தத்தளிக்கும் (தென்)தமிழகம்…ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டியது..

339 0

வரலாற்றில் இல்லாத வகையில் தென் மாவட்டங்களில் மழை பெய்துள்ளதாக தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

சென்னை கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்த தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளதாக கூறினார். ஒரு சில இடங்களில் மேகவெடிப்பு போல மழை பெய்துள்ளதாக குறிப்பிட்டார். வரலாற்றில் இல்லாத அளவுக்கு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் மழை பெய்துள்ளதால் பாதிப்பு அதிகமாக இருப்பதாக தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா குறிப்பிட்டார்.நெல்லை மாவட்டத்தில் உடனடியாக வெள்ளம் வடிந்துவிடும் என்றும், ஆனால், தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளநீர் வடிய தாமதமாகும் எனவும் தலைமைச் செயலாளர் கூறி உள்ளார். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புபடையின் 17 குழுக்களில் 425 வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் மேலும் 2 குழுக்கள் தூத்துக்குடிக்கு செல்வதாகவும் கூறினார்.உணவு விநியோகம் செய்ய சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் உதவி கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள தலைமைச் செயலாளர்,  1070 என்ற இலவச எண்ணில் பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்தார்.  12 ஐஏஎஸ் அதிகாரிகள், மூத்த அதிகாரிகள் என பலர் தென் மாவட்டங்களில் முகாமிட்டுள்ளதாகவும், மீட்பு பணிகளை அவர்கள் முடுக்கி விட்டுள்ளதாகவும் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா குறிப்பிட்டார்.

Related Post

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அவலம்.

Posted by - December 12, 2025 0
மயிலாடுதுறை மாவட்ட தலைமை மருத்துவமனையில் நிலவும் சேவை குறைபாடுகளை களைய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை…

செல்போன் செயலியில் களம் இறங்கும் விஜய்.. 234 தொகுதிகளுக்கும் குறி… அரசியல் பிளான் என்ன?

Posted by - March 4, 2024 0
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி இந்த வாரம் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக்…

இன்றுடன் விடைபெறும் 2022.. புத்தாண்டுக்கு தயாராகும் மக்கள்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

Posted by - December 31, 2022 0
New Year 2023: புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு போலீசார் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர் 2022 ஆம் ஆண்டு இன்றுடன் விடை பெறும் நிலையில், புத்தாண்டை கொண்டாட மக்கள் உற்சாகமாக…

மூக்கிரட்டை இலை.. சிறுநீரக நோய்களை விரட்டியடிக்கும் மூலிகை நண்பன்.. அருமையான மூக்கிரட்டை கீரை சூப்

Posted by - December 11, 2023 0
சென்னை: சிறுநீரகத்தின் ஆரோக்கியம் காக்கக்கூடியது மூக்கிரட்டை கீரைகள்.. இந்த கீரையின் மற்ற பயன்கள் என்னென்ன? சத்தான மூக்கிரட்டை ரசம் எப்படி செய்வது தெரியுமா?மூக்கிரட்டையை, மூக்கரட்டை கீரை என்பார்கள்..…

பொது மாறுதல்களுக்கான ஆசிரியர் கலந்தாய்வு மே 15-ந்தேதி தொடங்குகிறது …..

Posted by - May 12, 2023 0
திடீரென நிர்வாக காரணங்களுக்காக கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. காலை 9.30 மணி முதல் மாலை 6 மணிவரை கலந்தாய்வு நடைபெறும். சென்னை: தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்கள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *