காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை முன் தாக்கப்பட்ட விவசாயி!

158 0

கோவையில் நடைபெற்ற ஆனைமலை – நல்லாறு திட்ட கோரிக்கை மாநாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை முன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயி தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூலூரை அடுத்த செஞ்சேரிபுத்தூர் பகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆனைமலை – நல்லாறு திட்ட கோரிக்கை மாநாடு நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, கட்சி நிர்வாகிகள், விவசாய சங்கத்தினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் மாநாட்டின் தீர்மானங்களை வாசித்தபோது குறுக்கிட்ட விவசாயி ஒருவர், மதுபோதையில் தீர்மான நகலைக் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அவருக்கு தீர்மான நகல் வழங்க மறுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த அவர்,
“ஆனைமலை – நல்லாறு திட்டத்திற்காக உண்மையாகவே போராடினீர்களா? சத்தியம் செய்யுங்கள்” எனக்கூறி வாக்குவாதம் செய்துள்ளார்.

அப்போது அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் அவரைப் பிடித்து அப்புறப்படுத்திய நிலையில், அங்கு வந்த மற்றொரு நபர் மதுபோதையில் இருந்த விவசாயியை கடுமையாக தாக்கினார். பின்னர் அவர்களை அங்கிருந்த போலீசார் அப்புறப்படுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் தாக்கப்பட்டவர் விவசாயியான சுரேஷ் என்பதும், அவரை தாக்கிய நபர் சுரேஷின் சகோதரர் என்பதும் தெரியவந்தது.

Related Post

“நானும் முருக பக்தன்தான்” திருமா சொன்ன திடீர் கருத்து.. முருகர் மாநாட்டில் பங்கேற்பா?

Posted by - June 19, 2025 0
மதுரையில் முருகர் பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்த அழைப்பு குறித்த கேள்விக்கு விசிக தலைவர் திருமா பதில் அளித்துள்ளார். பள்ளிக்காலத்தில் தானும் முருகனை வழிபட்டு பக்தனாக…

திமுகவுக்கு கவுன்ட் டவுன்..

Posted by - January 23, 2026 0
 தமிழ்நாட்டை ஊழலற்ற மாநிலமாக மாற்ற வேண்டும். இப்போது திமுகவின் முடிவுரைக்கான கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டது என்று பிரதமர் மோடி பேசினார். தமிழ் நாட்டை திமுக அரசிடம் இருந்து விடுவித்து…

மாம்பழம் விற்பது போல கூவி கூவி ஆட்களைச் சேர்த்து வருகின்றனர் திமுகவினர் : அண்ணாமலை

Posted by - July 18, 2025 0
மாம்பழம் விற்பது போலக் கூவி கூவி ஓரணியில் தமிழ்நாடு என ஆட்களை திமுக சேர்த்து வருவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இத்தொடர்பாகத் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பேசியவர்,…

செஞ்சி நாதக கூட்டத்தில் செய்தியாளர்களை பவுன்சர்கள் தாக்க முயற்சி – பேச்சை நிறுத்திவிட்டு இறங்கிய சென்ற சீமான்!

Posted by - August 18, 2025 0
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நாதக பொதுக் கூட்டத்தில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை பவுன்சர்கள் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. செஞ்சிக்கோட்டையை மராட்டிய மன்னர்கள் ஆண்ட கோட்டை…

விஜய்க்கு சவால் விட்ட எடப்பாடி பழனிசாமி!

Posted by - February 4, 2026 0
தவெக தலைவர் விஜய் அதிமுகவை ஊழல் கட்சி என குறிப்பிட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விஜய்க்கு கள நிலவரம் தெரியவில்லை என கூறியுள்ளார்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *