சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்… புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்ப்பு…

292 0

Tamil Nadu Budget 2024:

மாபெரும் தமிழ்க் கனவு என்ற தலைப்பின் கீழ் ஏழு தலைப்புகளில் முக்கிய அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும்: தமிழக அரசு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கை தொடர்பாக மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. மாபெரும் தமிழ் கனவு என்ற தலைப்பின் கீழ் இந்த நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட இருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

2024-2025ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை பேரவையில் தாக்கல் செய்கிறார். மக்களவைத் தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில் தாக்கல் செய்யப்படும் இந்த நிதிநிலை அறிக்கையில், பல புதிய நலத்திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதியமைச்சராக தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவாகும். மாபெரும் தமிழ்க் கனவு என்ற தலைப்பின் கீழ் ஏழு தலைப்புகளில் முக்கிய அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் முதன்மையாக சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதில், சமூக நல திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போன்று, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம் ஆகியவையும் குறிப்பிடப்பட்டுள்ளன.
சமத்துவ நோக்கில் மகளிர் நலம் என்ற தலைப்பின் கீழ் மகளிர் நலன் தொடர்பான அறிவிப்புகளும் வெளியாகவுள்ளன. பசுமைவழிப் பயணம் என்ற அம்சத்தின் கீழ், மின்சார வாகனங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.
பட்ஜெட்டின் ஏழாவது அம்சமாக தாய்த் தமிழும், தமிழர் பண்பாடும் இடம்பெற்றுள்ளன. இதனிடையே, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கான முத்திரை சின்னத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான செய்திக் குறிப்பில், புரட்சி கவிஞர் பாரதிதாசனின் பாடலுக்கு ஏற்ப, அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்ட தமிழ்நாடு, எத்திசையிலும் புகழ் பதித்து திகழ்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Post

தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: யாரெல்லம் தகுதியானவர்கள்; விண்ணப்பிப்பது எப்படி… முழு விவரம்!

Posted by - April 22, 2024 0
ஒவ்வொரு பள்ளியிலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிக அளவில் விண்ணப்பங்கள் வந்திருந்தால், குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவிகித…

ரசிகர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் போதவில்லை – நடிகர் அஜித் உருக்கம்!

Posted by - January 14, 2025 0
“எனது அன்புக்குரிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் போதவில்லை. இந்த அசைக்க முடியாத அன்பும் ஊக்கமும்தான் எனது ஆர்வத்திற்கும் விடாமுயற்சிக்கும் உந்து சக்தியாக உள்ளது”…

கரூர் துயரம்: உயிரிழந்தோர் குடும்பங்களுடன் வீடியோ காலில் பேசி ஆறுதல் கூறிவரும் விஜய்!

Posted by - October 7, 2025 0
கரூர்: கரூரில் கடந்த செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத்…

இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம்: சென்னையில் திடீரென மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

Posted by - December 30, 2025 0
சென்னை: சம வேலைக்கு சம ஊதி​யம் கோரி சென்​னை​யில் தொடர்ந்து 4-வது நாளாக போராட்​டம் நடத்​திய இடைநிலை ஆசிரியர்கள், திடீரென சாலை மறியலில் ஈடு​பட்​ட​தால் பரபரப்பு நில​வியது. தமிழகத்​தில்…

முடிஞ்சிப்போன கதை! இப்போ ஏன்? – உதயநிதி அரசியல் குறித்த கேள்விக்கு மனைவி கிருத்திகா கொடுத்த பதில்

Posted by - January 8, 2025 0
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் காதலிக்க நேரமில்லை. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசியல் பயணம் குறித்த கேள்விக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *