trihy

திருச்சி செவிலியர் உயிரிழப்புக்கு காரணம் என்ன.? வெளியான ஆய்வறிக்கையில் திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?

92 0

Trichy nurse death Investigation report : திருச்சியில் செவிலியர் உயிரிழப்பு விவகாரத்தில் அறுவை சிகிச்சையின் போது தரமற்ற மருந்தை பயன்படுத்தியதே காரணம் என ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.

திருச்சி செவிலியர் உயிரிழப்பு

திருச்சியில் கடந்த வாரம் செவிலியர் ஒருவர் அறுவை சிகிச்சையின் போது உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சி அடைய செய்தது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம், மணக்குடிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சேட்டு – கலைச்செல்வி தம்பதியினர்  மகள் சீதாலட்சுமி (19). இவர் திருச்சி அரசு மருத்துவமனையில் மூன்றாம் ஆண்டு செவிலியர் படிப்பு படித்து வந்தார். மாணவி சீதாலட்சுமிக்கு மூக்கில் சதை வளர்ச்சி பாதிப்பு இருந்துள்ளது. இதற்காக அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, செவிலியர் சீதாலட்சுமி திடீரென உயரிழந்தார். மூக்கு அறுவை சிகிச்சைக்கு சென்றவர் திடீரென உயிரிழந்தது சீதாலட்சுமியின் பெற்றோரை மட்டுமில்லாமல் உடன் பணியாற்றிய செவிலியர்களையும் அதிர்ச்சி அடைய செய்தது.

மூக்கு அறுவை சிகிச்சை- செவிலியர் உயிரிழப்பு

இதனையடுத்து தேவைக்கு அதிகமான அளவில் மயக்க மருந்து (Anesthesia) கொடுக்கப்பட்டதால் அவர் உயிரிழந்தார் என்று கூறி மருத்துவர்களின் தவறான சிகிச்சையே மாணவி சீதாலட்சுமியின் உயிரிழப்பிற்கு முக்கியக் காரணம் என அவரது பெற்றோர், உறவினர்கள், சக செவிலிய மாணவிகள் திருச்சி அரசு தலைமை மருத்துவமனை முன்பு திரண்டு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், செவிலியர் கல்லூரி மாணவி சீதாலட்சுமி உயிரிழந்தது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்த, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை கூடுதல் செயலாளர் மற்றும் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் உத்தரவு பிறப்பித்திருந்தார். அந்த வகையில் சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனை கண்காணிப்பாளர் பாஸ்கர் தலைமையில் விசாரணை குழு அமைப்பு அமைக்கப்பட்டிருந்தது.

உயிரிழப்பிற்கு காரணம் என்ன.?

குழுவில் இஎன்டி மருத்துவர் பாரதி மோகன் , மயக்கவியல் மருத்துவர் சண்முகசுந்தரம் , மற்றும் மருத்துவர் ஜெயபிரகாஷ் அடங்கிய குழுவினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அறுவை சிகிச்சையின்போது செவிலியர் உயிரிழந்ததற்கு டெக்சாம்மெதாசோன் என்ற தரமற்ற மருந்தே காரணம் என ஆய்வறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே (Inj dexamethasone) குறிப்பிட்ட பேட்ச் மருந்து சோதனைக்கு உட்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த மருந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளும் குறிப்பிட்ட பேட்ச் மருந்துகள் நிறுத்தப்பட்டு ஆய்வகத்திற்கு சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மருத்துவத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Post

MUTHUKALAI

மனைவியின் உயிரை காப்பாற்றி தாருங்கள்.. முதலமைச்சர் விஜய்யிடம் கோரிக்கை வைத்த நடிகர் முத்துக்காளை

Posted by - May 16, 2026 0
முத்துக்காளை தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் முத்துக்காளை. இவர் நடிகர்கள் விஜய், அஜித் உள்ளிட்ட பல உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்.குறிப்பாக வடிவேலுவுடன்…

காஷ்மீருக்கு அடுத்தபடியாக கொடைக்கானலில் குங்குமப்பூ விளைவித்து விவசாயி சாதனை

Posted by - November 25, 2023 0
கொடைக்கானல்: மலைகளின் இளவரசி எனப்படும் கொடைக்கானல் மலைக்காய்கறிகள் விளைச்சலுக்கு அதிக பெயர் பெற்றது. இங்கு முக்கிய காய்கறிகளான உருளைக்கிழங்கு, பீட்ரூட், காலிபிளவர், பீன்ஸ், காரட், புரோக்கோலி போன்ற…

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!

Posted by - October 15, 2024 0
கனமழையால் பாதிக்கப்பட்டு உதவி தேவைப்படுவர்கள் தேமுதிக அலுவலகத்தை தங்கவும், உணவு அருந்தவும் பயன்படுத்தி கொள்ளலாம் என அக்கட்சின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

“தளபதி டிவி”.. விஜயகாந்த் சேனலை வாங்கும் விஜய்! சுளீர் பிளான்! என்ன நடக்குது?

Posted by - February 9, 2024 0
சென்னை: தமிழக வெற்றி கழகம் சார்பாக புதிய சேனல் தொடங்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளாராம். இதற்காக இரண்டு திட்டங்களை அவர் கையில் எடுத்துள்ளாராம். நடிகர் விஜய் லோக்சபா…

கஞ்சாவின் தலைநகரமாக மாறிய தமிழகம் – அரசு மீது காட்டம் தெரிவித்த அண்ணாமலை..!!!

Posted by - April 23, 2024 0
தமிழகத்தின் வெவேறு இடங்களில் போதை ஆசாமிகளால் கடந்த மூன்று நாட்களில் நடந்தேறிய கொடூர சம்பவங்கள் தமிழகத்தை கஞ்சாவின் தலைநகரமாக மாற்றியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *