளது. இது அவர்களின் பல்வேறு வணிக நலன்களை மேலும் நிரூபிக்கிறது. சுருக்கமாகக் கூறினால், அல்லு அர்ஜுன் ஒரு வெற்றிகரமான நடிகர் மட்டுமல்ல, ஒரு புத்திசாலித்தனமான வணிகர் என்பதையும் நிரூபித்துள்ளார். ஆனால் இந்த வழக்கு அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையும், பிஸ்னஸையும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,

Posted by - December 13, 2025 0
அன்று நீதிமன்றம் ஏறி அயோத்தி ராமர் கோயிலுக்காக நீதி கேட்டோம். இன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற மக்கள் நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை உள்ளது”…

அசாமில் மார்க்கெட்டில் தீவிபத்து- 150 கடைகள் சேதம்

Posted by - February 17, 2023 0
அசாம் மாநிலம் ஜோர்ஹாட் நகரின் மையப் பகுதியில் உள்ள சவுக் பஜார் மார்க்கெட்டில் நேற்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடைகள் நெரிசலாக இருந்ததால்…

நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் காலமானார்..

Posted by - August 15, 2025 0
நாகாலாந்து ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான இல. கணேசன் காலமானார். அவருக்கு வயது 80. சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பங்குச் சந்தை சரிவிற்குப்பின் கவனம் பெற்ற பங்குகள்.. இன்னைக்கு கவனிக்காம விட்ராதீங்க!

Posted by - August 6, 2024 0
அமெரிக்க, ஜப்பான் பங்குச் சந்தைகளின் வீழ்ச்சியை தொடர்ந்து இந்திய பங்குச் சந்தை கடும் இழப்பை ஆகஸ்ட் 5 அன்று சந்தித்தது. இந்நிலையில் இன்று சந்தையில் கவனம் பெறப்போகும்…

கேரளாவில் கடந்த 2 ஆண்டுகளில் 15,325 விஷ பாம்புகள் பிடிபட்டன

Posted by - February 20, 2023 0
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் காடுகள் நிறைந்த பகுதியாகும். இங்குள்ள மலைகிராமங்களில் பாம்புகள் அதிக அளவில் காணப்படுகின்றன. விஷ பாம்புகள் கடித்து பலர் பலியாகி உள்ளனர். இந்த பாம்புகளை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *