சர்க்கரை நோயாளிகள்.. எந்த எண்ணெய்யை சமையலுக்கு யூஸ் பண்ணலாம்? நீரிழிவு நோயாளிக்கேற்ற எண்ணெய் இதுவா?

203 0

சென்னை:

நீரிழிவு நோயாளிகள் என்ன சாப்பிட வேண்டும் என்பதிலேயே பல குழப்பங்களு வந்துவிடும் நிலையில், என்ன எண்ணெய்யை சமைக்கலாம் என்பதில் அதற்கு மேல் குழப்பங்கள் உள்ளன. சர்க்கரை நோயாளிகளுக்கேற்ற எண்ணெய் எது தெரியுமா? பெரும்பாலும் தேங்காய் எண்ணெய்யை, ஆரோக்கியமான சமையலுக்கு பயன்படுத்துகிறார்கள்.. அதேபோல, டைப் 2 நீரிழிவு நோயை குறைப்பதில் இந்த எண்ணெய் உதவுகிறதாக சொல்கிறார்கள். மேலும், ரத்த சர்க்கரை அளவை சீராக்கி, 30 நிமிடங்களில் இயல்பு நிலைக்கு கொண்டு வருகிறது.

சூரியகாந்தி எண்ணெய்:

சூரியகாந்தி எண்ணெய்யும், உடலில் ரத்த குளுக்கோஸை குறைக்க உதவுகிறது. அதுமட்டுமல்ல, உடலிலுள்ள கொழுப்பை குறைக்கவும் இந்த எண்ணெய் பயன்படுகிறது.. இன்சுலின் அளவையும் கொழுப்பையும் அளவையும் மேம்படுத்தி, நீரிழிவு நோயை ஏற்படுத்த காரணமாகயிருக்கும், வளர்சிதை மாற்ற நோய் ஏற்படும் அபாயத்தை தடுப்பதாக கூறுகிறார்கள்.சர்க்கரை நோயாளிகள்.. எந்த எண்ணெய்யை சமையலுக்கு யூஸ் பண்ணலாம்? நீரிழிவு  நோயாளிக்கேற்ற எண்ணெய் இதுவா? | Do you know Health Benefits of Olive Oil and  What are the Best ...

ஆளிவிதை எண்ணெய்யை பொறுத்தவரை, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற எண்ணெய்யாக கருதப்படுகிறது.. இந்த எண்ணெய் பயன்படுத்துவதால், டைப் 2 நீரிழிவு நோயை நிர்வகிக்க முடியும்…

வால்நட் எண்ணெய்:

அதுபோலவே, வால்நட் எண்ணெய் டைப் 2 நீரிழிவு நோய்க்கு எதிராக செயல்படுகிறதாம்.. ஆல்பா-லினோலெனிக் அமிலம் அதிகமுள்ளதால், இந்த எண்ணெயும் நீரிழிவு நோயாளிகளுக்கேற்றதாக கருதப்படுகிறது. நல்லெண்ணெய்யை பொறுத்தவரை, சீசேமோல் என்ற பொருள் நிறைய உள்ளது.. இந்த பொருள் இதயத்திற்கு மிகவும் நல்லது. உடல் இயக்கத்துக்கு இந்த எண்ணெய் உதவுகிறது.. வாதம், பித்தம், கபம் போன்றவற்றை சரிசமமாக வைக்க நல்லெண்ணெய் உதவுகிறது.. நல்லெண்ணெயில் உள்ள அதிகப்படியான மக்னீசியம், இன்சுலின் சுரப்பை தடுக்கக்கூடியது.. அத்துடன், உடலில் நீரிழிவு வருவதைத் தடுக்கக்கூடியது..

நல்லெண்ணெய்:

லெசித்தின் என்ற பொருளும், லினோலிக் என்ற அமிலமும் இதிலுள்ளதால், ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கெட்ட கொழுப்பை கரைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க செய்கிறது. ஆனால், நல்லெண்ணெயை உணவில் சேர்க்கும்போது, இஞ்சி, பூண்டு, மிளகு ஆகியவற்றை எல்லாம் நிறைய சேர்த்துக்கொண்டால் கூடுதல் நல்லது.

நீரிழிவு நோயாளிகளுக்கு உணவு சமைக்க பயன்படுத்தப்படும் மற்றொரு எண்ணெய் நிலக்கடலை அல்லது கடலை எண்ணெய் ஆகும்… பாலிஅன்சாச்சுரேட்டட் மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்துள்ளதால், கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவுகிறது.. ஆலிவ் எண்ணெய் இன்சுலின் எதிர்ப்பை தடுப்பதுடன், ரத்த சர்க்கரை அளவை சிறப்பாகக் கட்டுப்படுத்துகிறது.. இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது

2 எண்ணெய்:

ஆனால், சர்க்கரை நோயாளிகளுக்கு பனை எண்ணெய் பயன்படுத்துவது நல்லதல்ல என்கிறார்கள்.. சர்க்கரை இன்னும் அதிகமாகிவிடுமாம்.. அந்தவகையில், பாதாம் எண்ணெய், அவகேடோ எண்ணெய் இவர்களுக்கு ஏற்றது. எனினும், நீரிழிவு நோயாளிகள் தங்களது மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று, சமையல் எண்ணெய்யை பயன்டுத்துவது ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும்.

Related Post

தாலிக்கு தங்கம் திட்டத்தின் மூலமாக தங்கத்தை வாரி வழங்கியதுதான் அதிமுக அரசாங்கம் – இபிஎஸ்

Posted by - April 13, 2024 0
தாலிக்கு தங்கம் திட்டத்தின் மூலமாக தங்கத்தை வாரி வழங்கியது தான் அதிமுக அரசாங்கம் என தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக…

குல்லா அணிந்து.. லுங்கியுடன் என்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய்!

Posted by - March 7, 2025 0
சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தலையில் குல்லாவுடன் லுங்கி அணிந்து வந்துள்ளார் விஜய். தவெக சார்பில்…

கடல் கடந்து காதல்- நார்வே பெண்ணை கரம்பிடித்த கடலூர் வாலிபர்

Posted by - June 30, 2023 0
கடலூர்: கடலூர் செம்மண்டலம் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன். பி.எச்.டி. பட்டதாரியான இவர் நார்வே நாட்டில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் பணி புரிந்து வருகிறார். அதே பல்கலைக்கழகத்தில்…

18 தலைமை காவலர்கள் பணியிடமாற்றம்!

Posted by - September 30, 2024 0
சேலம் மாவட்டத்தில் 18 தலைமை காவலர்களை பணியிட மாற்றம் செய்து காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். தீவட்டிபட்டி, ஓமலூர், தாரமங்கலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்கள் மாமூல்…

செடியிலேயே அழுகும் அவலம்; நாள்தோறும் எகிறும் தக்காளி விலை – கிலோ ரூ.130 வரை விற்பதால் மக்கள் அவதி!

Posted by - July 3, 2023 0
சென்னையில் ஒரு கிலோ தக்காளி விலை 130 ரூபாயாக உயர்ந்து விற்கப்பட்டு வரும் நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் கிலோ ஒன்றுக்கு 160 வரை விலை அதிகரித்துள்ளது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *