எதிர்த்தா பேசுறீங்க..! மாநில அரசுகளின் உரிமையை பறித்த மத்திய அரசு – இனி சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு..!

142 0

சிபிஎஸ்இ பள்ளிகளை தொடங்க இனி மாநில அரசுகளின் அனுமதி அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசுகளின் மேலும் ஒரு உரிமையை பறிக்கும் விதமாக சிபிஎஸ்இ அமைப்பின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிபிஎஸ்இ அறிவிப்பு:

வரும் 2026-27 கல்வியாண்டு முதல் இணைப்பு அங்கீகாரம் பெற மாநில அரசிடமிருந்து ஆட்சேபனையில்லாச் சான்றிதழ் (NOC) பெறுவது கட்டாயமில்லை என்று, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், “இனிமேல் வாரியத்துடன் இணைப்பு கோரும் பள்ளிகள் 2026-27 கல்வியாண்டு முதல் SARAS போர்ட்டலில் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆட்சேபனையில்லாச் சான்றிதழுடன் அல்லது இல்லாமல் விண்ணப்பிக்க அனுமதிக்கப்படும்” என்று CBSE செயலாளர் ஹிமான்ஷு குப்தா வெளியிட்டுள்ள, இணைப்பு துணை விதிகள் 2018 இல் செய்யப்பட்ட திருத்தங்கள் குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறிக்கப்பட்ட மாநில அரசின் உரிமை:

சிபிஎஸ்இ சார்பில் வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு, மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் மத்திய அரசின் மற்றொரு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. எமர்ஜென்சியின் போது பொது பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்ட கல்வியை, மாநில அரசு பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும் என, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால், புதிய தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக்கொள்கை போன்ற அடுத்தடுத்த திட்டங்களால், மாநில அரசுகளிடம் உள்ள ஒரு சில அதிகாரத்தையும் மொத்தமாக பறிக்கும் விதமாக மத்திய அரசின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

இதையும் படியுங்கள்: RBI Foreclosure: ஆர்பிஐ-யின் புதிய அதிரடி..! இனி கடன்களை முன்கூட்டியே செலுத்தினால் அபராதம் இல்லை – யாருக்கு பலன்?

முற்றும் மத்திய – தமிழக அரசு மோதல்:

சிபிஎஸ்இ நிர்வாகத்தின் முடிவு மத்திய அரசுக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே மற்றொரு மோதல் புள்ளியாக மாறக்கூடும். காரணம் இது மாநில அரசின் எதிர்ப்பையும் மீறி CBSE பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை பயிற்றுவிக்க வழிவகுக்கும் என கூறப்படுகிறது. புதிய கல்விக்கொள்கை மூலம், இந்திய திணிக்க முயற்சிப்பதாக மத்திய அரசு மீது, திமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், எந்தவொரு மொழியையும் நாங்கள் திணிக்கவில்லை எனவும், மத்திய அரசு திட்டங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் நிதி வழங்கமுடியாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இதனால், திமுக மற்றும் பாஜக இடையே கடும் கருத்து மோதல் நிலவி வருகிறது.

இத்தகைய நிலையில் தான், சிபிஎஸ்இ பள்ளிகளை தொடங்க இனி மாநில அரசுகளின் தடையில்லா சான்றிதழ் அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், மாநிலத்தில் இயங்கும் சிபிஎஸ்இ பள்ளிகளில் புதிய கல்விக்கொள்கை மூலம், மாணவர்கள் மூன்று மொழி கற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு எதிர்க்கட்சிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

Related Post

முதல் நாளே ஹிட் அடித்த பிரீமியர் எனர்ஜிஸ் ஐபிஓ…. ரூ.450 முதலீடு செய்திருந்தால் ரூ.990 கிடைத்திருக்கும்… ஒரே நாளில் 120% லாபம்..

Posted by - September 4, 2024 0
பிரீமியர் எனர்ஜிஸ் நிறுவனத்தின் ஐபிஓ பங்குகள்  பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டன. முதல் நாள் பங்கின் விலை 120 சதவிகிதம் பிரீமியம் விலையில் வர்த்தகத்தை தொடங்கியது. அதாவது ரூ.450க்கு வாங்கிய…

புதிய ஜிஎஸ்டி வரியால் புது வீடு கட்டுவது சுலபம்.. சிமெண்ட் முதல் மார்பில் வரை! மொத்தமாக குறையும் விலை

Posted by - September 4, 2025 0
சிமெண்ட் மீதான ஜிஎஸ்டி வரியை 28% சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது வீடு வாங்குபவர்கள் மற்றும் வீட்டை கட்டுபவர்களுக்கு செலவினங்களை குறைக்கும் என்று கூறப்படுகிறது…

வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் – 25 முறை மகளைக் கத்தியால் குத்திக் கொன்ற தந்தை

Posted by - June 1, 2023 0
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தின் சூரத்தில் வசித்து வருபவர் ராமானுஜ சாஹு. இவர் தனது குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 18-ம் தேதி இரவு…

குளிர்பானத்தில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலனைக் கொன்ற காதலி…!!

Posted by - April 17, 2023 0
குளிர்பானத்தில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலியே காதலனைக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள மஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர்  சஞ்சீவ் குமார்…

எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி.. “ஏழைகளின் நலனே முக்கியம்.. கருணையுள்ள அரசு”

Posted by - June 5, 2025 0
ஏழைகள் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கருணையுடன் கூடிய மத்திய அரசு, கடந்த பத்தாண்டுகளில், வறுமையின் பிடியிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு பல்வேறு முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது என பிரதமர் மோடி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *