dmk e1780464006645

துரதிருஷ்டவசமா..? – துரை வைகோ கருத்தால் துடி துடிக்கும் திமுக

102 0

“சட்டப்பேரவைத் தேர்தலில் மதிமுக வேட்பாளர்கள் துரதிருஷ்டவசமாக திமுக சின்னத்தில் போட்டியிட்டனர். அதனால் தவெக அரசுக்கு ஆதரவு கொடுக்க முடியவில்லை” – மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவின் இந்தக் கருத்தால் திமுக முகாம் தகித்துக் கொண்டிருக்கிறது.

தனது வீட்டுக்கு வந்த முதல்வர் விஜய்யை வைகோ வரவேற்று வழியனுப்பிய உற்சாகத்தைப் பார்த்ததுமே இவர் இனி நம் பக்கம் தங்கமாட்டார் என்ற முடிவுக்கு வந்துவிட்ட திமுக, அதற்காக கவலைப்படவும் இல்லை. ஆனால், துரை வைகோ இப்போது உதிர்த்திருக்கும் ‘துரதிருஷ்டவசமாக’ என்ற வார்த்தை அறிவாலயத்து மக்களை துடிக்கவைத்துக் கொண்டிருக்கிறது.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய திமுக-வின் மூத்த முன்னாள் அமைச்சர் ஒருவர் “எங்களுடைய தலைவர் தோற்றாலும் மதிமுக-வினரை உதயசூரியனில் நிற்கவைத்து துரதிருஷ்டவசமாக ஜெயிக்க வைத்துவிட்டோமே என நாங்கள் தான் இப்போது மறுகிக் கொண்டிருக்கிறோம். 2024 மக்களவைத் தேர்தலில் திருநாவுக்கரசருக்காக திருச்சி தொகுதியை பிடிவாதமாகக் கேட்டது காங்கிரஸ்.

அப்போது, மும்பை இண்டியா கூட்டணி கூட்டத்தில் இருந்த ராகுலிடம் நேரடியாகவே பேசி திருச்சியை மதிமுக-வுக்காக பெற்றுக் கொடுத்தவர் எங்கள் தலைவர் ஸ்டாலின். அப்போதே, ‘உயிரே போனாலும் தனி சின்னத்தில் தான் போட்டியிடுவேன்’ என்று சொன்னார் வைகோவின் மகன் துரை.

அதை மனதில் வைத்துக் கொண்டு திமுக-வினர் சுணங்கிவிடக் கூடாதே என கவலைப்பட்ட ஸ்டாலின், ‘துரையை ஜெயிக்க வெச்சுட்டுத்தான் நீங்க சென்னைக்கு வரணும்’ என கே.என்.நேருவிடம் சொன்னார். அதற்குத்தான் இப்போது தனது விசுவாசத்தைக் காட்டி இருக்கிறார் அந்தத் தம்பி. துரதிருஷ்டவசமாக சூரியனில் நின்றதால் 2 இடத்திலாவது ஜெயித்தார்கள். அதிர்ஷ்டவசமாக அவர்கள் விரும்பிய சின்னத்தில் நின்றிருந்தால் அட்ரஸே இல்லாமல் போயிருப்பார்கள்.

அப்பாவுக்கும் பிள்ளைக்கும் என்றைக்குமே திமுக-வை பிடிக்காது… அதிலும் குறிப்பாக, ஸ்டாலினைப் பிடிக்கவே பிடிக்காது என்பது எங்களுக்கும் தெரியாமல் இல்லை. மக்கள் நலக் கூட்டணியை எடுத்து மூடிய பிறகு, ‘போக்கிடமில்லாமல் நிற்கிறோம்’ என்று தான் திமுக-விடம் வந்தார் வைகோ. ‘எந்த நிபந்தனையும் இல்லாமல் வருகிறோம். எங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று ஸ்டாலினிடம் சொன்னவர், ‘உங்கக்கிட்டயே வந்துட்டேன்பா; என்னை ஏத்துக்கோங்க’ என்று அப்போது பேராசிரியரிடம் சொன்னதையும் இப்போது மறந்திருக்கலாம்.

மல்லை சத்யா, திருப்பூர் துரைசாமி, புலவர் செவந்தியப்பன் உள்ளிட்ட மதிமுக-வின் முக்கிய நிர்வாகிகள் 16 பேர் திமுக-வில் இணைய முன்வந்தபோது, ‘அண்ணன் வைகோ வருத்தப்படுவார்’ என்று சொல்லி அதை தவிர்த்தவர் ஸ்டாலின். திமுக ஆட்சியில் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு எந்த நல்லதுமே நடக்கவில்லை என்று வைகோவால் நெஞ்சில் கைவைத்துச் சொல்லமுடியுமா? ‘ஸ்டாலினுக்கு இறுதிவரை பக்கபலமாக இருப்பேன்’ என கருணாநிதிக்கு வைகோ கொடுத்த சத்தியவாக்கு இப்போது என்னாயிற்று? அதை மறந்துவிட்டதால் தான், ‘மதிமுக எம்எல்ஏ-வான கம்பம் ராமகிருஷ்ணனை திமுக-வில் சேர்த்தபோது குதிரை பேரம் நடக்கவில்லையா?’ என்று கேட்கிறாரா?

இவர்களுக்கு என்றைக்குமே அதிர்ஷ்டக் காற்று இருந்ததில்லை. இவர்களை அதிர்ஷ்டக்காரர்கள் ஆக்கியதே திமுக தான். 30 ஆண்டுகள் 3 மாதங்கள் எம்.பி-யாக இருந்திருக்கிறார் வைகோ. இதில் 29 ஆண்டுகள் அவர் திமுக எம்.பி-யாகத்தான் இருந்திருக்கிறார். இப்போது அவரது மகனும் திமுக தயவில் தான் எம்.பி-யாக இருக்கிறார். அப்படி எல்லாம் தங்களை அங்கீகரித்த கட்சிக்கே இவர்கள் விசுவாசமாக இல்லாதபோது வேறு யாருக்கு விசுவாசமாக இருக்கப் போகிறார்கள்?

Related Post

wetheleader

Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை..

Posted by - June 5, 2026 0
கடந்த 18 மாதங்களாக எனக்குள் இருந்த கருத்து வேறுபாடுகளை அமைதியாக சொல்லி கொண்டு வந்தேன். 2025 டிசம்பர் மாதமே நான் பாஜகவில் இருந்து விலகுவதாக தெரிவித்து அவர்களை…
unnamed

திமுக வார் ரூமில் ஓய்வு பெற்ற காவல்துறை உயரதிகாரிகள்!

Posted by - April 15, 2026 0
திமுகவின் வார் ரூம் எனும் கட்டளை மையத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் உயர் அதிகாரிகள் பணியாற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் சமயத்தில் யதார்த்தமான கள நிலவரத்தை கண்காணித்து,…
dmk tvk

TVK Vijay: ‘பொது அறிவு இருக்காது’ – தவெகவுக்கு ஓட்டு போட்ட பெண்களை விமர்சித்த வினோதினி!

Posted by - May 1, 2026 0
இந்த சட்டமன்ற தேர்தலில் வினோதினி வைத்தியநாதன் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டார். அவர் தவெகவுக்கு வாக்களித்த பெண்களை சரமாரியாக சாடியுள்ளார். தமிழ்நாட்டில் அறிவார்ந்த சமூகம் என்பதெல்லாம்…

ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்

Posted by - December 24, 2025 0
அதிமுக- பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் இணைவார் என எதிர்பார்கப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அ.தி.மு.க.வில் இணையமாட்டோம் என ஓபிஎஸ் தெரிவித்திருப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *