கொட்டி தீர்த்த கனமழை.. இடுப்பளவு தண்ணீர் தேங்கியதால் வெள்ளக்காடாக மாறிய சென்னை

333 0

ஜி.கே.எம் காலனி ஜம்புலிங்கம் தெருவில் மழை நீருடன் கழிவு நீர் தேங்கியதால் நோய் தொற்று பரவும் அபாயம்…

சென்னையில் 2 ஆவது நாளாக இரவில் கனமழையால் பெய்ததால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர். வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் சொல்லொணாத் துயரத்தை அடைந்தனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
நேற்று இரவு பெய்த மழையால் கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தில் 2வது நாளாக இடுப்பளவு தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் இன்னலுக்கு ஆளாகினர். அங்குள்ள இருசக்கர வாகன சுரங்கப்பாதை முற்றிலும் மூழ்கியதனால் கோடம்பாக்கம் பகுதியே தீவு போல் காட்சியளித்தது. சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, அண்ணா சாலை உள்ளிட்ட இடங்களிலும் நேற்று இரவு மழை கொட்டித்தீர்த்தது.இதே போன்று, சென்ட்ரல், எழும்பூர், தேனாம்பேட்டை, மயிலாப்பூர், அண்ணாநகர், முகப்பேர், சைதாப்பேட்டை, கிண்டி, அம்பத்தூர், வில்லிவாக்கத்திலும் தொடர்ந்து மழை பெய்தது. கனமழையால், தியாகராய நகர் பசுல்லா சாலையில் மழைநீர் தேங்கியது. முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட ஜி.கே.எம் காலனி ஜம்புலிங்கம் தெருவில் மழை நீருடன் கழிவு நீர் தேங்கியதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். கொரட்டூர் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்குள் மூன்று அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியதால் நோயாளிகள் அவதியுற்றனர். மேற்கு மாம்பலத்தில் பெரும்பாலான தெருக்களை மழைநீர் ஆக்கிரமித்தது. கே.கே.நகர், அசோக்நகரில் குளம் போல் சாலைகள் காட்சியளித்தன. கனமழையால், பெருங்களத்தூரில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியது. கீழ்கட்டளை அருகே மூவரசம்பட்டு ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. கீழ்கட்டளையில் மழைநீர் ஆறாக ஓடிய சாலையில், இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவி கீழே விழுந்தார். மேடவாக்கம் விஜிபி பாபு நகர் பிரதான சாலையில் பூண்டு ஏற்றி சென்ற வாகனம் மழைநீரில் கவிழ்ந்தது. இதே போல், மேடவாக்கத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றோர் தவறி விழுந்தனர்.

Related Post

“பண்பாடு இல்லாமல் பேசுவதால் வேதனை” – ஈபிஎஸ் மீது முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்!

Posted by - November 13, 2024 0
அதில், ஆட்சியைப் பற்றி அரசியல் களத்தில் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு மக்களின் முகமலர்ச்சியே பதில் என்று குறிப்பிட்டுள்ளார். அநாகரிகமாகப் பேசுவதையே கொள்கையாகக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் உடன்…

“மியூட் மோடில் திமுக அரசு” தீக்குளித்த விவசாயி.. பொங்கி எழுந்த இபிஎஸ்

Posted by - June 5, 2025 0
“80 வயது மூதாட்டிக்கு பாதுகாப்பு இல்லை என்பது எவ்வளவு வெட்கக்கேடான நிலை? ஒரு முதல்வராக இந்த செய்தியெல்லாம் ஸ்டாலினை ஏன் உறுத்தவில்லை?” என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.…

ஆட்சியாளர்களுக்கு ஆபத்து? தஞ்சை பெரிய கோவிலுக்கு மேல் தோன்றிய வெளிச்சம்.. உற்று பார்த்தால் ஷாக்!

Posted by - December 26, 2023 0
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு மேல் வால் நட்சத்திரம் ஒன்று தோன்றிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் இடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. வால்மீன்கள்…

மழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 70-ஐ தாண்டுகிறது? கால்நடைகள் இறந்து மிதப்பதால் சுகாதார சீர்கேடு அபாயம்

Posted by - December 22, 2023 0
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 16,17,18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் தற்போதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதிகனமழையால் கோரம்பள்ளம் குளத்தில் உடைப்பு ஏற்பட்டு…

கடுப்பில் அரசு ஊழியர்கள், ஐஸ் வைத்த ஸ்டாலின்.. நினைத்தது நடக்குமா? சொன்னதெல்லாம் நியாபகம் இருக்கா?

Posted by - April 28, 2025 0
அதிருப்தியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர்களை குளிர்விக்கும் விதமாக முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அரசு ஊழியர்கள் திருமணத்திற்கான முன்பணமாக ரூ.5 லட்சம் வரை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *