ரஜினி இதெல்லாம் விட்டறலாமே.. ரசிகர்கள் கெட்டுட போறாங்க.. ஜானகி அம்மாவிடம் எம்ஜிஆர் வருத்தம்

238 0

தமிழ் சினிமாவில் எம்.கே. தியாகராஜ பாகவதருக்குப் பின் சூப்பர் ஸ்டாராக ஜொலித்தவர் எம்.ஜி.ஆர். இவர் ரஜினியைப் பற்றி ஜானமி அம்மாவிடம் கூறிய சம்பவத்தை ரஜினி பகிர்ந்துள்ளார்.

முன்னாள் முதல்வர் எம் ஜி ஆரின் மனைவி ஜானகி அம்மாவின் நூற்றாண்டு விழா நேற்று முன் தினம் அதிமுகவினரால் கொண்டாடப்பட்டது. பிரமாண்டமாக நடந்த இந்த நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்களும், சினிமா பிரபலங்களும் பங்கேற்றிருந்தனர்.

இந்த விழாவில் நேரில் கலந்துகொள்ள முடியாத சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஒரு வீடியோ மூலமாக ஜானகி அம்மாவுடனான தனது சந்திப்பு, அனுபவங்கள் பற்றிப் பல விசயங்களைக் கூறினார்.

இதுகுறித்து ரஜினிகாந்த் பேசியதாவது:

”ஜானமி அம்மாவை நான் 3 முறை சந்தித்திருக்கிறேன். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் ஜானகி அம்மாவும் அரசியலில் இருந்து விலகிய காலக்கட்டத்தில், எம்ஜிஆரின் ராமாவரம் வீட்டில் அருகே தான் ஷூட்டிங் நடந்தது. அப்போது ஜானமி அம்மா என்னைச் சந்திக்க விரும்புவதாக கூறினார்கள்.

நான் நேரில் சென்று அவரைச் சந்தித்தேன். அவர் கையாலே எனக்கு காஃபி போட்டுக் கொடுத்தார்கள். அப்போது அவர், ராகவேந்திரா படம் வெளியானபோது, எம்ஜிஆர் அப்படத்தைப் பார்த்துவிட்டு ஒரு 15 நிமிடம் உங்களைப் பற்றித்தான் பேசினார். எப்படி ரஜினி இத்தனை அமைதியாக, சாந்தமாக, அழகாக நடித்திருக்கிறார். படம் பார்க்கவே நன்றாக இருக்கிறது.

ஆனால், ரஜினி தன் படங்களில் சிகரெட் பிடிக்கிறார். அவருக்கு ரசிகர்கள் நிறையப் பேர் இருக்கும் நிலையில், அவர்களும் அதைப் பார்த்து அப்பழக்கத்தைத் தொடர்கிறார்கள். இதை ரஜினி விட்டுவிட்டால் நன்றாக இருக்கும் நானும் நேரம் கிடைக்கும் போது இதைப்பற்றி அவரிடம் கூற முயற்சி செய்கிறேன் என்று தன்னிடம் எம்ஜிஆர் கூறியதாக ஜானகி அம்மா என்னிடம் கூறினார்” என்று தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆர் – ரஜினி இடையே கருத்து வேறுபாடு இருந்ததா?

எம்.ஜி.ஆர் சூப்பர் ஸ்டாராக தமிழ் சினிமாவை ஆண்டு கொண்டிருந்த சமயத்தில் அடுத்த தலைமுறை நடிகராக ரஜினிகாந்த், தனது நடிப்பிலு, ஸ்டைலிலும் ஒரு கரீஸ்மாவை உருவாகி, மக்களை கவர்ந்திருந்த சமயம். அப்போது ரஜினிக்கும், எம்ஜிஆருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக பலரும் பலவிதமாக கூறினர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரஜினி மீது எம்ஜிஆர் எத்தனை அக்கறை கொண்டிருந்தார் என்பது ரஜினியின் இந்த வீடியோவில் தெரியவந்துள்ளது.

Related Post

ரூ.1 கோடி நஷ்டஈடு தரணும்.. அமைச்சர் மனோ தங்கராஜுக்கு நோட்டீஸ் அனுப்பிய அண்ணாமலை!

Posted by - December 9, 2023 0
15 நாட்களில் மன்னிப்பு கேட்கவும், நஷ்ட ஈடு வழங்கவும் வலியுறுத்தியுள்ள அண்ணாமலை, தவறும் பட்சத்தில் வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜுக்கு…

பொது மாறுதல்களுக்கான ஆசிரியர் கலந்தாய்வு மே 15-ந்தேதி தொடங்குகிறது …..

Posted by - May 12, 2023 0
திடீரென நிர்வாக காரணங்களுக்காக கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. காலை 9.30 மணி முதல் மாலை 6 மணிவரை கலந்தாய்வு நடைபெறும். சென்னை: தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்கள்…

கும்பகோணம்:கல்லூரி கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த மாணவி… கும்பகோணத்தில் பரபரப்பு

Posted by - February 3, 2025 0
நீண்ட நேரம் கழித்துதான் அந்த மாணவி வகுப்பறைக்கு வந்துள்ளார். அப்போது அந்த மாணவியின் உடலில் பல மாற்றங்களை கவனித்த சக மாணவிகள் விசாரித்துள்ளனர். மேலும் மாணவியின் ஆடையில்…

முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் ரூ.30 லட்சம் பெறுவது எப்படி? முக்கிய அப்டேட்

Posted by - August 20, 2025 0
முதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ.30 லட்சம் பெறுவது எப்படி? அமைச்சர் ஐ.பெரியசாமி கொடுத்த அப்டேட் Tamil Nadu CM Health Insurance : தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு…

முற்றிலும் மழைவிட எத்தனை மணி நேரம் ஆகும்? எப்போது கரையை கடக்கும்?

Posted by - December 4, 2023 0
கடந்த 3 மணி நேரத்தில் மிக்ஜாம் புயல் வலுவடைந்துள்ளதாக கூறியுள்ள தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மிக்ஜாம் புயல், நாளை அதிகாலையில் ஆந்திரா மாநிலம் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே கரையைக்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *