காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை முன் தாக்கப்பட்ட விவசாயி!

159 0

கோவையில் நடைபெற்ற ஆனைமலை – நல்லாறு திட்ட கோரிக்கை மாநாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை முன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயி தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூலூரை அடுத்த செஞ்சேரிபுத்தூர் பகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆனைமலை – நல்லாறு திட்ட கோரிக்கை மாநாடு நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, கட்சி நிர்வாகிகள், விவசாய சங்கத்தினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் மாநாட்டின் தீர்மானங்களை வாசித்தபோது குறுக்கிட்ட விவசாயி ஒருவர், மதுபோதையில் தீர்மான நகலைக் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அவருக்கு தீர்மான நகல் வழங்க மறுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த அவர்,
“ஆனைமலை – நல்லாறு திட்டத்திற்காக உண்மையாகவே போராடினீர்களா? சத்தியம் செய்யுங்கள்” எனக்கூறி வாக்குவாதம் செய்துள்ளார்.

அப்போது அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் அவரைப் பிடித்து அப்புறப்படுத்திய நிலையில், அங்கு வந்த மற்றொரு நபர் மதுபோதையில் இருந்த விவசாயியை கடுமையாக தாக்கினார். பின்னர் அவர்களை அங்கிருந்த போலீசார் அப்புறப்படுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் தாக்கப்பட்டவர் விவசாயியான சுரேஷ் என்பதும், அவரை தாக்கிய நபர் சுரேஷின் சகோதரர் என்பதும் தெரியவந்தது.

Related Post

அன்புமணிக்கு அதிர்ச்சி கொடுத்த ராமதாஸ்..!

Posted by - April 10, 2025 0
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சில முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய நிலை உள்ளது – மருத்துவர் ராமதாஸ் விழுப்புரம்: பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பு…

“அண்ணாமலையை சும்மா விடுவோமா…? – உதயநிதி ஸ்டாலின்

Posted by - April 18, 2023 0
அண்ணாமலை மீது தானும் மான நஷ்ட வழக்கு தொடரவுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி. DMK Files என்ற பெயரில் திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகளின் சொத்து பட்டியலை…

விஜய் மக்கள் சந்திப்பு: காஞ்சிபுரத்தில் நாளை நடைபெறும் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு அனுமதி மறுப்பு! பரபரப்பு அறிக்கை வெளியீடு!

Posted by - November 22, 2025 0
“காஞ்சிபுரம் அருகே நாளை விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில், கட்சி நிர்வாகிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது நாளை நடைபெறும் விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டத்தில்…

அவர் வருவாரா.? எதிர்பார்ப்பில் எடப்பாடி பழனிசாமி.. பலிக்குமா கணக்கு.?

Posted by - April 15, 2025 0
அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், இந்த கூட்டணியை மேலும் வலுப்படுத்த ஒருவரை இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாம் அந்த கூட்டணி. அந்த அவர் சிக்குவாரா.? அதிமுக கணக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *