தத்தளிக்கும் (தென்)தமிழகம்…ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டியது..

309 0

வரலாற்றில் இல்லாத வகையில் தென் மாவட்டங்களில் மழை பெய்துள்ளதாக தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

சென்னை கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்த தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளதாக கூறினார். ஒரு சில இடங்களில் மேகவெடிப்பு போல மழை பெய்துள்ளதாக குறிப்பிட்டார். வரலாற்றில் இல்லாத அளவுக்கு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் மழை பெய்துள்ளதால் பாதிப்பு அதிகமாக இருப்பதாக தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா குறிப்பிட்டார்.நெல்லை மாவட்டத்தில் உடனடியாக வெள்ளம் வடிந்துவிடும் என்றும், ஆனால், தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளநீர் வடிய தாமதமாகும் எனவும் தலைமைச் செயலாளர் கூறி உள்ளார். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புபடையின் 17 குழுக்களில் 425 வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் மேலும் 2 குழுக்கள் தூத்துக்குடிக்கு செல்வதாகவும் கூறினார்.உணவு விநியோகம் செய்ய சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் உதவி கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள தலைமைச் செயலாளர்,  1070 என்ற இலவச எண்ணில் பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்தார்.  12 ஐஏஎஸ் அதிகாரிகள், மூத்த அதிகாரிகள் என பலர் தென் மாவட்டங்களில் முகாமிட்டுள்ளதாகவும், மீட்பு பணிகளை அவர்கள் முடுக்கி விட்டுள்ளதாகவும் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா குறிப்பிட்டார்.

Related Post

மருத்துவ கல்லூரி மாணவரிடம் ரூ.7¾ லட்சம் ஆன்லைன் மோசடி- சைபர் கிரைம் போலீசார் விசாரணை

Posted by - July 10, 2023 0
புதுச்சேரி: புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்தவர் சசிதரன் (வயது 23). இவர் புதுவை அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு…

ஸ்கூட்டர் மீது மோதிய திருமாவளவன் கார்! தட்டிக்கேட்ட வழக்கறிஞரை அடித்து துவைத்த விசிகவினர்!

Posted by - October 8, 2025 0
சென்னை உயர்நீதிமன்றம் அருகே தனது ஸ்கூட்டர் மீது திருமாவளவன் கார் மோதியதை தட்டிக் கேட்ட வழக்கறிஞரை விசிகவினர் சரமாரியாக தாக்கினார்கள். இதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார். விடுதலை…

10 மாவட்டங்களுக்கு இன்றும் டேஞ்சர்.! எந்த எந்த பகுதி தெரியுமா.? வெதர்மேன் விடுத்த அலர்ட்

Posted by - November 24, 2025 0
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக…

உரையை வாசிக்காமலேயே வெளியேறிய ஆளுநர் – சட்டப்பேரவையில் நடந்தது என்ன?

Posted by - January 6, 2025 0
ஆளுநர் ஆர்.என்.ரவி, அவர்களிடம், ”தேசிய கீதம் இசைக்க வேண்டும். தேசிய கீதத்துக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும். தேசிய கீதத்துக்கு அவமரியாதை செய்யக்கூடாது. அமைதியாக இருங்கள்” என்று…

தமிழ்நாட்டின் அவலநிலையை மறைக்கவே இந்த கார் ரேஸ் பந்தயம் – ஈபிஎஸ் விளாசல்..!!

Posted by - September 3, 2024 0
தமிழ்நாட்டின் அவலநிலையை மறைக்கவே இந்த கார் ரேஸ் பந்தயம் நடத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து ஈபிஎஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *