அதிமுக ஆட்சியை காப்பாற்றியது மத்திய பாஜக அரசுதான்: பழனிசாமி தகவல்

160 0

சென்னை: அதி​முக ஆட்​சியை காப்​பாற்​றியது மத்​திய பாஜக அரசு​தான். அதற்கு நன்​றி​யுடன் இருக்​கிறோம் என்று அண்ணா பிறந்​த​நாள் விழா பொதுக்​கூட்​டத்​தில் பழனி​சாமி தெரி​வித்​துள்​ளார்.

அதி​முக சார்​பில் அண்​ணா​வின் 117-வது பிறந்​த​நாள் விழா பொதுக்​கூட்​டம், வடபழனி​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் கட்​சி​யின் பொதுச்​ செயலாளர் பழனி​சாமி பங்​கேற்று ஏழை, எளியோ​ருக்கு நலத்திட்ட உதவி​களை வழங்​கி​னார். கூட்​டத்​தில் அவர் பேசி​ய​தாவது: கடமை, கண்​ணி​யம், கட்​டுப்​பாடு என்ற தாரக மந்​திரத்தை நமக்கு போதித்​தவர் பேரறிஞர் அண்​ணா.சிறந்த நுண்​ணறி​வு, எழுத்​து, மொழிப் புலமை, மேடைப் பேச்​சு, அரசியல் நாகரி​கம், தொண்​டர்​களை ஈர்க்​கும் அன்​பு, போராட்ட குணம், பகுத்​தறிவு சிந்​தனை, ஆளு​மைத்​திறன், தலை​மைப் பண்​பு,எளிமை​யான வாழ்வு என அனைத்​தி​லும் அன்​னாந்து பார்க்​க வைக்கக் கூடிய​வர்​தான் அண்​ணா. ஏழை​யின் சிரிப்​பில் இறைவனை காண்​போம் என்​றார். அவரது மறைவுக்கு பிறகு, அவரது கனவு​களை நனவாக்க ஏராள​மான திட்​டங்​கள் எம்​ஜிஆர் கொண்​டு​வந்​தார்.2011 முதல் 2021 வரையி​லான அதி​முக ஆட்​சி, பொற்​கால ஆட்​சி. இதில் 17 அரசு மருத்​து​வக் கல்​லூரி​கள் திறக்​கப்​பட்​டன. திமுக​வின் 4 ஆண்டு ஆட்​சி​யில் 1 மருத்​து​வக் கல்​லூரியைக்​கூட கொண்​டு​வர​வில்​லை. திமுக ஆட்​சி​யில் மக்​களுக்கும், காவலர்​
களுக்​கும் பாது​காப்பு இல்​லை. இந்த ஆட்​சி​யில் சட்​டம்​-ஒழுங்கு சீர்​கெட்​டுள்​ளது. யாருக்​கும் பாது​காப்பு இல்​லை. 6 காவலர்​கள் கொல்​லப்​பட்​டுள்​ளனர். ஏழைகளின் வறுமையை பயன்​படுத்தி சிறுநீரகத்தை திருடு​கின்​றனர்.

அதி​முக ஆட்​சிக்கு வந்​ததும், திருமண உதவி திட்​டம், அம்மா இரு சக்கர வாகன திட்​டம், மடிக்​கணினி திட்​டம் ஆகியவை மீண்​டும் செயல்​படுத்​தப்​படும். இன்​றைக்கு சிலர் அதி​முகவை அழிக்​கப் பார்க்​கிறார்​கள். அதி​முகவை எவராலும் ஒன்​றும் செய்ய முடி​யாது. எங்​களுக்கு ஆட்சி அதி​காரத்​தை​விட தன்​மானம்​தான் முக்​கி​யம். அதை இம்​மியள​வும் விட்​டுக் கொடுக்க மாட்​டேன்.

அதி​முக ஆட்​சியை கவிழ்க்க வாக்​களித்​தவர்​களை​யும் மன்​னித்து துணை முதல்​வர் பதவி கொடுத்​தோம். அவர்​கள்​தான் அதி​முக​வினரின் கோயி​லான எம்​ஜிஆர் மாளி​கையை தாக்​கினர். இவர்​களை எல்​லாம் கட்​சி​யில் சேர்க்க வேண்​டு​மா? நான் எதற்​கும் அஞ்ச மாட்​டேன். யாரும் என்னை மிரட்​டிப் பார்க்க முடி​யாது.

சிலர் அதி​முகவை கபளீகரம் செய்து ஆட்​சியை கைப்​பற்​றப் பார்த்​தார்​கள். அப்​போது ஆட்​சியை காப்​பாற்​றிக் கொடுத்​தது மத்​திய ஆட்​சி​யில் இருக்​கும் பாஜக​தான்​. அவர்​களுக்கு நன்​றியோடு இருக்​கிறோம். கூட்​டணி சேரு​வது என்​பது, கட்சி ஆட்​சிக்கு வர வேண்​டும். எதிரி​களை வீழ்த்த வேண்​டும் என்​ற அடிப்​படை​யில் தான். அதி​முகவை காப்​பாற்ற அனை​வரும் துணிந்து நிற்க வேண்​டும். அதி​முக​வுக்கு எவர் துரோகம் செய்​தா​லும் நடுரோட்​டில் நிற்​பார்​கள், விலாசம் இல்​லாமல் போய்​விடு​வார்​கள். இவ்​வாறு அவர் பேசினார்.

Related Post

”காக்கா, தற்குறி கூட்டம்.. மழையில பேசுவியா?” – விஜயை அடித்த சீமான், திருப்பிக் கொடுக்கும் தவெக

Posted by - September 15, 2025 0
தவெக தலைவர் விஜய்க்கு கூடியது காகங்கள் மற்றும் தற்குறி கூட்டம் என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். மக்கள் பிரச்னைகளை கூட…

எதிர்கட்சிகளுக்கு அதிகமான கட்டுபாட்டுகளை விதிப்பதும் தான் திராவிட மாடலா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Posted by - September 13, 2025 0
ஆளும் கட்சி கூட்டணி கட்சிகளுக்கு சிறப்பு அனுமதியும், எதிர்கட்சிகளுக்கு அதிகமான கட்டுபாட்டுகளை விதிப்பதும் தான் திராவிட மாடல் அரசு என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்…

அடித்துக் கொள்ளும் ராமதாஸ் – அன்புமணி ஆதரவாளர்கள்.. மாம்பழ சின்னத்துக்கே சிக்கல் வந்துடுமோ?

Posted by - September 12, 2025 0
அன்புமணியை கட்சியில் இருந்து ராமதாஸ் நீக்குவதாக அறிவித்துள்ள நிலையில், ராமதாஸ் – அன்புமணி ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களிலும், நேரிலும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற…

தீபாவளிக்கு மழை உறுதி! 20 மாவட்டங்களுக்கு அலர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்

Posted by - October 18, 2025 0
வங்கக்கடலில் அக்டோபர் 24-ஆம் தேதி உருவாகும் என முன்பதாக கூறப்பட்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தற்போது அக்டோபர் 21-ஆம் தேதியே உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. தீபாவளி திங்களன்று…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *