சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்: 3 நாள் ஓய்வுக்கு பிறகு வழக்கமான பணிகளை மேற்கொள்வார்

147 0

சென்னை: சென்னை அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் இருந்து முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று மாலை டிஸ்​சார்ஜ் செய்யப்பட்டார். 3 நாள் ஓய்​வுக்கு பிறகு வழக்​க​மான பணி​களை மேற்​கொள்​ளவுள்​ளார். திமுக தலை​வரும், தமிழக முதல்​வருமான மு.க.ஸ்​டா​லின் கடந்த 21-ம் தேதி காலை​யில் வழக்​க​மான நடைப​யிற்சி மேற்​கொண்ட போது அவருக்கு லேசான தலைச் சுற்​றல் ஏற்​பட்​டது. இதையடுத்​து, காலை 10.50 மணி​யள​வில் அவர் சென்னை ஆயிரம்​விளக்கு பகுதி கிரீம்ஸ் சாலை​யில் உள்ள அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார்.

அங்கு அவருக்கு பல்​வேறு மருத்​துவ பரிசோதனை​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன. கடந்த 24-ம் தேதி மேற்​கொள்​ளப்​பட்ட கூடு​தல் பரிசோதனை​யில் அவருடை தலைசுற்​றல் பிரச்​சினைக்​கு, அவரது இதய துடிப்பு சீரற்று இருந்​ததே காரணம் என்​பது தெரிய​வந்​தது. இதய இடை​யீட்டு சிகிச்சை நிபுணர் ஜி.செங்​கோட்​டு​வேலு தலை​மையி​லான மருத்​து​வர் குழு​வினர் முதல்​வருக்கு இதய துடிப்பை சீராக்​கு​வதற்​கான சிகிச்​சையை மேற்​கொண்​டனர்.தொடர்ந்து மேற்​கொள்​ளப்​பட்ட ஆஞ்​சியோ பரிசோதனை​யில் வேறு எந்த பாதிப்​பும் இல்லை என்​பது உறு​தி​யானது. முதல்​வரின் உடல்​நிலையை மருத்​து​வர்​கள் தொடர்ந்து கண்​காணித்து வந்​தனர். மருத்​து​வ​மனை​யில் இருந்​த​வாறு அரசு அலு​வல்​களை முதல்​வர் மேற்​கொண்டு வந்​தார்.இந்​நிலை​யில், நேற்று மாலை சுமார் 6 மணி​யள​வில் மருத்​து​வ​மனை​யில் இருந்து முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் டிஸ்​சார்ஜ் செய்​யப்​பட்​டார். மருத்​து​வ​மனை வளாகத்​தில் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், அமைச்​சர் துரை​முரு​கன் உள்​ளிட்ட பலர் முதல்​வரை வரவேற்​றனர். மருத்​து​வ​மனை​யில் இருந்து தேனாம்​பேட்டை சித்​தரஞ்​சன் சாலையில் உள்ள இல்​லத்​துக்​குச் சென்ற முதல்​வரை, சாலை​யின் இரு​புற​மும் திரண்டு இருந்த பொது​மக்​கள், கட்​சி​யினர் வரவேற்​றனர்.

இதைத்தொடர்ந்து முதல்​வர் ஸ்​டா​லின் வெளியிட்ட சமூக வலை​தளப்​ப​தி​வு: நலம் பெற்று வீடு திரும்​பினேன். மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டிருந்த போது அக்​கறை​யுடன் விசா​ரித்​து, நலம் பெற வாழ்த்​திய அனைத்து அரசி​யல் இயக்க தலை​வர்​கள், மக்​கள் பிர​தி​நி​தி​கள், நீதிப​தி​கள், அரசு அதி​காரி​கள், திரை கலைஞர்​கள் என் உயிரோடு கலந்​திருக்​கும் அன்பு உடன்​பிறப்​பு​கள் உள்​ளிட்ட தமிழக மக்​கள் அனை​வருக்​கும் எனது நெஞ்​சார்ந்த நன்​றி.

மருத்​து​வ​மனை​யில் சிறப்​பான சிகிச்சை அளித்​து, நான் விரைந்து நலம்​பெற உறு​துணை​யாய் இருந்த மருத்​து​வர்​கள் மற்​றும் செவிலியர்​கள் உள்​ளிட்ட அனை​வருக்​கும் மீண்​டும் அன்​பும், நன்​றி​யும். உங்​களுக்​காக உழைப்பை வழங்​கும் என் கடமையை என்​றும் தொடர்​வேன். இவ்​வாறு தெரி​வித்​துள்​ளார்.

முன்​ன​தாக, அப்​போலோ மருத்​து​வ​மனை மருத்​துவ சேவை​கள் இயக்​குநர் மருத்​து​வர் பி.ஜி.அனில் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில், “மருத்​து​வர் செங்​குட்​டு​வேலு தலை​மையி​லான மருத்​து​வர் குழு அளித்த சிகிச்சை முடிந்து முழு​மை​யாக குணமடைந்த முதல்​வர் இல்​லம் திரும்​பு​கிறார். முதல்​வர் நலமாக இருக்​கிறார். 3 நாள் இடைவெளிக்கு பின்​னர் வழக்​க​மான பணி​களை மேற்​கொள்​ளு​மாறு அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது” என்​று தெரிவித்​துள்​ளார்.

Related Post

அரசாணிக்காய்.. அல்சரை அண்ட விடாது காக்கும் அற்புத காய்.. சர்ருனு உடல்எடை குறையும் பாருங்க.. செம ஜூஸ்

Posted by - November 10, 2023 0
சென்னை: அரசாணிக்காய் இருந்தால் போதும்.. அல்சரை நம்மிடம் அண்டவிடாமல் பாதுகாக்கும்.. அந்த அளவுக்கு நன்மைகளை கொண்டதுதான் இந்த அரசாணிக்காய். அரசாணிக்காயை, பெரும்பாலும் பரங்கிக்காய் என்பார்கள்.. சாம்பல் பூசணி,…

குழந்தைகள் கெட்ட வார்த்தைகளை கற்றுக்கொள்ளாமல் கட்டுப்படுத்த பெற்றோர் செய்ய வேண்டிய விஷயங்கள்..!

Posted by - June 18, 2025 0
நீங்கள் எப்பேர்ப்பட்ட நல்ல சூழலில் உங்கள் குழந்தையை வளர்த்தாலும் சரி, கெட்ட அல்லது மோசமான வார்த்தைகளை அவர்கள் கற்று கொள்வதை உங்களால் முற்றிலும் தடுக்க முடியாது என்பதே…

எம்.ஜி.ஆர் முதல் எடப்பாடி பழனிசாமி வரை.. அதிமுக பொதுச் செயலாளர்கள் லிஸ்ட்..!

Posted by - March 28, 2023 0
அதிமுகவின் 8-வது பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுள்ள நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் இதுவரை பொதுச் செயலாளர் இருக்கையில் அமர்ந்தது யார் யார் என்று தற்போது பார்க்கலாம்.…

ஈபிஎஸ் vs அண்ணாமலை : உழைக்காமல் தலைவரான ஒரே நபர்.. எம்.எல்.ஏக்களுக்கு பணம் கொடுத்து முதலமைச்சரானவர் .. வலுக்கும் வார்த்தைபோர்

Posted by - August 26, 2024 0
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இடையேயான வார்த்தைப் போர் மீண்டும் வலுத்துள்ளது. கூட்டணியில் இருந்தபோது அதிமுக நல்ல கட்சியாகத் தெரிந்த…

“குடும்பத்திற்காக டெல்லி செல்கிறார் ஸ்டாலின்“ எல்லாம் ‘தம்பி‘ படுத்தும் பாடு – வறுத்தெடுக்கும் இபிஎஸ்

Posted by - May 21, 2025 0
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற் முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியான நிலையில், தன்னுடைய குடும்பத்திற்காகவே அவர் டெல்லி செல்வதாக சாடியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *