GENERAL NEWS“40 நாட்கள், 8 கட்ட தரையிறக்கம்! சந்திரயான் 3ன் நிலவு பயணம்! தரையிறங்கும் Vikram Lander!”

209 0

சந்திரயான்-3 விண்கலம் 40 நாட்கள் பயணத்தை முடித்து இன்று மாலை நிலவில் தரையிறங்குகிறது. நிலவில் சந்திரயான்-3 பத்திரமாக கால் பதிக்க முக்கியமான பத்து கட்டங்களை கடக்க வேண்டியுள்ளன. அவை என்னென்ன என்பதை தெரிந்துகொள்ளலாம். தற்போது நிலவில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் விக்ரம் லேண்டரை 7.4 கிலோமீட்டர் தொலைவுக்குக் கொண்டு வருவது தான் முதல் கட்டம்.

 

 

அப்போது லேண்டரின் வேகம் ஆயிரத்து 200 கிலோமீட்டர் அளவாகக் குறைக்கப்படும். அதில் இருந்து இரண்டாவது கட்டம் தொடங்கும். அப்போது லேண்டர் 7.4 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து 6.3 கிலோமீட்டராக கீழே இறக்கப்படும். அப்போது கிடைமட்டமாக இருக்கும் லேண்டர், தரையிறங்குவதற்கு வசதியாக, 50 டிகிரி கோணத்திற்கு சாய்வாகத் திருப்பப்படும். அதே நிலையில் 6.3 கிலோமீட்டர் தொலைவில் இருந்து 800 மீட்டர் தூரத்திற்கு குறைக்கப்படுவதே மூன்றாவது கட்டமாகும்.

 

 

அடுத்த கட்டத்தில் லேண்டர் 150 மீட்டர் உயரத்திற்கு நிலவின் தரைப் பகுதியை நோக்கி கீழே கொண்டு வரப்படும். அப்போது லேண்டரில் உள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நிலவின் மேற்பரப்பில் உள்ள மேடு பள்ளங்களைத் துல்லியமாக கவனித்து, சமதளப் பரப்பைத் தேர்வு செய்யும். பின்பு தேர்வு செய்த பாதுகாப்பான இடத்தில் மெதுவாக தரையிறக்குவதே ஐந்தவாது கட்டமாகும். அறுபது மீட்டர் உயரத்தில் இருந்து 10 மீட்டர் உயரத்திற்கு லேண்டரை கீழே இறக்குவதுதான் ஆறாவது கட்டம்.

 

 

7வது கட்டத்தில் ராக்கெட் எஞ்சின்கள் நிறுத்தப்படும். எஞ்சின்கள் நிறுத்தப்பட்டவுடன் விண்கலம் 10 மீட்டர் உயரத்தில் இருந்து நிலவின் தரைப்பரப்பில் வேகமாக மோதாமல் இருப்பதற்காக லேண்டர் மிக மெதுவாக தரையிறக்கப்படும் கடைசி கட்டமாக நிலவில் தரையிறங்கிய லேண்டர் சுமார் 2 மணி நேரம் அதே நிலையில் நிற்கும். அதன்பிறகு லேண்டரில் இருந்து வெளியே வந்து பிரக்யான் ரோவர் இறங்கி ஆய்வை தொடங்கும்.

Related Post

முன்னேறும் பாஜக: தடுமாறும் ‘இ.ண்.டி.யா’

Posted by - February 15, 2024 0
“அரசியலைப் பொறுத்தவரை ‘குடும்பக் கட்டுப்பாட்’டில் பாஜகவுக்கு நம்பிக்கை இல்லை” – சமீபத்தில் ஒரு செய்தித் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அமித் ஷா, கூட்டணி விரிவாக்கம் குறித்து நகைச்சுவையுடன் குறிப்பிட்ட…

சனாதனம் குறித்து பேச்சு: தி.மு.க.வினருக்கு மு.க.ஸ்டாலின் போட்ட முக்கிய உத்தரவு ..

Posted by - September 14, 2023 0
சென்னை: தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் 2-ந்தேதி நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று பேசும்போது, கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா…

கொட்டும் மழையில் ஐந்தரை வயது சிறுமிக்காக அவசர அவசரமாக வந்திறங்கிய இதயம்… நெகிழ வைத்த ஊழியர்கள்!

Posted by - April 24, 2023 0
திருமலை திருப்பதி தேவஸ்தான குழந்தைகள் இதய நல மருத்துவமனையின் மூன்றாவது இதயமாற்று அறுவை சிகிச்சை, வெற்றிகரமாக நடந்துள்ளது. திருப்பதியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் குழந்தைகள் இதய…

கேரளாவில் கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்தில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

Posted by - October 30, 2023 0
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் ஜம்ரா என்கிற சர்வதேச மாநாட்டு மையம் உள்ளது. இங்கு ‘யெகோவாவின் சாட்சிகள்’ என்ற கிறிஸ்தவ சபையினரின் 3 நாள்…

காதலியை கொன்று உடலை தொட்டியில் மறைத்த வாலிபர் – செல்போன் அழைப்புகள் மூலம் சிக்கினார்

Posted by - June 10, 2023 0
பிரயாக்ராஜ்: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள மகேவா பகுதியை சேர்ந்தவர் 35 வயதான பெண் ராஜ்கேசர் (வயது 35). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *