வழக்கறிஞர்களிடமிருந்து டிப்ஸ் பெற ஆடையில் QR code! – சஸ்பெண்ட் செய்து நீதிமன்றம் நடவடிக்கை.

252 0

வழக்கறிஞர்களிடமிருந்து `பேடிஎம்’ மூலம் டிப்ஸ் பெற்ற நீதிபதியின் டவாலியை பணியிடை நீக்கம் செய்து அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு.

வழக்கறிஞர்களிடமிருந்து `பேடிஎம்’ மூலம் அன்பளிப்பாகப் பணம் பெற்ற நீதிபதியின் டவாலியை பணியிடை நீக்கம் செய்து அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு.

டெல்லியில் உள்ள அலகாபாத் உயர் நீதிமன்றத்தில், கடந்த வியாழக்கிழமை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. நீதிமன்ற வழக்கறிஞர்களிடமிருந்து நீதிபதியின் டவாலி பேடிஎம் மூலம் பணம் வசூல் செய்தது கண்டறியப்பட்டுள்ளது.court 2

அவர் தனது இடுப்பில் ஆடையுடன் சேர்த்து பேடிஎம்-க்கான QR code-ஐ வைத்திருந்திருக்கிறார். இதனைக் கவனித்த நீதிபதி அஜித் சிங், அவர் மீது கடிதம் மூலம் தலைமை நீதிபதிக்குப் புகார் அளித்துள்ளார். அதையடுத்து தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டல், இதனை அவசரம் மற்றும் முக்கிய வழக்காக கருதி, நீதிமன்ற டவாலியை விசாரித்துத் தகுந்த தண்டனை வழங்கியுள்ளார். அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “29.11.2022 தேதியிட்ட நீதிபதி அஜித்தின் கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு விசாரித்ததில், நீதிமன்ற டவாலி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு, அவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உதவியாளர் ஸ்ரீ ராஜேந்திர குமார் என்பவர், ஆடையோடு சேர்த்து பேடிஎம் QR code மூலம் பணத்தைப் பெற்றதற்காக உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்.

சஸ்பெண்ட் காலத்தில் அவர் வேறு எந்த வேலை, வர்த்தகம் அல்லது தொழிலில் ஈடுபடவில்லை என்பதற்கான சான்றிதழை அளிக்க வேண்டும். அவ்வாறு சான்றிதழைச் சமர்ப்பித்தால் மட்டுமே அவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்படும்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Related Post

சாப்பிட மறுத்து அடம்பிடித்ததால் ஆத்திரம்: கரண்டியால் அடித்ததால் குழந்தை பலி- வீட்டின் பின்புறம் புதைத்த தாய்

Posted by - July 24, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துவாடாவை சேர்ந்தவர் சினேகா (வயது 18). இவரது 2 வயது குழந்தை கீதா ஸ்ரீ. கடந்த 17-ந் தேதி மதியம் சினேகா…

திருப்பதி தரிசன முறையில் அதிரடி மாற்றம்… தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இதோ!

Posted by - May 28, 2023 0
ஒவ்வொரு வியாழன் அன்றும் சுமார் அரை மணி நேரம் கூடுதலாக இலவச தரிசனத்திற்காக பக்தர்களை அனுமதிக்கலாம் திருப்பதியில் மேலும் 22 ஆயிரம் பக்தர்களுக்கு ஏழுமலையான் தரிசன வாய்ப்பு…

ஆந்திராவில் தக்காளி கிலோ ரூ.200-க்கு விற்பனை: சென்னையிலும் விலை உயர வாய்ப்பு

Posted by - July 29, 2023 0
திருப்பதி: ஆந்திராவில் அதிகளவில் தக்காளி உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கிருந்து முதல் ரக தக்காளிகள் வடமாநிலங்கள் மற்றும் சென்னை, பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு அனுப்பி…

கொட்டும் மழையில் ஐந்தரை வயது சிறுமிக்காக அவசர அவசரமாக வந்திறங்கிய இதயம்… நெகிழ வைத்த ஊழியர்கள்!

Posted by - April 24, 2023 0
திருமலை திருப்பதி தேவஸ்தான குழந்தைகள் இதய நல மருத்துவமனையின் மூன்றாவது இதயமாற்று அறுவை சிகிச்சை, வெற்றிகரமாக நடந்துள்ளது. திருப்பதியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் குழந்தைகள் இதய…

பெங்களூருவில் ஆன்லைனில் ‘பிரிட்ஜை’ விற்க முயன்று ரூ.1 லட்சத்தை பறிகொடுத்த என்ஜினீயர்

Posted by - July 1, 2023 0
பெங்களூரு : பெங்களூரு விஜயநகர் பகுதியில் வசித்து வருபவர் பூர்ண சந்திரராவ் (வயது 41). என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பூர்ண சந்திரராவ் வீட்டில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *