திமுகவில் இணைந்த அதிமுக மாஜி முதலமைச்சர்

84 0

அதிமுகவில் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம், அக்கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி மோதலால் தனித்து செயல்பட்டு வந்தவர், தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.

அதிமுகவில் உட்கட்சி மோதல்

தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக அதிமுக ஆட்சி காலத்தில் 3 முறை முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் திமுகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம், 2017ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் காரணமாக பல பிளவுகளாக அதிமுக பிரிந்தது. இதனையடுத்து அதிமுகவில் ஏற்பட்ட அடுத்தடுத்த மோதல்கள் காரணமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் ஓபிஎஸ்.  இதனையடுத்து பல சட்ட போராட்டங்கள் நடத்தினாலும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனையடுத்து எந்த வித நிபந்தனையும் முறை அதிமுகவில் இணைய எவ்வளவோ முயற்சி செய்தார்.

திமுகவில் ஓபிஎஸ்

ஆனால் இதற்கு எடப்பாடி பழனிசாமி மறுத்த நிலையில், பாஜகவின் உதவியோடு அதிமுகவில் இணைய திட்டம் போட்டார். ஆனால் பாஜகவின் வலியுறுத்தலையும் இபிஎஸ் கேட்டுக்கொள்ளவில்லை. இதனையடுத்து திமுகவில் இணைய திட்டமிட்டார். இதற்கான நடவடிக்கைகள் திரைமறைவில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில்  இன்று அண்ணா அறிவாலயம் வந்த ஓ.பன்னீர் செல்வத்தை திமுக மூத்த தலைவரும் அமைச்சருமான எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், சேகர்பாபு ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர்.

இதனையடுத்து திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலினை ஓ.பன்னீர் செல்வத்தை ஆரத்தழுவி வரவேற்றார். இதனையடுத்து ஸ்டாலின்  முன்னிலையில் திமுகவில் ஓ.பன்னீர் செல்வம் இணைந்தார். அப்போது உசிலம்ப்பட்டி எம்எல்ஏ அய்யப்பன், முன்னாள் எம்பி ரவீந்திரநாத் உள்ளிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உடன் இருந்தனர்.

Related Post

விஜய்யின் தலைமைப் பண்பு.. திருமாவளவன் என்ன சொன்னார் தெரியுமா?

Posted by - October 30, 2025 0
கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய்யின் தலைமைப் பண்பு மிகப்பெரிய கேள்வியை ஏற்படுத்தியுள்ளது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். விசிக தலைவரும், மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் தனியார் செய்தி நாளிதழுக்கு…

துரோகத்தால் நாறும் சென்னை: தூய்மைப் பணியாளர்கள் வாக்குறுதிகளையாவது முதல்வர் நிறைவேற்றுவாரா?- அன்புமணி கேள்வி

Posted by - August 7, 2025 0
2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக ஆட்சிக்கு வந்தால், தற்காலிகப் பணியாளர்கள் அனைவரும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் ஏழாவது நாளாக…

தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி?

Posted by - December 15, 2025 0
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக, பிரதமர் மோடி வரும் ஜனவரி மாதம் தமிழ்நாட்டிற்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும்…

தவெகவை நோக்கி நகரும் கட்சிகள்… தடுக்க முடியாமல் திணறும் பாஜக!

Posted by - December 27, 2025 0
அ​தி​முக-வுடன் பியூஷ் கோயல் நடத்​திய பேச்​சு​வார்த்​தைக்​குப் பிறகு, கசி​ய​விடப்​பட்ட தொகு​திப் பங்​கீடு குறித்த தகவல்​கள் பெரும் புயலை கிளப்பி, சில கட்​சிகளை தவெக பக்​கம் தடம் மாற…

தேர்தலுக்கு தயாரான அதிமுக.!

Posted by - December 11, 2025 0
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், அதிமுக சார்பாக தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமி அழைப்பு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *