அதிமுகவில் இணைந்தது ஏன்?

114 0

அதிமுகவில் இணைந்த நாம் தமிழர் கட்சி பிரமுகர் காளியம்மாள்: ஆட்சி மாற்றம், மரண தண்டனை குறித்த பரபரப்பு பேச்சு!

நாம் தமிழர் கட்சியில் பணியாற்றி வந்த காளியம்மாள் ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு அதிமுகவில் இணைந்துள்ளார். அடிமட்டத் தொண்டர் ஒருவர் உயர் பதவிக்கு வர முடியும் என்பதால் அதிமுகவில் இணைந்துள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், காளியம்மாள் இன்று இணைந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

அதிமுகவில் சேர்ந்தது ஏன்?

’’வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், ஆட்சி மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.  விலைவாசிகள் கடுமையாக உயர்ந்திருக்கின்றன. அடிமட்டத் தொண்டர் ஒருவர் உயர் பதவிக்கு வர முடியும் என்பதால்தான் அதிமுகவில் இணைந்துள்ளேன். அதிமுகவில் இருந்து எனது அரசியல் பயணம் தொடரும்.

2013ஆம் ஆண்டு வரை தனியார் தொண்டு நிறுவனங்களில் பணியாற்றி வந்தேன். 2013 முதல் கடலோர மக்களுக்காகக் களத்தில் பணியாற்றி வந்தேன். அண்மையில் அரசியல் கட்சியில் இருந்துதான் விலகினேன். மக்கள் பணியைக் கைவிடவில்லை.

எனக்கும் அரசியல் தளத்தில் இருந்து கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டது. என் குழந்தைகளிடம் இந்த ஓராண்டாய் நேரம் செலவிட்டேன்.

கட்சியின் தலைமை முடிவு செய்தால், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவேன். தமிழ்நாட்டில் பெண் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு ஆகிய பிரச்சினைகள் உள்ளன.

மரண தண்டனை அளிக்க வேண்டும்

12 வயது, 14 வயது எனக் குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் கொடூரர்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும். நான் மரண தண்டனைக்கு எதிரானவள்தான். எனினும் இத்தகைய கயவர்களைக் கழுவில் ஏற்றினால்தான் குற்றங்கள் குறையும்.’’

இவ்வாறு காளியம்மாள் தெரிவித்தார்.

Related Post

கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?

Posted by - December 8, 2025 0
பணி நியமனங்களில் முறைகேடு விவகாரத்தில் 1,020 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக தெரிவித்துள்ள அமலாத்துறை அமைச்சர் கே என் நேரு மீது எப்ஐஆர் பதிவு செய்ய கோரி…

“பேச முடியாத அளவில் துயரத்தில் உள்ளோம்”- உருக்கமாக பேசிய ஆதவ் அர்ஜுனா

Posted by - October 11, 2025 0
த.வெ.க.வை முடக்கும் நோக்கில் செயல்படுவதாக அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளோம் என்று ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். த.வெ.க.வை முடக்கும் நோக்கில் செயல்படுவதாக அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளோம்…

“சபரீசன் ‘சூப்பர் சிஎம்’ ஆக செயல்படுகிறார்” – அண்ணாமலை குற்றச்சாட்டு

Posted by - April 18, 2026 0
கோவை: தமிழகத்தில் ‘சூப்பர் சிஎம்’ ஆக முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் செயல்படுகிறார் என அண்ணாமலை கூறினார். கோவை தெற்கு தொகுதியில் எம்எல்ஏ வானதிசீனிவாசன் மேற்கொண்ட சிறப்பு பணிகள்…

பிரபல தொலைக்காட்சியை வாங்கப்போகும் தவெக?

Posted by - January 21, 2026 0
தமிழ்நாட்டின் பிரபலமான செய்தி தொலைக்காட்சி ஒன்றை வாங்க தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மிகவும் தீவிரமாக…

”ஒன்று சேர், புரட்சி செய்” மோடில் பாஜக.. நவகிரகங்கள், பீகார் ஃபார்முலா?தமிழகத்தில் சாத்தியமா?

Posted by - November 17, 2025 0
பீகார் சட்டமன்ற தேர்தலின் போது முன்னெடுத்த திட்டங்களை அப்படியே, தமிழ்நாடு தேர்தலுக்கும் பின்பற்ற பாஜக திட்டமிட்டுள்ளதாம். எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து, திமுகவை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *