முதல் இரவில் மணப்பெண் பால் கொண்டு செல்வதும்.. அதை மணமகன் குடிக்க சொல்வதற்கு என்ன காரணம் தெரியுமா..?

304 0

புதுமணப்பெண் கையில் ஒரு கிளாஸ் பால் எடுத்துக் கொண்டு அறைக்குள் நுழைவதையும், அங்கு மணமகனும், மணமகளும் அதை பகிர்ந்து அருந்துவதையும் நாம் தமிழ் திரையுலகின் பெரும்பாலான படங்களில் பார்த்திருப்போம். ஆனால் ஏன் என்று என்றாவது யோசித்ததுண்டா.? காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

ஒவ்வொரு நபரின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான அத்தியாயமாக திருமணம் அமைகிறது. அதிலும் ஹிந்துக்கள் நடத்துகின்ற திருமணங்களில் எண்ணற்ற சம்பிரதாயங்கள் உண்டு. திருமண நிகழ்வின்போது ஹிந்துக்கள் பல்வேறு விதமான மரபுகளையும், பாரம்பரியத்தையும் கடைப்பிடிக்கின்றனர். திருமணத்தின்போது மட்டுமல்ல, புதுமணத் தம்பதிகள் இணை சேருகின்ற முதல் இரவிலும் சடங்குகள் உண்டு.புதுமணப்பெண் கையில் ஒரு கிளாஸ் பால் எடுத்துக் கொண்டு அறைக்குள் நுழைவதையும், அங்கு மணமகனும், மணமகளும் அதை பகிர்ந்து அருந்துவதையும் நாம் தமிழ் திரையுலகின் பெரும்பாலான படங்களில் பார்த்திருப்போம். திருமணமான நபர்களுக்கு இதன் நேரடி அனுபவமும் இருக்கும்.பாலும், குங்குமப்பூவும் : புதுமணத் தம்பதிகள் அருந்தும் பாலில் குங்குமப்பூ சேர்த்து அருந்துவது வழக்கம். இதன் பின்னணியில் மரபு, சம்பிரதாயம் என்பதையெல்லாம் கடந்து ஆரோக்கியப் பலன்களும் கிடைக்கும். அதன் விவரங்களை இந்தச் செய்தியில் பார்க்கலாம்.இனிமையான திருமண வாழ்க்கை : இரு மனங்கள் இணைகின்றன என்பதைக் கடந்து, எண்ணற்ற சம்பிரதாயங்களின் ஊடாக இரு தரப்பு உறவுகளும் சங்கமிக்கின்றன. திருமண வாழ்க்கை இனிமையான பந்தமாக அமைகிறது என்பதற்கு அடையாளமாகவே இனிப்பு, குங்குமப்பூ சேர்த்த பால் வழங்கப்படுகிறது. பாலை பகிர்ந்து கொள்வதன் மூலமாக தம்பதியர்கள் தங்கள் அனுபவங்கள், எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள தயாராகின்றனர் என்று அர்த்தம்.ஏன் பாலும், குங்கம்ப்பூவும் : பால் தூய்மையான உணவுப் பொருளாகவும், புனிதம் மிகுந்ததாகவும் பார்க்கப்படுகிறது. ஹிந்துக்களின் பெரும்பாலான விழாக்கள் மற்றும் சடங்குகளில் பால் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே முதல் இரவிலும் பால் இடம்பெறுகின்றது. குங்குமப்பூ நல்ல மனமும், நிறமும் கொடுக்கும்.காமசூத்ரா : தாம்பத்ய வாழ்க்கை குறித்த குறிப்புகளைக் கொண்ட பாரம்பரிய நூலான காமசூத்ரா நூலில் முதலிரவின்போது பால் அருந்த வேண்டியதன் அவசியம் குறித்து கூறப்பட்டுள்ளது. தேன், சர்க்கரை, மஞ்சள், மிளகுத் தூள், குங்குமப்பூ போன்றவற்றை கலந்து இதனை அருந்தலாம். குங்குமப்பூ சேர்த்து அருந்தினால் பாலியல் வேட்கை மற்றும் பலம் அதிகரிக்கும் என்று காமசூத்ரா குறிப்பிடுகிறது.ஆரோக்கிய பலன்கள் : குங்குமப்பூவில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்ட் சத்துக்கள் நம் எண்ண ஓட்டத்தை மேம்படுத்தும் மற்றும் ஸ்ட்ரெஸ் அளவுகளைக் குறைக்கும். தம்பதியர்களுக்கு வலுவூட்டும்.அன்யோன்யம் அதிகரிக்கும் : மணமகனும், மணமகளும் ஒரே கிளாஸ் பாலை பகிர்ந்து அருந்துகின்றனர். இது அவர்களுக்குள் புரிந்துணர்வு, அன்யோன்யம் போன்றவற்றை அதிகரிக்கிறது. புதிய வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் தொடங்க இது அடிப்படையாக அமைகிறது.மூன்று நாட்களுக்கு : முதலிரவு தொடங்கி 3 நாட்கள் மணமக்களுக்கு இதுபோன்று பால் வழங்கப்படும் கலாச்சாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இது அவர்களுக்குள் காதலை மேலோங்கச் செய்கிறது.

Related Post

ஜீவா சொன்ன வார்த்தை.. வில்லன் மாமனார் ஷாக்! பாண்டியன் ஸ்டோர்ஸ் புது ப்ரோமோ

Posted by - April 5, 2023 0
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது அண்ணன் தம்பிகள் எல்லோரும் பிரிந்து சென்றுவிட்ட நிலையில் அந்த பிரிவை பர்மனென்ட் ஆக மாற்ற ஜீவாவின் வில்லன் மாமனார் பல்வேறு செயல்களை…

முடிவுக்கு வரும் விஜய் டிவியின் ராஜா ராணி 2! கிளைமாக்ஸ் தேதி இதுதான்

Posted by - April 12, 2023 0
ராஜா ராணி 2 விஜய் டிவியின் முக்கிய சீரியலாக இருந்து வருகிறது ராஜா ராணி 2. ஆரம்பத்தில் சித்து மற்றும் ஆல்யா மானசா நடிப்பில் தொடங்கிய இந்த…

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தாச்சு.. டாப் நடிகையால் நொந்து நூடுல்ஸ் ஆன கணவர்

Posted by - January 30, 2023 0
நடிகை சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்து படு ஜோராக வளம் வந்து கொண்டிருக்கிறார். இவருடைய நட்பு வட்டாரம் எல்லாமே மிகப்பெரிய இடம் தான். இந்த சூழ்நிலையில் ரசிகர்கள் மத்தியில்…

நான் அணிந்திருப்பது உலகின் 5-வது பெரிய வைரமா..? அதிர்ச்சியடைந்த தமன்னா

Posted by - July 27, 2023 0
கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தமன்னா. அதன்பின்னர் வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், அயன், பையா, சுறா, சிறுத்தை உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை…

இந்த ஜூஸை குடித்தால் 1 மாதத்தில் தொப்பை குறையும்…

Posted by - March 18, 2023 0
தினமும் வெள்ளரிக்காய் ஜூஸ் குடித்தால் எளிதில் கழிவுகள் வெளியேறும், கொழுப்பும் கரையும். வெள்ளரிக்காய் ஜூஸில் அதிக நார்சத்து உள்ளது. தேவையான பொருட்கள்: வெள்ளரிக்காய் – 1 எலுமிச்சை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *