இவையெல்லாம் மாரடைப்புக்கான ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள்.. என்னென்ன தெரியுமா..?

251 0

 மாரடைப்பு அறிகுறிகள் பெரும்பாலும் ஆண்களில் ‘வழக்கமானவை’ என்றும், பெண்களில் ‘வித்தியாசமானவை’ என்றும் கூறப்படுகிறது. ஆனால் ஒரு புதிய ஆய்வில் அறிகுறிகள் பாலினங்கள் இடையே வேறுபட்டாலும், ஓரு சில ஒற்றுமைகளும் இருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

உலகளவில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் மாரடைப்பாகும். மாரடைப்பு திடீரென தாக்கும் திறன் கொண்டதாக உள்ளது. முன் அறிகுறிகள் ஏதுமின்றி திடீரென ஏற்படக்கூடியதாக மாரடைப்பு பிரச்னை உள்ளது.

ஒருவேளை வயிற்று எரிச்சல், நெஞ்சரிச்சல் மற்றும் செரிமானக் கோளாறு போன்ற அறிகுறிகள் தென்பட்டாலும், அதை பலரும் பெரிதாக எடுத்துகொள்வது கிடையாது. அந்த வகையில் மாரடைப்புக்கான சில எச்சரிக்கை அறிகுறிகள் குறித்து பார்க்கலாம். மாரடைப்பு அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் உங்கள் உயிரையோ அல்லது உங்களைச் சுற்றியுள்ள ஒருவரின் உயிரையோ காப்பாற்ற முடியும் என்று இதய நோய் நிபுணர் தெரிவித்துள்ளார்.

மாரடைப்பின் 7 ஆரம்ப அறிகுறிகள்:

  • உங்கள் மார்பில் அழுத்தம் அல்லது இறுக்கம் (வலிக்கு பதிலாக)
  • உங்கள் கைகள், தாடை, கழுத்து அல்லது முதுகு போன்ற பகுதிகளில் வலி
  • குளிர் அல்லது வியர்வை
  • நெஞ்செரிச்சல் அல்லது அஜீரணம்
  • மூச்சுத் திணறல்
  • குமட்டல் அல்லது வாந்தி
  • அசாதாரண சோர்வு

இந்த அறிகுறிகளை நீங்கள் அலட்சியப்படுத்தினால் அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், உங்கள் இதயத்தில் உள்ள இரத்த நாளங்களில் ஒன்றில் அடைப்பு ஏற்படுவதால் மாரடைப்பு ஏற்படுகிறது. அடைப்பு ஏற்பட்டால் இரத்தம் உங்கள் இதயத்திற்கு செல்ல முடியாது. எனவே இரத்தம் இல்லாமல், உங்கள் இதய தசை இறக்கத் தொடங்குகிறது. எனவே இரத்த ஓட்டம் விரைவாக மீட்டெடுக்கப்படாவிட்டால், நிரந்தர இதய பாதிப்பு அல்லது மரணம் கூட ஏற்படலாம்.

ஆண்களை விட பெண்களுக்கு எச்சரிக்கை அறிகுறிகள் வேறுபட்டதா?

மாரடைப்பு அறிகுறிகள் பெரும்பாலும் ஆண்களில் ‘வழக்கமானவை’ என்றும், பெண்களில் ‘வித்தியாசமானவை’ என்றும் கூறப்படுகிறது. ஆனால் ஒரு புதிய ஆய்வில் அறிகுறிகள் பாலினங்கள் இடையே வேறுபட்டாலும், ஓரு சில ஒற்றுமைகளும் இருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

  • மாரடைப்புக்கு முன் மூச்சுத் திணறல், சோர்வு மற்றும் தூக்கமின்மை.
  • முதுகு, தோள்கள், கழுத்து, கைகள் அல்லது வயிற்றில் வலி.
  • குமட்டல் மற்றும் வாந்தி.இது பெண்களுக்கு மாரடைப்பை ஏற்படுத்தும் ஆபத்து அறிகுறிகளாகும். மாரடைப்புக்கு பொதுவான அறிகுறியான மார்பு வலி போன்ற உணர்வு அல்லது அஜீரணம் போன்ற அசௌகரியம் ஆகியவை பெண்களுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாரடைப்பிற்குப் பிறகு இறப்பதற்கான வாய்ப்புகள், ஆண்களை விட பெண்களுக்கு இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • மாரடைப்புக்கான ஆபத்து காரணங்கள்:
    • உடல் பருமன்
    • நீரிழிவு நோய்
    • புகைப்பிடித்தல்
    • இதய நோய் அல்லது முந்தைய மாரடைப்பின் வரலாறு
    • உயர் இரத்த அழுத்தம் அல்லது அதிக கொழுப்பு
    • மாரடைப்பின் குடும்ப வரலாறுஉங்களுக்கு மார்பு வலி அல்லது அழுத்தம் இரண்டு நிமிடங்களுக்கு மேல் நீடித்தால் அல்லது அது மீண்டும் வந்தால் 911 அல்லது உள்ளூர் அவசர எண்ணை அழைக்க வேண்டும்.

Related Post

உலகம் முழுவதும் திடீரென முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டாகிராம் – பயனர்கள் தவிப்பு.!

Posted by - March 6, 2024 0
பேஸ்புக்கை விட ரீல்ஸ்கள் நிறைந்த இன்ஸ்டா முடங்கியது பலரையும் ஏமாற்றம் அடைய வைத்தது. மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் முடங்கியதால், பயனாளர்கள் தவிப்புக்கு ஆளாகினர்.…

ரூ.137 கோடியே 46 லட்சத்துக்கு வாங்கிய வீட்டில் வசிக்க முடியவில்லை என புலம்பும் கோடீஸ்வரர்

Posted by - April 12, 2023 0
லண்டன்: இங்கிலாந்தின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர் டாம் கிளான் பீல்ட். இவர் கடந்த மாதம் நார்த் ஹேவன்பாயின்ட் பகுதியில் ஒரு பழமையான வீட்டை வாங்கினார். இதற்காக இந்திய…

1200 அடி உயரத்தில் ஊசலாடிய கேபிள் கார் – 14 மணி நேரத்துக்கு பின் குழந்தைகள் உள்பட 8 பேரும் மீட்பு

Posted by - August 23, 2023 0
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ளது கைபர் பக்துன்வா பிராந்தியம். இது கரடுமுரடான மலைகளும், ஆழமான பள்ளத்தாக்குகளும், நதிகளும், சமநிலைகளும் நிறைந்த ஒரு பிரதேசம் ஆகும். இங்குள்ள பள்ளத்தாக்குகளைக்…

உலக நாடுகளை தெறிக்கவிட்ட ஈரான்; 4000 கிமீ பாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணை; அலறும் அமெரிக்கா,பிரிட்டன்

Posted by - March 21, 2026 0
மத்திய கிழக்கில் போர் தொடரும் நிலையில், இந்தியப் பெருங்கடலில் உள்ள அமெரிக்க, பிரிட்டிஷ் ராணுவ தளங்கள் அமைந்துள்ள டியாகோ கார்சியாவை ஈரான் குறிவைத்திருப்பது, ராணுவ நிபுணர்களிடையே கவலைகளை…

உக்ரைனோடு நிற்காது: உலக நாடுகளுக்கு ஜெலன்ஸ்கி எச்சரிக்கை

Posted by - September 20, 2023 0
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஐ.நா. பொதுச்சபையில் வருடாந்திர உயர்மட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ஒரு நாட்டிற்கு எதிராக வெறுப்பு ஆயுதமாகும்போது, அது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *