கல்பாக்கம் முதல் சென்னை வரை பிளான்.. மார்ச் 4-ல் மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகை.

202 0

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மார்ச் 4 ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார்

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதமர் மோடி மார்ச் மாதம் இரண்டு முறை தமிழ்நாடு வருகிறார். இதில், சென்னை நந்தனத்தில் நடைபெறும் பாஜக பொதுக் கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. இதில், தமிழ்நாட்டில் தனி அணியாக போட்டியிடும் வகையில் அரசியல் கட்சிகளுடன் பாஜக பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. பாஜகவை வலுப்படுத்தும் விதமாக பிரதமர் மோடியும் கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரைக் கூட்டங்களில் பங்கேற்று பேசினார். முதல் நாள் பயணத்தில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரையின் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இரண்டாம் நாளில் தூத்துக்குடி மற்றும் நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். அத்துடன், முடிவுற்ற பணிகளை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடி மார்ச் மாதம் இரண்டு முறை தமிழ்நாடு வர உள்ளார். இதில், மார்ச் 4 ஆம் தேதி தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடி, அன்றைய தினம் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதன் தொடர்ச்சியாக சென்னை நந்தனத்தில் மாலை 5.15 மணிக்கு நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்திலும் உரையாற்ற உள்ளார். மேலும், மார்ச் மாத மத்தியிலும் பிரதமர் மோடி தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் மாவட்டத்தில் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்கும் வகையில் இந்த பயணத் திட்டம் இருக்கும் என்று தெரிகிறது.

இதனிடையே, பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் நாராயணன் திருப்பதி, லலிதா குமாரமங்கலம் உள்ளிட்டோர் நாளை டெல்லி செல்ல உள்ளனர். அங்கு பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பி.எல். சந்தோஷ் ஆகியோரை சந்தித்து நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசிக்க உள்ளனர்.

Related Post

முதலீட்டாளர்களே மாதத்தின் கடைசி நாளில் கவனிக்க வேண்டிய பங்குகள்..

Posted by - July 31, 2024 0
இந்திய பங்குச்சந்தைகளின் முக்கிய குறியீடான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய குறியீடு வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்ந்து வர்த்தகமாகின. இந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் மாருதி, எம்&எம்,…

இனி சைலண்ட் ரூட் செட் ஆகாது – தாலிபன் அரசுடன் இந்தியா பேச்சுவார்த்தை, கூட்டாளிகளை பலப்படுத்த முடிவு

Posted by - May 16, 2025 0
ஆஃப்கானிஸ்தான் தாலிபன் அரசின் வெளியுறவு அமைச்சருடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் முதல்முறையாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தியாவால் அங்கீகரிக்கப்படாத தாலிபன் அரசு, பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம்…

நெய் சுத்தமானதா..? கலப்படமானாதா..? எளிதில் கண்டறிய உதவும் டிப்ஸ் இதோ

Posted by - September 21, 2024 0
நெய்யில் உள்ள வைட்டமின் ஏ நமது கண்கள் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் நெய் உதவுகிறது. நெய்யில் ஒமேகா 3…

அனைத்து மதங்கள் மீதும் நம்பிக்கை உள்ளது – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்

Posted by - November 21, 2025 0
அனைத்து மதங்கள் மீதும் நம்பிக்கை உள்ளதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறினார். உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட பி.ஆர்.கவாய் நவம்பர் 23 ஆம்…

கேரளாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு 7 மாதத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகள்

Posted by - August 12, 2023 0
திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த சில வருடங்களாக சிறுவர்-சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது கவலைப்படும் விஷயமாக உள்ளது. ஆண்டுக்கு ஆண்டு இந்த குற்றங்களுக்கான வழக்குகள் அதிகரித்தே வருகிறது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *