இரவில் மல்லிகை வாசனை, கொலுசு சத்தம்.. சிசிடிவியில் பதிவான ஆவி?… பீதியில் மக்கள்..!

268 0

செருப்பு அணிந்து நடக்கும் சத்தமும், யாரோ அழுவது போன்ற சத்தமும் நள்ளிரவில் கேட்பதாக தகவல் பரவியது.

திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் பெரிய காலனி பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா. திருவள்ளூர் ரயில் நிலையத்தில் ரயிலுக்குள் தவறி விழுந்து கடந்த 24-ம் தேதி உயிரிழந்து விட்டார். மல்லிகா உடலை அடக்கம் செய்த இரண்டு தினங்களுக்கு பிறகு நடந்த சம்பவங்கள் கிராமத்தையே தூக்கம் இல்லாமல் செய்துள்ளது.

மல்லிகாவின் எதிர் வீட்டில் வசிக்கும் ராபர்ட், தனது வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தியுள்ளார். அந்த சிசிடிவியில் மல்லிகாவின் ஆவி உலாவுவது பதிவாகி இருப்பதாக தகவல் பரவ கிராமமே பரபரப்பாகி விட்டது. சிசிடிவியில் நிழல் போன்ற கருப்பு நிற உருவம் பதிவாகியுள்ளது. மல்லிகாவின் வீட்டிற்குள் இருந்து வெளிவரும் கருப்பு நிற உருவம், அந்த தெருவை சுற்றி சுற்றி வருகிறது.

தலையை சீவிய படி இளம்பெண் ஒருவர் தெருவில் நிற்க, அந்த பெண்ணை சுற்றியே கருப்பு நிற உருவமும் நிற்பது போல சிசிடிடி காட்சியில் பதிவாகியுள்ளது.

இரவில் சாதாரணமாக தெரு நாய்கள் குரைப்பதையும் சிசிடிவியுடன் சேர்த்து தகவல் பரவ, பேய் நடமாடுகிறது என அக்கிராமமே நம்ப ஆரம்பித்து விட்டது. இதனால் அப்பகுதி மக்கள் தனியாக வெளியே செல்லவே அச்சப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். இரவில் வெளியே வரவே அஞ்சுகின்றனர்.

இரவு நேரத்தில் மட்டுமின்றி பகலிலும் அவ்வழியாக செல்லும் போது ஏதாவது சத்தம் கேட்டால் ஆவியாக இருக்குமோ என்று பயப்படுகின்றனர். சிசிடிவி காட்சிகள் மின்னல் வேகத்தில் சமூக வலைதளங்களில் பரவ, பயத்தில் வீட்டிற்கு உள்ளேயே முடங்கி விட்டனர்.

மல்லிகா வசித்த தெருவில் மல்லிகை பூ வாசனை வருவதாகவும், கூடவே ஜல் ஜல் என கொலுசு சத்தமும் கேட்பதாக சிலர் கொளுத்தி போட, அப்பகுதியே பரபரப்பாகி விட்டது. செருப்பு அணிந்து நடக்கும் சத்தமும், யாரோ அழுவது போன்ற சத்தமும் நள்ளிரவில் கேட்பதாக தகவல் பரவ தூக்கத்தை தொலைத்து நிற்கின்றனர் அப்பகுதி மக்கள்.

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என ஒட்டுமொத்த மாவட்ட அதிகாரிகளும் இது குறித்து பேச ஆரம்பித்தனர். ஆனால், உண்மை தலைகீழ். ராபர்ட் என்பவர் பொறுத்திய சிசிடிவி கேமிரா மீது சிலந்தி வலை கட்டியிருந்ததே பேய் நடமாட்டம் போல காட்சியளிக்க காரணம் என்பது தெரியவந்தது.

இதனால், அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் சிசிடிவி காட்சிகளை எப்படி பரவ விட்டாய் என ராபர்ட் மீது கோபமடைந்துள்ளனர். பேய் பயத்தில் கிராம மக்கள் கிலியான விவகாரம் இப்போது திருவள்ளூர் மாவட்டத்தில் பேசுபொருளாகியுள்ளது.

Related Post

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் – வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

Posted by - March 25, 2024 0
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2…

“கட்சி தொடங்கும் முன்பே தலைவர், பொதுச் செயலாளர் தேர்வா?! தரமாக கலக்கும் தலைவர் விஜய்!”

Posted by - January 27, 2024 0
தளபதி விஜய் நேற்று விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை செய்தார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி விஜய் அரசியல் கட்சி அமைப்பது…

ஏது பாஜகவிற்கு ஆட்சியில் பங்கா? அதெல்லாம் கிடையாது – எடப்பாடி பழனிசாமி தடாலடி விளக்கம்

Posted by - April 16, 2025 0
பாஜகவிற்கு ஆட்சியில் எல்லாம் பங்கு கிடையாது என, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். பாஜக உடன் கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி என்று அமித் ஷா…

சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் – உயர் நீதிமன்றம் அதிரடி

Posted by - November 6, 2023 0
எந்த மதத்திற்கு எதிராக பேசுவதற்கும் நீதிமன்றம் அனுமதிக்காது – நீதிபதி. சனாதான ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு ஆகியோர்…

இந்தியை படிக்காதே என்று கூறவில்லை, திணிக்காதே என்றுதான் கூறுகிறோம்” ஸ்டாலின் மடல்…

Posted by - February 25, 2025 0
தமிழ் மொழியின் முக்கியத்துவம் குறித்தும், இந்தி திணிப்பிற்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் எனக் கூறியும், திமுக தொண்டர்களுக்கு தொடர் கடிதம் ஒன்றை தொடங்கியுள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *