%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95

Annamalai Vs Amit Shah: பிளான் போட்ட அண்ணாமலை.? ‘U’ டர்ன் போட வைத்த அமித் ஷா; அடுத்து என்ன.?

55 0

அண்ணாமலை ஒரு திட்டத்தோடு டெல்லி சென்ற நிலையில், அங்கு அவருடைய முடிவை மாற்றும் அளவிற்கு ஒரு சம்பவம் நடந்துவிட்டதாக கூறப்படுகிறது. அது குறித்து இப்போது பார்க்கலாம்.

பாஜகவிலிருந்து விலகி, புதிய கட்சி தொடங்குவது குறித்து விளக்கமளிக்கவே அண்ணாமலை நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றதாக தகவல் வெயிானது. ஆனால், அங்கு சென்று, பாஜக தேசிய தலைவர் நிதின் நபினையும், மூத்த தலைவர் அமித் ஷாவையும் சந்தித்த பிறகு, அண்ணாலையின் முடிவை மறுபரிசீலனை செய்யும் அளவிற்கு ஒரு விஷயம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அது குறித்து இப்போது பார்க்கலாம்.

புறக்கணித்த பாஜக தலைமை – அதிருப்தி அடைந்த அண்ணாமலை

ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, கடந்த 2020-ம் ஆண்டு பாஜகவில் இணைந்து, தனது துணிச்சலான பேச்சுக்களால் இளம் தலைமுறையினரிடையே மிகவும் பிரபலமடைந்தார். இளைஞர்களை தன் பக்கம் ஈர்த்து அரசியல் ஆர்வத்தை தூண்டிய அவர், பாஜகவின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார்.

தனது அதிரடி செயல்பாடுகளுக்கு பெயர் போன அண்ணாமலையின் பின்னால் ஒரு கூட்டம் திரண்டது. அதனால் கிடைத்த பலனாக, கடந்த 2024-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில், தமிழ்நாட்டில் பாஜக 11 சதவீத வாக்கு வங்கியை பெற்றது. இதனால், அண்ணாமலையின் செல்வாக்கு உயர்ந்தது.

இந்நிலையில், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைப்பதற்காக, அதிமுகவின், குறிப்பாக எடப்பாடி பழனிசாமியின் நிர்பந்தத்தினால், அண்ணாமலையை தலைவர் பதவியிலிருந்து மாற்றி, நயினார் நாகேந்திரனை நியமித்தது பாஜக தலைமை.

மேலும், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ஆர்வமாக இருந்த அண்ணாமலைக்கு, அவர் கேட்ட கோவை வடக்கு அல்லது திருப்பூர் வடக்கு தொகுதிகளில் ஒன்றையும் வழங்காமல் அவரை புறக்கணித்தது பாஜக தலைமை. இதனால், அதிருப்தியில் வேறு தொகுதியில் தன்னால் போட்டியிட முடியாது எனக் கூறி விலகிக்கொண்டார் அண்ணாமலை.

2 தொகுதிகளக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தாலும், அண்ணாமலை பிரசாரத்திலும் சரிவர ஈடுபடாமல் இருந்த நிலையில், அவரை சமாதானப்படுத்தியது பாஜக மேலிடம். ஆனாலும், அவர் பாஜக தலைமை மீது அதிருப்தியிலேயே இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும், அவரை தனி கட்சி தொடங்குமாறு அவரது ஆதரவாளர்கள் கூறி வந்த நிலையில், சமீபத்தில் அவர் புதிய கட்சியை தொடங்கப் போவதாக தகவல் தீயாய் பரவியது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், 27 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக ஒரு தொகுதியில் மட்டுமே வென்ற நிலையில், வாக்கு வங்கியும் 2 சதவீதமாக சரியவே, அதனை விமர்சித்தார் அண்ணாமலை.

டெல்லி பயணம் – 2 நாட்களில் பதில் என பேட்டி

இந்த சூழலில், பாஜகவில் இருந்து விலகி, புதிய கட்சியை அண்ணாமலை தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அவர் நேற்று திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார். இது குறித்து, விமான நிலையத்தில் அவரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காமல், 2 நாட்களில் எல்லாவற்றையும் சொல்வதாக கூறிவிட்டுச் சென்றார் அண்ணாமலை.

டெல்லியில் நடந்தது என்ன.?

இதைத் தொடர்ந்து, இன்று டெல்லியில், பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினை சந்தித்து பேசிய அவர், தான் கட்சியிலிருந்து விலகுவது குறித்து விளக்கமளித்ததாக கூறப்பட்டது.

அதன் பின்னர், பாஜக மூத்த தலைவரான அமித் ஷாவை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தார் அண்ணாமலை. தான் கட்சியிலிருந்து சுமூகமான முறையில் விலக விரும்புவதாகவும், இனி தனது விருப்பப்படி இருக்கப் போவதாகவும் அண்ணாமலை பாஜக தலைவர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

 

ஆனால், அண்ணாமலையை கட்சியில் இருக்க வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு தேசிய அளவில் ஒரு பெரிய பொறுப்பை வழங்க ஆஃபர் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த அறிவிப்பு வரும் வரை, டெல்லியை விட்டு செல்ல வேண்டாம் என பாஜக தலைமை அவரிடம் கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், அடுத்து என்ன என்ற பரபரப்பான கேள்வி எழுந்துள்ளது. அண்ணாமலை தனது விருப்பப்படி புதிய கட்சியை தொடங்குவாரா.? அல்லது ‘U‘ டர்ன் அடித்து பாஜகவிலேயே நீடிப்பாரா.? பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Post

ChatGPT Image Feb 18 2026 10 50 45 AM

📢 தமிழ்நாடு நிதிநிலை: இலவசங்கள் அதிகரிப்பு – நிர்வாக அதிகாரிகளின் பொறுப்பு என்ன?

Posted by - February 18, 2026 0
📢 தமிழ்நாடு நிதிநிலை: இலவசங்கள், மானியங்கள் – நிர்வாகத்தின் பொறுப்பு என்ன? சென்னை:தமிழ்நாட்டில் சமூகநலத் திட்டங்கள் மற்றும் மானிய செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தின் கடன்…
Generated Image November 22 2025 10 34AM

பிரிந்தவர்களுக்கான ‘பி பிளான்’ – பழனிசாமியிடம் பேச வாசனை அனுப்பியதா பாஜக?

Posted by - November 22, 2025 0
பிரிந்து கிடக்கும் அதிமுக அணிகளை ஒருங்கிணைப்பதற்காக ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் சமயத்தில் இருந்து விடாமல் தொடர் முயற்சிகளை எடுத்து வரும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், இப்போதும்…

எல்லா பக்கமும் அணை கட்டிய ஈபிஎஸ்.. தவிக்கும் செங்கோட்டையன் – பதறியடித்து நோ சொல்ல காரணம் என்ன?

Posted by - September 26, 2025 0
அதிமுகவின் முழு அதிகாரமிக்க தலைமையாக எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்து இருப்பதால், போர்க்கொடி தூக்கிய செங்கோட்டையன் செய்வதறியாமல் தவித்து வருகிறாராம். எடப்பாடி பழனிசாமியை மேலும் பகைத்துக் கொள்ள வேண்டாம்…
tvk

Kolathur Election Result: ஸ்டாலினுக்கு நிகழ்ந்த துரோகங்கள்..! கொளத்தூரில் பின்தங்க காரணம் யார்? பேக் ஃபயரான விளம்பரங்கள்?

Posted by - May 4, 2026 0
Kolathur Election Results 2026: சட்டமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக கொளத்தூரில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து பின்தங்கியிருப்பது, தமிழ்நாடு அரசியலில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. Kolathur…

கரூர் துயர சம்பவம்! உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. 41 குடும்பங்களை தத்தெடுக்கும் விஜய்..

Posted by - October 13, 2025 0
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டபோது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் வீடியோகால் மூலம் விஜய் பேசினார்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *