எதிர்த்தா பேசுறீங்க..! மாநில அரசுகளின் உரிமையை பறித்த மத்திய அரசு – இனி சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு..!

117 0

சிபிஎஸ்இ பள்ளிகளை தொடங்க இனி மாநில அரசுகளின் அனுமதி அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசுகளின் மேலும் ஒரு உரிமையை பறிக்கும் விதமாக சிபிஎஸ்இ அமைப்பின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிபிஎஸ்இ அறிவிப்பு:

வரும் 2026-27 கல்வியாண்டு முதல் இணைப்பு அங்கீகாரம் பெற மாநில அரசிடமிருந்து ஆட்சேபனையில்லாச் சான்றிதழ் (NOC) பெறுவது கட்டாயமில்லை என்று, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், “இனிமேல் வாரியத்துடன் இணைப்பு கோரும் பள்ளிகள் 2026-27 கல்வியாண்டு முதல் SARAS போர்ட்டலில் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆட்சேபனையில்லாச் சான்றிதழுடன் அல்லது இல்லாமல் விண்ணப்பிக்க அனுமதிக்கப்படும்” என்று CBSE செயலாளர் ஹிமான்ஷு குப்தா வெளியிட்டுள்ள, இணைப்பு துணை விதிகள் 2018 இல் செய்யப்பட்ட திருத்தங்கள் குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறிக்கப்பட்ட மாநில அரசின் உரிமை:

சிபிஎஸ்இ சார்பில் வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு, மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் மத்திய அரசின் மற்றொரு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. எமர்ஜென்சியின் போது பொது பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்ட கல்வியை, மாநில அரசு பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும் என, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால், புதிய தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக்கொள்கை போன்ற அடுத்தடுத்த திட்டங்களால், மாநில அரசுகளிடம் உள்ள ஒரு சில அதிகாரத்தையும் மொத்தமாக பறிக்கும் விதமாக மத்திய அரசின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

இதையும் படியுங்கள்: RBI Foreclosure: ஆர்பிஐ-யின் புதிய அதிரடி..! இனி கடன்களை முன்கூட்டியே செலுத்தினால் அபராதம் இல்லை – யாருக்கு பலன்?

முற்றும் மத்திய – தமிழக அரசு மோதல்:

சிபிஎஸ்இ நிர்வாகத்தின் முடிவு மத்திய அரசுக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே மற்றொரு மோதல் புள்ளியாக மாறக்கூடும். காரணம் இது மாநில அரசின் எதிர்ப்பையும் மீறி CBSE பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை பயிற்றுவிக்க வழிவகுக்கும் என கூறப்படுகிறது. புதிய கல்விக்கொள்கை மூலம், இந்திய திணிக்க முயற்சிப்பதாக மத்திய அரசு மீது, திமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், எந்தவொரு மொழியையும் நாங்கள் திணிக்கவில்லை எனவும், மத்திய அரசு திட்டங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் நிதி வழங்கமுடியாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இதனால், திமுக மற்றும் பாஜக இடையே கடும் கருத்து மோதல் நிலவி வருகிறது.

இத்தகைய நிலையில் தான், சிபிஎஸ்இ பள்ளிகளை தொடங்க இனி மாநில அரசுகளின் தடையில்லா சான்றிதழ் அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், மாநிலத்தில் இயங்கும் சிபிஎஸ்இ பள்ளிகளில் புதிய கல்விக்கொள்கை மூலம், மாணவர்கள் மூன்று மொழி கற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு எதிர்க்கட்சிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

Related Post

திரும்பும் திசையெல்லாம் அழுகுரல் – வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நிதியுதவி..!!

Posted by - August 2, 2024 0
கேரள மாநிலம் வயநாடு அருகே ஏற்பட்ட கோரமான நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் அப்பகுதியில் உள்ள மக்களின் நிவாரண பணிக்காக பிரபல…

லிவ்-இன் பார்ட்னர் கற்பழிப்பு புகார்: மேக்-அப் கலைஞரை கொலை செய்து மனைவி உதவியுடன் உடலை ஓடையில் வீசிய நபர்

Posted by - September 13, 2023 0
திருமணமான நபருடன் வாழ்ந்து வந்த மேக்அப் கலைஞர், லிவ்-இன் வாழ்க்கை கசந்ததால் கற்பழிப்பு புகார் அளித்து, அதை திரும்பப்பெற மறுத்ததால் கொலை செய்யப்பட்டு, உடல் ஓடையில் வீசப்பட்ட…

வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி- வானிலை ஆய்வு மையம்

Posted by - July 25, 2023 0
டெல்லி, இமாசலபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பலத்த மழை கொட்டியதால் பல நகரங்களை வெள்ளம் சூழ்ந்தது. யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதேபோல், மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு…

ஆந்திராவில் தக்காளி கிலோ ரூ.200-க்கு விற்பனை: சென்னையிலும் விலை உயர வாய்ப்பு

Posted by - July 29, 2023 0
திருப்பதி: ஆந்திராவில் அதிகளவில் தக்காளி உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கிருந்து முதல் ரக தக்காளிகள் வடமாநிலங்கள் மற்றும் சென்னை, பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு அனுப்பி…

இந்திய அளவில் “X” தளத்தில் டிரெண்டிங்: #TeachersProtest

Posted by - January 2, 2026 0
“சம வேலைக்கு சம ஊதியம்” – 8 நாட்களாக சென்னை போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள்** சென்னை:தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், “சம வேலைக்கு சம…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *