அதிமுகவில் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம், அக்கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி மோதலால் தனித்து செயல்பட்டு வந்தவர், தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.
அதிமுகவில் உட்கட்சி மோதல்
தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக அதிமுக ஆட்சி காலத்தில் 3 முறை முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் திமுகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம், 2017ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் காரணமாக பல பிளவுகளாக அதிமுக பிரிந்தது. இதனையடுத்து அதிமுகவில் ஏற்பட்ட அடுத்தடுத்த மோதல்கள் காரணமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் ஓபிஎஸ். இதனையடுத்து பல சட்ட போராட்டங்கள் நடத்தினாலும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனையடுத்து எந்த வித நிபந்தனையும் முறை அதிமுகவில் இணைய எவ்வளவோ முயற்சி செய்தார்.
திமுகவில் ஓபிஎஸ்
ஆனால் இதற்கு எடப்பாடி பழனிசாமி மறுத்த நிலையில், பாஜகவின் உதவியோடு அதிமுகவில் இணைய திட்டம் போட்டார். ஆனால் பாஜகவின் வலியுறுத்தலையும் இபிஎஸ் கேட்டுக்கொள்ளவில்லை. இதனையடுத்து திமுகவில் இணைய திட்டமிட்டார். இதற்கான நடவடிக்கைகள் திரைமறைவில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று அண்ணா அறிவாலயம் வந்த ஓ.பன்னீர் செல்வத்தை திமுக மூத்த தலைவரும் அமைச்சருமான எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், சேகர்பாபு ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர்.
இதனையடுத்து திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலினை ஓ.பன்னீர் செல்வத்தை ஆரத்தழுவி வரவேற்றார். இதனையடுத்து ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஓ.பன்னீர் செல்வம் இணைந்தார். அப்போது உசிலம்ப்பட்டி எம்எல்ஏ அய்யப்பன், முன்னாள் எம்பி ரவீந்திரநாத் உள்ளிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உடன் இருந்தனர்.