பிக்பாஸில் விசித்ரா கூறிய விஷயத்தால் தற்போது அவரது வீட்டில் நடந்த சோகமான விஷயம்- நடிகையின் கணவர் ஓபன் டாக்

223 0

#biggboss7 #vijaytv #bb7tamil #pixeltv #pixelmedia #tamilnews

விசித்ரா

பிக்பாஸ் 7வது சீசனில் தற்போது பூகம்பம் டாஸ்க் நடந்து வருவது நமக்கு தெரியும். இந்த டாஸ்க் இடையில் தங்களது சொந்த வாழ்க்கையில் நடந்த மோசமான விஷயம் குறித்து போட்டியாளர்கள் கூறினர்.

அதில் பிக்பாஸ் 7 விசித்ரா பேசும்போது, தான் நடிப்புக்கு வந்த புதிதில் தெலுங்கு படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்த போது நடிகர் ஒருவர் தனது அறைக்கு அழைத்தார்.

அதோடு படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்றும் இதனை இயக்குனரிடம் கூறியபோது அடித்துவிட்டார் என்று கூறியிருந்தார்.

அவர் யாரை கூறினார், எப்போது அந்த சம்பவம் நடந்தது என்பது பற்றி சமூக வலைதளங்களில் நிறைய தகவல் பரவி விட்டது. அப்போது நடிகர் சங்க தலைவராக இருந்த விஜயகாந்த் ஏன் எதையும் தட்டி கேட்கவில்லை என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

நடிகையின் கணவர்

இந்த நிலையில் நடிகை விசித்ராவின் கணவர் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் அவர்,  இந்த சம்பவம் ஒரு கசப்பான அனுபவம், அதை மறக்க வேண்டும் என்று தான் நினைக்கிறோம். அப்படி இருக்கும் போது விசித்ரா ஏன் இதை சொன்னார் என்பது தெரியவில்லை, எனக்கே பார்க்கும் போது அதிர்ச்சியாக இருந்தது.என் பெரிய மகன் இதை பார்த்துவிட்டு கல்லூரிக்கு கூட போகவில்லை, மனமுடைந்து விட்டான், இனிமேல் தான் நான் அவரிடம் இதைப் பற்றி பேசி சமாதானம் செய்ய வேண்டும் என கூறியிருக்கிறார்.

Related Post

டீயுடன் சாப்பிட சூப்பரான பன்னீர் – ஆலு ஸ்டஃப்டு போண்டா

Posted by - March 2, 2023 0
இந்த ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். 15 நிமிடத்தில் இந்த ரெசிபியை செய்து விடலாம். தேவையான பொருட்கள் : கடலை மாவு – 150 கிராம், அரிசி…

பிக் பாஸ் செல்லும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்.. அப்போ சீரியல்? ரசிகர்கள் ஷாக்

Posted by - September 21, 2023 0
விஜய் டிவியில் வரும் அக்டோபர் 1ம் தேதி பிரம்மாண்டமாக பிக் பாஸ் 7ம் சீசன் தொடங்க இருக்கிறது. வழக்கம்போல கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். முன்பு…

இதை பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.. நான் வாய் திறந்தால் சமந்தாவின் மானம் போய்விடும்.. தயாரிப்பாளர் காட்டம்

Posted by - April 27, 2023 0
குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடிப்பில் வெளியான ‘சாகுந்தலம்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தை ரூ.60 கோடி பட்ஜெட்டில் எடுத்து இருந்தனர். ஆனால் இதுவரை ரூ.10…

உடலின் நீர்ச்சத்தை தக்க வைக்க தண்ணீர் மட்டும் போதாது.. இவற்றையும் சேர்த்துக்கொள்ள அறிவுறுத்தும் நிபுணர்..!

Posted by - April 19, 2023 0
தண்ணீருக்கு பல நன்மைகள் இருக்கும்போது, அதிகபட்ச நன்மைக்காக அதை எவ்வாறு உட்கொள்ள வேண்டும்? என்பதை தற்போது நாம் கட்டாயம் அறிந்துக் கொள்ள வேண்டும். கோடைக்காலம் வந்தாச்சு. வெயிலும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *