வெண்டைக்காய்.. சர்க்கரை நோயாளி வெறும் வயிற்றில் இதை குடிச்சாலே போதும்.. வெண்டையின் ஆச்சரிய மருத்துவம்

228 0

சென்னை:

வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை சிறப்பாக செயல்படும், ஞாபக சக்தி அதிகரிக்கும் என்ற பல நன்மைகள் உள்ளது என்றாலும், வெண்டைக்காயை எப்படி சமைக்க வேண்டும் தெரியுமா?

புரோட்டீன், நார்ச்சத்து, கொழுப்பு, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், வைட்டமின் C, B1, B2, B6, B9 சத்துக்கள் நிறைந்துள்ளன. சர்க்கரை நோயாளிகளுக்கு வெண்டைக்காய் போல சிறந்த உணவு வேறில்லை..

எதிர்ப்பு சக்திகள்:

எதிர்ப்பு சக்தி நிறைந்த இந்த காயை, உடல் எடை குறைப்போரும் பயன்படுத்தலாம். காரணம், 100 கிராம் வெண்டைக்காயில், வெறும் 35 கிலோ கலோரிகள் இருக்கிறதாம்..

ஞாபக ரத்த சோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழிவு வயிற்றுப்புண், பார்வை குறைபாடு இன்னும் ஏகப்பட்ட நோய்களை இந்த வெண்டைக்காய் தீர்க்கிறது.

வழவழ காய்:

வெண்டைக்காயின் ஸ்பெஷாலிட்டியே அதன் வழவழப்புத்தன்மைதான்.. ஆனால், பலருக்கும் அந்த வழவழப்பு பிடிப்பதில்லை. அந்த வழவழப்பு இருப்பதாலேயே நிறைய பேர் வெண்டைக்காயை தவிர்த்து விடுவார்கள். சிலர் அந்த வழவழப்பு போகும்வரை வெறும் வாணலில் வதக்கிவிட்டு, அதற்கு பிறகு சமையலுக்கு வெண்டைக்காயை பயன்படுத்துவார்கள்.

உண்மையை சொல்லப்போனால், அந்த வழவழப்புத்தன்மையில்தான், வெண்டைக்காயின் மொத்த மருத்துவ பலன்களும் மறைந்திருக்கிறதாம்.. முக்கியமாக, நார்ச்சத்து இந்த வழவழப்பில்தான் உள்ளது.. அல்சர், வயிற்றுப்புண் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த வழவழ நார்ச்சத்து மருந்தாக உதவுகிறது..

மலச்சிக்கல்:

வெண்டைக்காயிலுள்ள பெக்டின் (Pectin) மற்றும் கோந்துத்தன்மையே இந்த வழவழப்புக்கு காரணமாக உள்ளது. பெக்டின் + கோந்துப்பொருள் கரையும் நார்ச்சத்து நிறைந்தது என்பதால், ரத்தத்தில் கொழுப்பு, பித்த நீர் அதிகரிக்காமல் தடுக்கச் செய்துவிடுகிறது. அத்துடன், மலச்சிக்கல் பிரச்சனையையும், வயிறு உபாதைகளையும் இந்த வழவழ வெண்டைக்காய்தான் போக்குகிறது. அளவுக்கு அதிகமான ஆண்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ள வெண்டைக்காயில், கரையும் நார்ச்சத்துக்கள் அதிகம்..

இந்த நார்ச்சத்துக்கள்தான் கொலஸ்ட்டிராலின் அளவையும் கட்டுப்படுத்தி, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அபாய நோய்கள் ஏற்படுவதை தடுக்கின்றன.. வெண்டைக்காயில் உள்ள வைட்டமின் C, ஆஸ்துமாவை விரட்டக்கூடியது.. வெண்டைக்காயிலுள்ள ஃபோலேட், எலும்புகளை உறுதியாக்கக்கூடியது.. இந்த ஃபோலிக் அமிலம்தான், கர்ப்பிணிகளுக்கு மிகவும் தேவையான சத்துக்களாகும்.

நோயாளிகள்:

ஒரு டம்ளர் தண்ணீரில் வெண்டைக்காயை நறுக்கி சேர்த்து, இரவு முழுவதும் ஊற வைத்துவிட்டு, மறுநாள் காலையில் அந்த தண்ணீரை குடித்து வந்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. நீர்ச்சத்து, நார்ச்சத்து நிறைந்த இந்த தண்ணீரை குடித்து வந்தால், நீரிழப்பு தடுக்கப்படுவதுடன், உடல் குளுமை பெறும்… எலும்பு நோய் வராது..

எலும்புகளின் அடர்த்தியும் அதிகமாகும். அதேசமயம், வெண்டைக்காயில் ஆக்சலேட் நிறைய உள்ளதால், சிறுநீரகம், பித்தப்பை கற்களை வளர செய்துவிடும். அதனால், எவ்வளவு நன்மைகளை தந்தாலும், அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது கெடுதிதான்.. அதேபோல, அதிகமாக வெண்டைக்காயை வதக்க கூடாதாம்.. அப்படி வதக்கினால் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகிவிடுமாம்.

Related Post

தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னம் இதுவா? தேர்தலில் மெர்சல் காட்ட விஜய் மாஸ்டர் ப்ளான்!

Posted by - June 21, 2025 0
தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்டோ சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்தை அணுக அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் முடிவு செய்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும்…

முதல்வர் மருந்தகம் துவங்குவது எப்படி… B.Pharm / D.Pharm படித்தவர்களுக்கு செம்ம சான்ஸ்…

Posted by - November 8, 2024 0
முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்களுக்கு விண்ணப்பிக்கும் முறை குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மருந்தகங்கள் துவங்குவது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இத்திட்டத்தினை சிறப்பாகச் செயல்படுத்துவது தொடர்பாக…

கூட்டணிக்கு 40.! கூட்டணிக்கு 40.! – தேமுதிகவின் புதிய மந்திரம் இதுதான் – என்ன விஷயம் தெரியுமா.?

Posted by - June 17, 2025 0
2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பாக தேமுதிக ஒரு முக்கிய முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது. அதன் வெளிப்பாடு தான் கூட்டணிக்கு 40 என்ற புதிய மந்திரம். அது என்ன…

‘பாரத் மாதா கி ஜே’ திமுக எம்பி பேசும்போது பாஜகவினர் கூச்சல்… மேடையில் எல்.முருகன்!

Posted by - December 4, 2022 0
கும்பகோணம் அருகே மத்திய இணையமைச்சர் முருகன் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் திமுக எம்.பி., கல்யாணசுந்தரம் பேசிக்கொண்டிருக்கும் போது, பாஜகவின் கூச்சலிட்ட சம்பவம் அங்கு சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா…

கழிப்பறை சுத்தம் செய்ய வைத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியை கைது

Posted by - December 3, 2022 0
மாணவர்களை கொண்டு கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை கீதாராணியை சஸ்பெண்டு செய்து தொடக்கக்கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டனர். தலைமறைவாக இருந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *